PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022



பாலகன்  என்றுணர்வோர்க்கு
தாய் என மாறிடுவான் 
சேய் எமைக்காப்பது 
தாய் உந்தன் கடன் அன்றோ 
வாய் நிறைய சரணம் சரணம்  என அழைக்க 
கண் முன்னே வந்திடுவான்
தூயவன் அவன் புகழ் பாடு 
தூர ஓடிடும் துயரங்கள் மனக் 
காயங்கள் ஆற்றிடுவான் 
காமங்கள் போக்கிடுவான் 
வாழ்க்கைக்கு உதவாத 
பழக்கங்கள் அகற்றிடுவான்
குருவின் குருவாகி நின்றெம்மை 
கரு போலக் காத்திடுவான் 
கதி நீயே ஐயனே 
விதி மாற்றும் வள்ளலே
புவி மீது நாம் வாழ 
கூடும் இடர் தம்மை சபரி  
பதி வாழும் சித்தனே 
விரைவாகக் களைந்திடுவாய்

MALA DHARNA FUNCTION AT MUMBAI AND CHENNAI ON 30-10-2016 WITH THE BLESSINGS OF GS......





























குருவின் அருளால்
மாலை அணிந்தேன்
கை இருப்பினில்
இருப்பது நின்னருளே 
நெஞ்சக் கருவினில் 
திளைத்த ஆருயிரே
மெய் உருகி நின்னருள்
நினைத்து நின்றேன்
வாய் மூடி மௌனித்து
ஊமை ஆனேன்
குருவின் பூஜையில்
உன் பேரழகு 
கண்டு பிரம்மித்தேன்
குருவின் பேச்சினால்
தேய்ந்தன கவலைகள்
உன் முழு 
நிலவெனும் முகவழகால்
பாய்ந்தன கண்ணீர் 
அருவி போல
தீர்ந்தன என் ஆசையெல்லாம்
தீராத மெய்யருள் தந்ததனால்
ஆறாத நோய்களெல்லாம்
ஆறக் கண்டேன்
கசந்த வேப்பிலை
இனிக்கக் கண்டேன்
இகழ்ந்தோர் எல்லோரும் 
போற்றக் கண்டேன்
உதிர்ந்த பூக்கள்
மாலையாகுதம்மா
புதிர்களெல்லாம் விடை காணுதம்மா
உயர் சீலன் பாலகன்
எமைத் தேடி வந்த நேரமம்மா







MALA DHARNA DAY///CHENNAI AND MUMBAI TODAY...SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM

தீப ஓளியேற்றி 
பாவம் தனைக் களைந்தாய்
தீய உள்ளமதை
தூயதாய் ஆக்கினாய்
தீபத்தின் மறுநாள் 
தீயதை போக்கும் நாள் 
குருவின் ஆசியுடன் 
மாலை அணியும் நாள்
காயங்கள் ஆற்றி
நேயங்கள் வளர்த்தாய் -நீ
மாலை அணிந்த எங்கள் 
பாவங்கள் பொசுங்கவே
சாற்றியது வாய் 
ஐயப்பா ஐயப்பாயென
காற்றிலே கலந்த
சரண கோஷங்கள் 
சென்னையிலும் மும்பையிலும் 
சேர்ந்து ஒலித்துடுமே 
பாலகன் மகிமைதனை
போற்றிய உள்ளங்களை

அருளிக்கும்  குருவினை 
உளமார சேவித்தோம்
நீரினில் ஏற்றிய 
தீபம் ஒளிர்ந்ததுன் அருளாலே
பாரில் ஓங்கியது உனதருள் 
உன் லீலைகளாலே
மாற்றியமைப்பாய் எம் தலைவிதி தன்னை
போற்றி ந்துகிறேன் உன் 
பொன்னடி தனையே
பன்வேல் குடியிருக்கும்
பரம தயாளனே.... 










SWAMIYE SARANAM IYYAPPA....GURUVE SARANAM SARANAM....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A DIVINE FRIDAY & A BLESSED " PRADOSHAM " TOO .. MAY LORD SHIVA RELIEVE YOU FROM SINS & FULFILL ALL YOUR DESIRES & ILLUMINATE YOUR LIFE WITH LOVE & HAPPINESS .. " OM NAMASHIVAAYA " JAI BHOLE NATH

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையும் .. துன்பங்களைப்போக்கி இன்பங்களை நல்கும் பிரதோஷ விரதமுமாகிய இன்று ஈசனைப் பிரார்த்தித்து தங்களனைவரது அனைத்து தோஷங்களும் நீங்கி .. சுபீட்சமான வாழ்வு மலர்ந்திட எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவாராக .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! 

