PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A DIVINE WEDNESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. MAY HE GUIDE YOU AND PROTECT YOU FROM ALL THE EVIL FORCES AND SHOWER YOU WITH HAPPINESS .. " OM NAMO NAARAAYANAAYA "

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
ஈரேழு உலகங்களையும் .. சகல உயிர்களையும் காக்கும் கடவுள் என்ற சிறப்பு பெற்ற ஸ்ரீமன்நாராயணனைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றையநாள் ஓர் பொன்னாளாக மிளிரவும் .. நல்லாரோக்கியமும் .. அனைத்து தடைகளையும் கடந்து வெற்றிகரமாக அமைந்திடவும் பகவானைப் பிரார்த்திக்கிறேன் .. 

ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

தசாவதாரமானது விஷ்ணுபகவானின் பத்து அவதாரங்களைக் குறிப்பதாகும் .. இறைவன் பூமியில் பிறப்பெடுப்பதை அவதாரம் என்கின்றோம் .. வைணவ சமயத்தின் முழுபெரும் கடவுளான பெருமாள் உலகில் அதர்மம் ஓங்குகின்றபோது பக்தர்களை காக்கவும் தர்மத்தினை நிலைநாட்டவும் .. அரக்கர்களை அழிக்கவும் அவதாரம் எடுப்பதாக வைணவர்கள் நம்புகின்றனர் .. அவ்வாறு பெருமாள் எடுத்த அவதாரங்களில் பத்து அவதாரங்கள் தச அவதாரங்கள் என்று வழங்கப்படுகின்றன ..

தசம் என்றால் பத்து என்று பொருள் .. விஷ்ணுவின் பத்து அவதாரங்களாக கூறப்படுபவை பின்வருவன ..

1- மச்ச அவதாரம் - திருமாலின் முதல் அவதாரமாகும் .. மச்சம் என்ற சமஸ்கிருத சொல் தமிழ் மொழியில் மீன் எனப்பொருள் தரும் .. இந்த அவதாரத்தில் திருமால் நான்கு கைகளுடன் மேற்பாகம் தேவரூபமாகவும் கீழ்பாகம் மீனின் உருவாகவும் கொண்டவராகத் தோன்றினார் என்று மச்சபுராணம் கூறுகிறது .. 

2 - கூர்ம அவதாரம் - வைணவசமய நம்பிக்கயின்படி 
திருமால் எடுத்த இரண்டாம் அவதாரம் ஆகும் .. இதில் இவர் ஆமை அவதாரம் எடுத்தார் .. இது சத்தியயுகத்தில் நடந்ததென்பது ஐதீகம் .. திருப்பாற்கடலை அசுரரும் தேவர்களும் மந்திரமேருவை மத்தாகவைத்துக் கடைகைகயில் அடியில் பிடிமானத்திற்காகத் திருமால் ஆமை உருகொண்டு மத்திற்குப்பிடிமானமாக இருந்தார் .. 
(பாகவதம் - கூர்மபுராணம் ) 

3 - வராக அவதாரம் - விஷ்ணுவின் மூன்றாம் அவதாரம் ஆகும் .. இதில் இவர் பன்றி அவதாரம் எடுத்தார் .. பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற ஹிரண்யாக்ஷ்ன் என்ற அசுரனுடன் வராக அவதாரத்தில் விஷ்ணு பல ஆண்டுகள் போர் செய்து வென்றார் என்பது ஐதீகம் .. 

4 - நரசிம்ஹ அவதாரம் - விஷ்ணுவின் நான்காம் அவதாரம் ஆகும் .. இதில் இவர் சிங்கத்தின் தலையையும் 
மனித உடலையும் கொண்ட நர - சிம்ம அவதாரம் எடுத்தார் .. நரசிம்மரின் உருவம் சிங்கமுகத்துடன் நகங்களோடும் .. மனித உடம்போடும் தோற்றமளிக்கிறது 
பலவைஷ்ணவர்கள் நரசிம்மரை முதன்மைக் கடவுளாக வழிபடுகின்றனர் .. தனது பக்தர்களைத் தக்கதருணத்தில் வந்து காக்கும் கடவுளாக இவர் கருதப்படுகிறார் .. தன்பரம
பக்தனான பிரகலாதனை இரட்சித்து இரணியன் என்ற கொடிய அரக்கனை வதம் செய்ய எடுத்த அவதாரமே நரசிமம் என்பது ஐதீகம் .. 

