PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

Swamy saranam....guruve saranam...pooja at ankleswar 31/3/22

 


*"குடிமல்லம்" - 2300 ஆண்டுகள் பழமையான "லிங்க" கோயில்.*
எத்தனையோ முறை திருப்பதி சென்றுள்ளோம் . இந்த முறை சென்றால் தயவுசெய்து இக்கோவில் தரிசனத்தை மட்டும் தவறவிடாதீர்கள் உலகப் பழம்பெறும் சிவலிங்கத்தை தரிசனம் செய்த புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் கர்மவினை முற்றிலும் நீங்கக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். இதை தரிசனம் செய்த பல மனிதர்கள் வாழ்க்கையில் அத்தனை ஆனந்த திருப்பங்களும் வாழ்வில் பிறந்த பயனையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதியில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ள "குடிமல்லம்" எனும் கிராமத்தில் உள்ள "பரசு ராமேஸ்வர" ஆலயத்தில் கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த லிங்க வடிவம் காணப்படுகிறது. இக்கோயிலில் உள்ள செங்கல் கிபி ஒன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறியப்பட்டுள்ளது. பல்லவர், பாணர், சோழர் கால கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் பழமையானது நந்திவர்மன் காலத்து கல்வெட்டு.
லிங்கம் 5 அடி உயரம். தடிமன் 1 அடி. லிங்கத்தின் தண்டு பகுதி 4 அடி. நுனியில் உள்ள மொட்டு 1 அடி. தண்டுப் பகுதியில் ஓர் வேடன் உருவம் வலது கையில் ஆட்டை தொங்கவிட்டும், மறு கையில் சிறு பாத்திரமும், தோளில் வேட்டை கோடரி (பரசு) யும் வைத்துள்ளவாறு செதுக்கப்பட்டுள்ளது. மார்பில் பூணூல் இல்லை. ஜடாமுடி தரித்துள்ளது. லிங்கத்தின் கீழ் யோனி பீடம் (ஆவுடை) காணப்படவில்லை.
எனவே அக்காலத்தில் சிந்து சமவெளி நாகரீகத்தில் இருந்தது போல தமிழ்நாட்டிலும் (இந்தியாவின் பிற பகுதிகளிலும்) " இக்கோவில் கலை காணப்படுகிறது.
பழமையான சிவலிங்கம்.
இந்த குடிமல்லம் சிவன் கோயில் ASI (Archaeological Survey of India) -ன் கட்டுப்பாட்டில் உள்ளது.
ஆன்மீகத்தில் முன்னேற விரும்பும் ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் காண வேண்டிய சிவ ஸ்தலம்.
உண்மை மிகவும் சாதாரணமாக இருக்கும் என்பதற்கு இந்த ஊர் சிவலிங்கம் ஒரு உதாரணம். மக்கள் யாரும் இந்த ஊருக்கு வருவதில்லை. நன்கு விஷயம் அறிந்தவர்கள் மட்டுமே இந்த ஊர் கோயிலில் உள்ள சிவலிங்கத்தை காண வருகின்றனர். உண்மை ஆன்மீகத்திற்கான திறவுகோல் இந்த சிவ லிங்கம். உண்மையில் தேடுபவர்களுக்கு மட்டுமே உண்மைப் பொருள் விளங்கும். ஆன்மீக முன்னேற்றம் பெற விரும்பும் ஒவ்வொருவரும் வாழ்கையில் ஒரு முறையாவது அந்த சிவலிங்கத்தை நேரில் சென்று தரிசனம் செய்ய தவறாதீர்கள்.

*ஓம் சர்வம் சிவார்ப்பணம்.🙏*

Swamy saranam. guruve saranam. Pooja today 28/3/22

 


புக்கத்துறை திருத்தலத்தில் அருள் புரியும் ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ புண்டரிகவரதராஜ பெருமாள் திருக்கோயிலாகும். காஞ்சி தலத்தில் ப்ரம்ம தேவர் நடத்திய யாகத்தில் அக்னி ஜிவாலையில் காட்சி கொடுத்து அவிர்பாகம் ஏற்று அருளினார்.
கருவறையில் கிழக்கு நோக்கி, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக காட்சி கொடுக்கிறார் ஸ்ரீ புண்டரீக வரதராஜர். ஸ்ரீ பெருந்தேவித்தாயார் தனி சன்னதியில் கோயில் கொண்டு அருள் புரிகிறார். நவராத்திரி விழாவின்போது தாயாரை வழிபடுவதால், அஷ்ட ஐஸ்வர்யங்களும் சித்திக்கும் என்பது ஆன்றோர் வாக்காகும். ஸ்ரீ ஆண்டாள் இங்கு தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார்.
ஸ்ரீ ஆண்டாள் சன்னதியில் உள்ள தூணில் புடைப்பு சிற்பமாக விளங்கும் ஆஞ்சநேயர் மிகவும் வரப்பிரசாதி.