சிவபெருமானை நாம் நாள்தோறும் வணங்குகிறோம் .. ஆனாலும் பிரதோஷகாலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வழிபடுவது சிறந்தபயனை அளிக்கும் .. வெள்ளிக்கிழமையில் வரும் பிரதோஷம் சுக்கிரப் பிரதோஷமாகும் .. சுக்கிரன் சுகமளிக்கும் கடவுள் .. போககாரகன் .. வெள்ளியன்று பிரதோஷ வழிபாடு செய்வதால் வாழ்வில் தீமைகள் குறைந்து நன்மைகள் பெருகும் .. 

பிரதோஷம் என்றால் என்ன .. ? .. சிவபெருமான் ஆலகாலவிஷத்தை அருந்தி நீலகண்டனானது இந்தப் பிரதோஷ நேரத்தில் தான் .. தேவர்களும் ..அசுரர்களும் போட்டிபோட்டுக்கொண்டு பாற்கடலைக்கடைந்தபோது திருமகள் .. ஐராவதம் .. காமதேனு .. கற்பகதரு .. சிந்தாமணி .. கௌலஸ்துபமணி .. முதலியவை ஒவ்வொன்றாகத் தோன்றின .. லக்ஷ்மியைத் திருமால் ஏற்றுக்கொண்டார் .. மற்ற பொருட்களை இந்திராதி தேவர்கள் ஏற்றுக்கொண்டனர் .. 

ஆனால் கூடவே கொடிய ஆலகாலவிஷமும் வெளிப்பட்டது .. இதைக்கண்ட தேவர்களும் .. முனிவர்களும் பெரிதும் நடுங்கினர் .. உயிர்களைக் காப்பாற்ற பரமசிவன் அந்த ஆலகாலவிஷத்தை உண்டார்
தன் கணவரின் உடலில் விஷம் பரவுவதைக்கண்ட பார்வதிதேவி தன்கரங்களால் தடுக்க விஷம் சிவனின் நெஞ்சுக்குழியிலேயே நின்றுவிட்டதால் இறைவன் நீலகண்டனானார் .. இந்தநேரம்தான் பிரதோஷகாலம் என்று வணங்கப்படுகிறது .. 

இந்நேரத்தில் ( மாலை 4.30 - 6.00 மணிவரை ) சிவாலயங்களில் சிறப்புவழிபாடுகள் நடைபெறுகிறது இறைவனுடன் கூடவே அவருடைய வாகனமான நந்தீஸ்வரருக்கும் அபிஷேகம் நடைபெறும் .. மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாரதனையை நந்திதேவரின் இரண்டு கொம்புகளுக்கு ஊடாக கண்டுதரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மையுண்டாகும் .. 

“ நமசிவாய “ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடி பிரதோஷகாலத்தில் ஈசனைப் பிறையணிந்த பெருமானாக தேவியோடும் முருகனோடும் .. சோமஸ்கந்தமூர்த்தியாகத் தரிசித்து வழிபடுவது பெரும் புண்ணியமாகும் ..

சிவனைப் போற்றுவோம் ! சகலநலன்களையும் பெறுவோமாக ! ஓம் நமசிவாய ! வாழ்க வளமுடனும் ! என்றும் நலமுடனும் !



பா எழுதிப் பண்ணமைக்க
ஆவல் கொண்டு எமை
காரணியாக்கி காரணம் நீயாகி
இறப்பில் ஒரு உயிர்ப்பெழுத
இசைவு கொண்டனை
நீ எழுதும் நாடகத்தில் இந்த
ஏழைக்கொரு பாத்திரம்
ஊர்முழுக்க தேடியே 
உன்னைச் சரணடைந்தேன் 



திசை தப்பி இருந்த போது
சரியான திசை காட்ட
குருவினை என் கண் முன்காட்டி
அவர் கை காட்டி வழி நடக்க
புரிந்தவன் நீ
தேர் இழுக்க முனைந்து
தேரடியே எனதிருப்பாக
காவடிகள் ஆடுகின்றேன்
காவல் நீயென
பேர் எதற்கு புகழ் எதற்கு
பார் போற்றும் ஐயனே
பன்வேல் பாலகனே



வேருக்கே பெருமை
பூத்தலும் காய்த்தலும்
உன் தயவாக
ஊற்றுக்கள் எல்லாம் 
அருள்ச் சுனைகளாக
வேற்றுமைகள் இல்லை
உன் அடியவரிடை
தரிசனம் தந்தாய்





மும்பையிலும் சென்னையிலும்
பல விதமாக
உன்னருள் பெற்றவர்கள்
உனையறிந்து கொள்ள
குருவின் அர்ச்சனையில்
அருள் பூக்கும் பூக்களாய்
உனதாலயம் சபரி  உலகமெங்கும் -மன
இருள் விலக்கி நிற்குதே
மன்னுயிர் காத்து
சுவாமியே சரணம் ஐயப்பா