5 - வாமண அவதாரம் - காசிபன் .. அதிதி ஆகியோருக்கு வாமன உருவில் பிறந்து மாபலிச்சக்கரவர்த்தியை யாசித்து தானம் கேட்டு திருமால் வதைசெய்வது வாமன அவதாரம் 

6 - பரசுராம அவதாரம் - ஜமத்கினி முனிவருக்கும் ரேணுகைக்கும் மகனாகப்பிறந்து பிராமணர்களைக் காக்க மறுத்த க்ஷ்த்ரிய குலத்தைப் பூண்டோட அழிக்க முற்பட்ட
அவதாரம் இது .. பரசு என்றால் - கோடாலியாகும் .. இவர் கடுந்தவம் செய்து சிவபெருமானிடம் இருந்து ஒருகோடாலியைப்பெற்றார் .. அதனால் இவர் பரசு - ராமர்
என்று அழைக்கப்படுகிறார் .. கடல் கொந்தளித்தபோது அதனை அடக்கி கொங்கணக் கடற்கரையைப் பகுதிகளைக் காத்தார் என்பது நம்பிக்கை .. 

7 - ராம அவதாரம் - 
8 - பலராம அவதாரம் -கிருஷ்ணரின் அண்ணனாவார் ..
இவர் பலதேவர் .. பலபத்ரர் .. ஹலாயுதர் .. என்றும் அழைக்கப்படுகிறார் .. வைணவத்திலும் .. தென்னிந்திய இந்து புராணங்களிலும் பலராமர் விஷ்ணுவின் அவதாரமாகவே கருதப்படுகிறார் .. எனினும் இவர் விஷ்ணுபடுத்திருக்கும் ஆதிசேஷனின் வடிவம் என்பதும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது .. இவர் வசுதேவருக்கும் தேவகிக்கும் மகனாகப் பிறந்ததாகக் கூறப்படுகிறது .. 

9 - கிருஷ்ண அவதாரம் .. 
10 - கல்கி அவதாரம் இந்துசமயத்தின் கூற்றுப்படி விஷ்ணுபகவானின் பத்தாவதும் இறுதியுமான மஹா அவதாரமாகும் .. கல்கிபகவான் கலியுகத்தில் தோன்றி அனைத்து தீயவைகளையும் அழிப்பாராவார் என்பது ஒருகூற்று .. கல்கி என்பதன் பொருள் .. காலம் .. அல்லது முடிவிலி ஆகும் .. 

விஷ்ணுபகவானைப் போற்றுவோம் ! அவரது அருட்கடாக்ஷ்த்தையும் பெறுவோமாக ! 
“ ஓம் நமோ நாராயணாய “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
கேரள மாநிலம் எர்ணா குளத்தில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளசோட்டானிக்கரையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ பகவதி அம்மன் திருவடிகளே சரணம்... !!!

குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவுக்கு பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இந்த கோவில் போற்றப்படுகிறது. கேரளாவின் பகவதி வழிபாடு நடைபெறும் கோவில்களில் இந்த கோவிலுக்கும் முக்கிய பங்கு உள்ளது. 

இந்த கோவிலில் மிகவும் சிறப்பு அம்சமாக ஒரே நாளில் 3 வித ரூபங்களில் பகவதி அம்மன் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறார். காலையில் அறிவாற்றலை வளர்க்கும் அன்னை சரஸ்வதி ரூபத்தில் வெண்ணிற ஆடையிலும், நண்பகலில் சவுபாக்கியம் அருளும் அன்னை மகாலட்சுமி ரூபத்தில் ஆழ்சிவப்பு வண்ண உடையிலும், மாலையில் வீரத்தை வளர்க்கும் அன்னை துர்க்கையாக கரும் நீலவண்ண உடையிலும் சோட்டானிக்கரை பகவதி அம்மன் அருள் பாலிக்கிறார்.

SWAMIYE SARANAM IYYAPPA....GURUVE SARANAM SARANAM....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY AND A DIVINE SIVARATRI TOO .. MAY ALMIGHTY LORD SHIVA BLESS YOU & SHOWER YOU WITH GOOD HEALTH .. STRENGTH AND HAPPINESS .. " OM NAMASHIVAAYA " JAI BHOLE NATH ..

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று மாதசிவராத்திரியும் .. மாலையில் சதுர்த்தசித் திதியும் கூடிவருவதால் எல்லாம் வல்ல சிவபெருமானை வழிபடுவது சிறப்பு .. தங்களனைவருக்கும் இன்றையநாள் ஓர் சுபீட்சமிக்க நன்னாளாக அமைந்திடவும் .. நல்லாரோக்கியமும் .. வாழ்வில் நிம்மதியும் பெற்றிடவும் சிவபெருமானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! 