Swamy saranam...guruve saranam....today pooja at ankleswar 27/3/22

 


#Erukkattampuliyur – Neelakandeswarar Temple
Rajendrapattinam is also called Erukathampuliyur. It is located between Virudhachalam and Kumbanonam.
This is one of the prominent Shiva temples known as Pancha Puliyur Shivasthalam. In this temple Lord Shiva worshipped in the form of a Linga.
Pancha Puliyur Shivasthalams are Thiruppathiri Puliyur, Perumpattrapuliyur (Chidambaram), Thiru Perumpuliyur, Omapuliyur and Erukkathampuliyur.
This is one of the oldest temples of Lord Shiva built during the regime of Chozha dynasty, King Rajaraja Chozha and his son Rajendra Chozha have made abundance of contributions to this temple.
#பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில் | Pralayakaleswarar Temple
அதிசயத்தின் அடிப்படையில்
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். வெள்ளத்திலிருந்து பூமியை காப்பதற்காக அன்று திசை திரும்பிய நந்தி இன்றும் வாசலை நோக்கி திரும்பியே இருக்கிறது. கருவறையைச் சுற்றிலும் மூன்று பலகணிகள் அமைக்கப்பட்டுள்ளதால், மூலவரை மூலஸ்தானத்திற்கு வெளியே எந்த திசையில் நின்றாலும் வணங்கும் சிறப்பு பெற்றது.


Balagar at Ankleswar Gujarat Blessings GS

 

அருள்மிகு நர்த்தன வல்லபேஸ்வரர் திருக்கோயில், #திருக்கூடலையாற்றூர்
தேவார பாடல் பெற்ற தொண்டை நாட்டு ஆலயங்களில் 3 வது ஆலயம். பிரம்மாவும் சரஸ்வதியும் தவம் செய்து சிவபெருமானின் . நடனகாட்சியை கண்டனர். ஆகையால் இறைவன் நர்த்தனவல்லபேஸ்வரர் என்றும் அழைக்கபடுகிறார். கும்பகோணத்தை அடுத்த திருப்புறம்பயத்தில் இருந்து சுந்தரமுர்த்தி நாயனார் விருத்தாசலம் செல்லும் வழியில், இங்குதான் சிவபெருமான் ஒரு அந்தணர் வடிவில் நின்றதை பார்த்தார் . அவரை விருத்தாசலம் செல்ல வழி வினவ அவர் திருகூடலையாற்றூர் வழியாகத்தான் செல்லவேண்டும் என்று வழி காட்டிக்கொண்டே வந்து கோயில் வந்தவுடன் மறைந்து விட்டார். சுந்தரரும் இறைவனின் திருவிளையாட்டை அறிந்து இங்கே தங்கி பதிகம் பாடி பின்பு விருத்தாசலம் சென்றார்.
இங்கு மணிமுத்தாறு வெள்ளாறு ஆகிய நதிகள் இங்கு கூடுவதால் கூடலையாற்றூர் என்று பெயர் வந்தது. இங்கு எமதர்மராஜாவின் உதவியாளர் சித்திரகுப்தருக்கு தனி சன்னதி உள்ளது. சுயம்பு லிங்கமாக இங்கு அருள் புரியும் சிவலிங்கத்தின் மேல் சித்திரை மாதம் முதல் மூன்று நாட்கள் சூரிய ஒளி பட்டு சூரிய பூஜை நடைபெறுகிறது. இங்கு நவகிரங்களுக்கு தனி சன்னதி இல்லை. சனீஸ்வரர் மட்டும் பொங்கு சனிஸ்வரராக அருள் புரிகிறார்.
ஞானசக்திக்கும் பாரசக்திக்கும் தனி தனி சன்னதி உள்ளது. பிரம்மாவும் சரஸ்வதியும் தவம் செய்ததால் இங்கு குழந்தைகள் வழிபட்டால் மறதி நீங்கி நல்ல படியாக படிக்கலாம்.

Sri Bhu Varaha Swamy Temple Srimushnam