சிவபெருமானுக்குரிய விரதங்களிலேயே தலைசிறந்தது சிவராத்திரி விரதமே ! 
” எட்டுணையும் உளத்து .. அன்பிலரேனும் .. உளரேனும் .. இந்நாள் எம்மைக்கண்டவர் .. நோற்றவர் .. பூசிபண்ணினர்
நற்கதி அடைவர் .. “ 

எள்ளளவும் அன்பு இல்லாதவர்கள் ஆனாலும்சரி .. அன்பு உள்ளவர்கள் ஆனாலும்சரி .. சிவராத்திரி அன்று சிவபெருமானை தரிசித்தவர் .. விரதம் இருந்தவர் .. பூஜைசெய்தவர் ஆகியோருக்கு நற்கதி கிடைக்கும் என்பதே மேற்கண்ட பாடலின் பொருளாகும் .. என்று சிவராத்திரி புராணத்தைக் கூறும் வரதபண்டிதம் தெரிவிக்கிறது .. 

யுகம்யுகமாக கண்துஞ்சாமல் நம்மைக்காத்து ரட்சிக்கும் கயிலைக் கடவுளுக்காக ஒரே ஒருநாள் இரவு விழித்திருந்து அவரை நாம் பூஜிக்கும் புண்ணியராத்திரியே அது ! 
ராத்ர என்ற சொல்லுக்கு யாவும் செயலற்று ஒடுங்கி நிற்றல் என்றுபொருள் .. எனவேதான் உயிர்கள் செயலற்று உறங்கும் இரவுப்பொழுது ராத்திரி எனும் பெயர்பெற்றது .. 

ஒருமுறை உலகமே இருண்டுகிடந்த மஹாசங்கார 
(சம்ஹார) காலமாகிய ஊழிக்காலத்தில் .. பஞ்சபூதங்களும் செயலற்று மாயையில் ஒடுங்கும் .. எங்கும் இருள்சூழ உலகம் செயலற்று எங்கும் அமைதிநிலவும் இந்நிலையில் சிவபெருமான் ஒருவரே செயலாற்றுவார் .. அவரை அடுத்திருக்கும் சக்தியான தேவி உலக உயிர்களை மீண்டெழச்செய்திட இரவு முழுவதும் விழித்திருந்து மறுநாள் பொழுது விடிந்து சிவபூஜை செய்து உலகம் மீண்டும் தழைக்கும் என்ற வரத்தைப்பெற்றாள் .. அதோடு தான் சிவவழிபாடு செய்ததை நினைவுகூறும் விதமாக அந்த இரவை சிவராத்திரியாக அழைத்து முறைப்படி விரதமிருந்து இரவில் நான்குகால சிவபூஜை செய்வோர்க்கு மங்களங்கள் யாவும் தந்து நிறைவில் மேலான பதமும் தரவேண்டும் எனவும் வேண்டினாள் .. ஈசன் அவ்வாறே வரம் அளித்தார் .. எனவே சிவனின் பெயரிலேயே சிவராத்திரி என அழைப்பதாகவும் கூறப்படுகிறது .. 

ஆதியும் அந்தமும் இல்லா பராபரவஸ்து ஜோதிரூபத்திலிருந்து லிங்கமாக வெளிவந்து பின்னர் லாவண்யரூபத்தை அடைந்த புண்ணியதினம்தான் சிவராத்திரி ..

சிவனைப் போற்றுவோம் ! எல்லா ஞானமும் .. சித்திகளையும் பெறுவோமாக ! ஓம் நமசிவாய ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

சுவாமியே சரணம் ஐயப்பா...குருவே சரணம் சரணம்.....

சின்ன கண்ணன் 
சிங்கார  கண்ணன்
சிரேஷ்ட் கண்ணன்
சிவாவின் கண்ணன்
சிந்தை குளிர வைக்கும் கண்ணன்
சிவானந்த கண்ணன் 
சீரோடும் சிறப்போடும்
வாழ்க வாழ்க வாழ்கவே

Swamiye Saranam Iyyappa....Guruve Saranam Saranam...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY HIS DIVINE BLESSINGS BRINGS YOU ALL THE ETERNAL BLISS & HAPPINESS .. " OM NAMASHIVAAYA

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
சனிக்கிழமையும் .. திருவாதிரையும் கூடிவரும் இந்நாளில்
சிவாலயம் சென்று சிவபெருமானையும் .. ஆடலரசனாகிய நடராஜப்பெருமானையும் வழிபடுவது சிறப்பு ... தங்களனைவரது அனைத்து கிரகதோஷங்களும் நீங்கி .. தங்கள் வாழ்வில் ஆனந்தமும் .. நல்லாரோக்கியமும் என்றும் நிலவிட எம்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் சித்ஸபேசாய வித்மஹே ! 
சிதாகாசாய தீமஹி !
தந்நோ சபேச ப்ரசோதயாத் !! 

சிவபெருமானுக்குரிய வடிவங்களில் முதன்மையானது 
நடராஜர் வடிவமே ! இவர் ஆடுவது ஆனந்ததாண்டவம் .. 
அம்பலவாணர் .. சபாபதி .. கூத்தப்பெருமான் .. நடேசன் ..
சித்சபேசன் .. நடராஜன் .. கனகசபாபதி .. பொன்னம்பலம்
என்ற பெயர்களும் உண்டு .. இலக்கியங்களில் ஆடல்வல்லான் என்று குறிப்பிட்டுள்ளனர் .. ஆனந்ததாண்டவமாடும் நடராஜரை வழிபட்டால் மகிழ்ச்சி என்றென்றும் நிலைக்கும் .. 

நடராஜ உருவத்தின் தத்துவம் - 
வலதுபுறமேல் கையில் உடுக்கையை கொண்டிருப்பது 
இந்த உலகம் ஒலியின்மூலம் துவங்கியது என்பதை காட்டுகிறது .. 
இடதுபுறமேல் கையில் உள்ள நெருப்பு எந்நேரமும் அழித்துவிடுவேன் என்ற எச்சரிக்கையை கொடுக்கின்றது 
வலதுபுறகீழ் கையில் காப்பாற்றுவதை குறிப்பதைப் போன்று .. பயப்படாதே ! நான் இருக்கிறேன் ! என்று கூறுகின்றது .. 
இடதுபுறகீழ் கையால் உயர்த்தி இருக்கும் காலைக்காட்டி தன்னிடம் அடைக்கலம் புகுவோருக்கும் தன்னை வணங்கும் பக்தர்களுக்கான இடம் என்பதை உணர்த்துகிறது .. 
இந்த நடனத்தில் ஆக்கல் .. அழித்தல் .. காத்தல் .. என்ற அணுவின் இயற்பியல் விதியின் அனைத்து செயல்களோடும் ஒத்துபோகின்றது .. 

சிவபெருமான் அருவம் .. உருவம் .. அருவுருவம் என்னும் மூன்றுவடிவம் கொண்டவர் .. இம்மூன்று வடிவங்களிலும் சிவபெருமான் அருள்புரியும் தலம் சிதம்பரம் .. 
மூலவர் திருமூலநாதர் அருவுருவத்திலும் (லிங்கம்)
நடராஜர் உருவத்திலும் .. சிதம்பர ரகசியம் என்னும் வெட்டவெளியில் உருவமற்ற அருவநிலையிலும் சுவாமி காட்சிதருகிறார் .. 

சிதம்பரம் என்றால் என்ன ..? ..
சித் + அம்பரம் = சிதம்பரம் ..
சித் - அறிவு ..
அம்பரம் - வெட்டவெளி .. 
நடராஜர் சந்நிதியின் வலதுபுறம் ஒருவாயில் உள்ளது ..
இதனுள் தங்கத்தினாலான வில்வமாலை உள்ளது .. 
வாசலில் திரைதொங்கும் .. பூஜையின்போது திரைவிலக்கப்பட்டு ஆரத்திகாட்டப்படும் .. அங்கே என்ன இருக்கிறது ? என்று குனிந்துபார்த்தால் ஆகாயம்தான் தெரியும் .. இறைவன் ஆகாயம்போல் பரந்து விரிந்தவன் 
ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது .. முடிவும் கிடையாது .. முதலும் முடிவும் இல்லாதவன் இறைவன் என்பதை இது குறிக்கிறது .. பஞ்சபூத தலங்களில் இது ஆகாயத்தலம் .. 

சிதம்பரம் கோயிலை “ தில்லை அம்பலம் “ என்பர் .. தில்லைமரம் நிறைந்த காடாக இருந்ததால் சிதம்பரத்திற்கு தில்லைவனம் எனபெயர் .. சிதம்பரத்திற்குக் கிழக்கேயுள்ள பிச்சாவரம் உப்பங்கழியோரத்தில் தில்லை மரங்கள் உள்ளன .. சேந்தனார் தம்முடைய பாடலில் “ மன்னுக தில்லை ! வளர்க நம்பக்தர்கள் ! “ என்று சிதம்பரத்தை “ தில்லை “ என்று குறிப்பிடுகிறார் ..

நாமும் தில்லை அம்பலவாணனைப் போற்றுவோம் !
சகலநலன்களையும் பெறுவோமாக ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 
“ தென்னாடுடைய சிவனே ! போற்றி ! எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி “ ஓம் நமசிவாய “

: Udipi Krishna temple.. See the flower decorations temple decorated for Janmashtami.





SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED AND DIVINE FRIDAY WITH THE BLESSINGS OF LORD KRISHNA & MAY PEACE AND LOVE FILL YOUR LIFE WITH JOY AND PROSPERITY .. " JAI SHREE KRISHNA "

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. மங்களங்களை அள்ளித்தரும் வெள்ளிக்கிழமையாகிய இன்று மதியம்வரை ரோகிணி நட்சத்திரமும் கூடிவருவதால் ஸ்ரீகிருஷ்ணபகவானைப் பிரார்த்தித்து வாழ்வில் பரிபூரணமான நிறைவையும் .. நிம்மதியையும்
ஆனந்தத்தையும் தங்களனைவருக்கும் கருணைகூர்ந்த உள்ளத்தோடு அள்ளி வழங்குவாராக ..

ஓம் தாமோதராய வித்மஹே ! 
ருக்மணி வல்லபாய தீமஹி ! 
தந்நோ கிருஷ்ண ப்ரசோதயாத் !! 

அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டவே விஷ்ணுபகவான் ஸ்ரீகிருஷ்ணராக அவதரித்தார் .. 

“ பரித்ணாய ஸாதூனாம் வினாஷாய ச துஷ்கிருதாம் 
தர்மசம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி ! யுகே ! யுகே “ 

“ எப்பொழுது எங்கு தர்மம் தலைசாய்ந்து அதர்மம் தலையோங்குகிறதோ ! அப்பொழுது அங்கு அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட நான் யுகம்தோறும் அவதரிக்கின்றேன் “ என்று பகவான் கிருஷ்ணர் பகவத்கீதையில் நேரிடையாகக் கூறியுள்ளதற்கிணங்க 
அவரின் அவதாரம் திகழ்கின்றது .. 

அவரின் எல்லா அவதாரங்களுமே அவரின் மூலவடிவத்தைப் போன்று சக்திமிக்கவைதான் .. அதாவது
ஒரு மெழுகுவர்த்தியிலிருந்து நாம் பல மெழுகுவர்த்திகளுக்கு ஒளியேற்றினாலும் .. அவை எல்லாமே ஒரேவித் சக்தியுடையதாக இருப்பதுபோன்றது இவ்வாறு அவர் எடுத்த அவதாரமே கிருஷ்ண அவதாரமாகும் .. 

இப்புண்ணிய தினத்தில் நாமும் கிருஷ்ணபரமாத்மாவை துதித்து இவ்வுலகில் நல்வாழ்வு வாழ்வதற்கும் .. மறுமையில் நற்கதி அடையவும் பகவான் பாதங்களை சரணடைவோமாக .. “ ஜெய்ஸ்ரீகிருஷ்ணா “ .. 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

எங்கிருந்தோ வந்தான்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் - கண்ணன்
எங்கிருந்தோ வந்தான்
சொன்னபடி கேட்பான் துணிமணிகள் காத்திடுவான்
சின்ன குழந்தைக்கு சிங்காரப் பாட்டிசைப்பான்
கண்ணை இமையிரண்டும் காப்பது போல் என் குடும்பம்
வண்ணமுறக் காக்கின்றான் வாய் முணுத்தல் கண்டறியேன் கண்ணன்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் - கண்ணன்
எங்கிருந்தோ வந்தான்
பற்று மிகுந்து வரப் பார்க்கின்றேன் கண்ணனால்
பெற்று வரும் நன்மையெல்லாம் பேசி முடியாது
நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய்
யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத 
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம் 
பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய் - ரங்கன்
எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் - ரங்கன்
எங்கிருந்தோ எங்கிருந்தோ ரங்கன்
எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
ரங்கா ரங்கா ரங்கா ரங்கா

PANVEL BALAGANE POTRI POTRI...GURUVE SARNAM...SWAMIYE SARANAM IYYAPPA....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A HAPPY JANMASHTAMI AND MAY LORD KRISHNA BRING HAPPINESS AND PROSPEROUS IN YOUR LIFE AND MAY HATRED LEAVE AWAY FROM YOU .. ENJOY THE AUSPICIOUS DAY WITH LOTS OF LOVE & HAPPINESS .. " JAI SHREE KRISHNA "

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் 
“ இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளும் உரித்தாகுக .. இன்றையநாளில் ஸ்ரீகிருஷ்ணபகவானின் அருட்கடாக்ஷ்ம் பெற்று செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றிபெற்று வாழ்வில் வசந்தம் மலர்ந்திட பகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தாமோதராய வித்மஹே ! 
ருக்மணி வல்லபாய தீமஹி ! 
தந்நோ கிருஷ்ண ப்ரசோதயாத் !! 

கிருஷ்ண ஜன்மாஷ்டமி ஆண்டுதோறும் ஸ்ரீகிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடுகிறது .. பகவான் மஹாவிஷ்ணு பூமிபாரம் குறைப்பதற்காகவும் .. நல்லவர்களைக் காப்பதற்காகவும் ஆவணிமாதத்தில் நடு இரவில் தேய்பிறை அஷ்டமித் திதியில் ஸ்ரீகிருஷ்ணராக அவதாரம் எடுத்தநாளே கோகுலாஷ்டமி என்ற இன்றைய நாளாகும் .. 

இறைநிலை எளிதாக எட்டக்கூடியது .. பிறவிப்பயன் தெரியாமல் இறைநிலைமை உணரமுடியாமல் உழன்றுகொண்டிருக்கும் மனிதர்களின் எண்ணங்கள் கிருஷ்ணரைப் பின்பற்றினால் மாறும் .. வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் ஆனந்தத்துடன் ரசித்தவர் .. மகிழ்ச்சி வெளியில் இல்லை .. மனதில்தான் இருக்கிறது என்பதை உலகிற்கு உணர்த்தியவர் .. 

அஷ்டமி திதியில் அவதரித்தவர் ஸ்ரீகிருஷ்ணர் .. இதனால் இந்த திதியானது கோகுலாஷ்டமி என்று போற்றப்படுகிறது .. அஷ்டமி .. நவமி திதிகளில் சுபகாரியங்கள் செய்யக்கூடாது என்பார்கள் .. காரணம் இந்த திதிகளில் தான் கிருஷ்ணரும் (அஷ்டமி) இராமரும் 
(நவமி) பிறந்து அதிக கஷ்டங்களை சந்தித்து விட்டார்கள் 
என்ற காரணம் சொல்லப்படுகிறது .. அதனால் முதலில் துன்பங்களை கண்ட இந்த இருவரும் பிறகு சாதனையும் .. சக்தியும் படைத்தவர்களாக திகழ்ந்தார்கள் .. 

கிருஷ்ணபரமாத்மா தனக்காக இல்லை என்றாலும் பிறருக்காக வாழ்ந்தவர் .. அதனால்தான் இவரை 
“ கண்ணா “ என்கிறோம் .. அதாவது கண்ணைப்போல் காப்பவர் .. 
முகுந்தா - ‘ மு ‘ என்றால் - முக்தியை அருள்வது என்று பொருள் ..
“ கு “ என்றால் - இவ்வுலக இன்பங்களை அருள்வது .. இவ்வுலகில் வாழ்வதற்கும் .. முக்தியை பெறுவதற்கும் கிருஷ்ணரே மூலவர் என்ற பொருளின் அடிப்படையில் தான் “ முகுந்தா “ என்று அழைக்கிறோம் .. 

குழந்தை கிருஷ்ணரின் பாதத்தை ஏன் வீட்டில் வரைகிறோம் ..? 
நாரதமுனிவர் ஒருசமயம் ஒவ்வொரு கிருஷ்ணபக்தர்களின் வீட்டுக்கும் சென்றபோது எல்லோரின் இல்லத்திலும் கண்ணன் இருப்பதைக் கண்டு அதிசயித்தார் .. இப்படி ஒரேநேரத்தில் பல்லாயிரம் இடங்களில் இருக்கிறார் நம் கிருஷ்ணபரமாத்மா .. 

நான் எங்கும் இருப்பேன் ! எத்தனைகோடி பக்தர்களையும்
பார்ப்பேன் ! காப்பேன்! என்பதைக் குறிப்பிடவே ஒவ்வோர் வீட்டிலும் கிருஷ்ண ஜெயந்தியன்று கிருஷ்ணரின் திருவடிக்கோலம் போடுகிறார்கள் .. 

” நீ எனக்கு ஒரு இலையைக்கொடு .. அல்லது பூவைக்கொடு .. அதுவும் இல்லையென்றால் கொஞ்சம் தண்ணீர் கொடு .. எதைக்கொடுத்தாலும் பக்தியோடு கொடு .. சுத்தமான மனம் உள்ளவன் பக்தியோடு கொடுப்பதை நான் சாப்பிடுவேன் “ என்றார் கீதையில் கண்ணன் .. 

பாகுபாடு பாராமல் குழந்தை உள்ளம் படைத்த கண்ணனை வணங்கினால் வாழ்நாள் முழுவதும் கிருஷ்ணபரமாத்மா தம் பக்தர்களை தன் கண்ணைப்போல் காப்பார் .. 

“ ஜெய்கிருஷ்ணா முகுந்தா முராரே “ எனப் பகவானைப் போற்றுவோம் ! வாழ்வில் அனைத்திலும் வெற்றிகாண்போம் ! வாழ்க வளமுடனும் ! என்றும் நலமுடனும் !

SWAMIYE SARANAM IYYAPPA..GURUVE SARANAM...PANVEL BALAGANE SARANAM SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HE SHOWER YOU HIS ETERNAL BLISS AND FULFILL ALL YOUR DESIRES .. " OM MURUGA "


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று கார்த்திகை நட்சத்திரமும் கூடிவருவது சிறப்பு .. தங்களனைவரும் வேலவனருளால்
நல்வாழ்வு .. ஆரோக்கியம் .. ஆயுள் .. புகழ் .. செல்வம் யாவும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ கார்த்திகேயனைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
சக்தி ஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ ஸ்கந்த ப்ரசோதயாத் !! 

புராணங்களின்படி சிவனிடமிருந்து புறப்பட்ட தீப்பொறி சரவணப்பொய்கையில் ஆறுபகுதிகளாக விழுந்தது .. இது
ஆறுகுழந்தைகளாக உருப்பெற்றது .. கர்த்திகைப் பெண்கள் அறுவர் இந்த ஆறுகுழந்தைகளை வளர்த்தனர் 
ஒருகார்த்திகை திருநாளில் அன்னை பார்வதிதேவி இந்த ஆறுகுழந்தைகளையும் இணைத்தார் .. ஆறுமுகங்களைப் பெற்ற இவர் ஆறுமுகன் என்றழைக்கப்படுகிறார் ..

சிவனைப்போலவே முகத்திற்கு மூன்றுகண்கள் என ஆறுமுகங்களுக்கும் சேர்த்து மொத்தம் பதினெட்டு கண்களையும் உடையவர் .. 

” அருவமும் .. உருவமும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப் பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகக் கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரெண்டும் கொண்டே ஒருதிருமுருகன் வந்து ஆங்கு உதித்தனன் உலகம் உய்ய “ .. ( கந்தபுராணம் )

உயிர்களுக்கு வேண்டுவது மூன்றுசுகம் .. இகம் .. பரம் .. வீடுபேறு .. இந்த மூன்று இடங்களிலும் காத்தருளும் தெய்வம் முருகன் .. அதனால் அப்பெருமான் மூன்று உகரங்களுடன் கூடிய முருகு என்ற சொல்லை உடைய தனிப்பெருந்தெய்வமாக விளங்குகின்றான் .. இந்த மூன்று நலன்களை வழங்க வல்ல தெய்வம் முருகவேள் ! 

இகநலனை - வள்ளிதேவியைக்கொண்டும் ..
பரநலனை - தெய்வயானை அம்மையைக்கொண்டும் ..
முக்திநலனை - வேலாயுதத்தைக் கொண்டும் .. 
நமக்கு அருள்புரிகின்றான் முருகன் .. 

எனவே முருகப்பெருமானை பயன்கருதாது மெய்யன்புடன் வழிபடுவோர் இகம் .. பரம் .. வீடு என்ற மும்நலன்களையும் பெற்று செம்மையுறுவார்கள் ..

அழகுக்கடவுளாக உறையும் முருகனை தமிழ்க்கடவுளாக
நாம்கொண்டோம் .. முத்தமிழால் வைதாரையும் வாழவைப்பான் முருகன் என்பர் .. அத்தகைய பெருமையும் அருளும் நிறந்த முருகப்பெருமானை கார்த்திகை நன்னாளாகிய இன்று போற்றி வணங்குவோம்
வாழ்வில் அனைத்து வெற்றிகளையும் பெறுவோமாக ! 
“ ஓம் சரவணபவாய நமஹ “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM.GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGAN .. MAY HE RELIEVE YOU FROM ALL YOUR PROBLEMS & SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH AND HAPPINESS " OM MURUGA "

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாயும் .. சஷ்டியும் கூடும் இந்நன்னாளிலே ! சஷ்டிப்பிரியரான முருகப்பெருமானைத் துதித்து தங்கள் மனதிலும் .. குடும்பத்திலும் அமைதிநிலவிடவும் .. நல்லாரோக்கியமும் .. மகிழ்ச்சிகரமான வாழ்வும் மலர்ந்திடவும் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வர புத்ராய தீமஹி ! 
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !! 

செவ்வாயன்று சஷ்டித் திதி வருவது “ அங்காரக சஷ்டி “ ஆகும் .. முருகனுக்கு உரித்தான நாள் செவ்வாய் ! 
செவ்வாய்கிரகத்தின் அதிபதியும் சுப்ரமண்யனே ஆவார் !

1 - உறவுப்பகை ..
2 - அடுத்தவீடு .. நில .. கடை .. அலுவலக தொழில் வகைப்பகை ..
3 - சொத்துப் பகை ..
4 - தன்குடும்பத்திலேயே பகை - 
5 - தன்வினைகளால் வரும் துன்பங்களைக் கண்டு தானே தீயபழக்கங்களுக்கு ஆட்பட்டு .. புகை .. மது .. முறையற்ற செயல்களால் தன் ஆன்மாவைச்சுட்டு இறைப் பூஜைகளை வெறுத்து அல்லது சரியாக ஆற்றாமல் தனக்குத்தானே ஏற்படுத்திக் கொள்ளும் தற்பகை .. 
6 - பூர்வஜென்மப்பகை - இதனை அகற்றுதல் மிகவும் கடினம் .. 

இவ்வாறு ஆறுவிதமான பகைகளால் அல்லல்படுகின்றான் மனிதன் .. இவற்றிற்குக் கணிசமான நிவர்த்தித்தர உதவுவதே ! அங்காரக சஷ்டி வழிபாடு ஆகும்.. 

செவ்வாயும் சஷ்டியும் கூடும் இந்நாளிலே ! முருகப்பெருமானின் அனைத்து திருக்கோலங்களையும்
தரிசித்து .. பாம்பன் சுவாமிகளின் பகைகடிதல் .. ஷண்முக கவசம் .. முருகனுக்கும் அங்காரகனுக்கும் உரிய ஸ்லோகங்களையும் பாராயணம் செய்துவரின் அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் மீளலாம் .. 

சஷ்டிப்பிரியரான சுப்ரமண்யனைப் போற்றுவோம் ! நலம்பல பெறுவோமாக ! ஓம் சரவணபவாய நமஹ !
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM.....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY AND MAY LORD SHIVA REMOVE ALL THE NEGATIVE FORCES AND BLESS YOU WITH GOOD HEALTH .. WEALTH .. AND HAPPINESS .. " OM NAMASHIVAAYA " .. JAI BHOLE NATH ..

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
சனிக்கிழமையாகிய இன்று ஈசனைத் துதித்து தங்களனைவரது கிரகதோஷங்களும் நீங்கி நல்லாரோக்கியமும் .. மகிழ்ச்சிகரமான நல்வாழ்வும் அமைந்திட பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!

சிவனின் ஜடாமுடியில் கங்கை வந்தமர்ந்த புராணக்கதை 
சகரமன்னன் அஸ்வமேத யாகம் நடத்தி இந்திரபதவியை அடையவேண்டும் என எண்ணியதால் அதற்கு தேவையானவைகளை தயார் செய்தான் .. அஸ்வமேத யாகம் நடத்தி யாகத்தின் முடிவில் பட்டத்து குதிரையை அவிழ்த்துவிடுவார்கள் ( அஸ்வம் - குதிரை ) அது எந்த நாட்டுக்கு செல்கிறதோ அந்த நாட்டின் மன்னன் நாட்டை
ஒப்படைக்கவேண்டும் .. அல்லது குதிரையை சிறைபிடித்து போர்புரியவேண்டும் .. 

இவ்வாறு 100 அஸ்வமேத யாகங்கள் முடித்தால் ‘இந்திரபதவி ‘ கிட்டும் சகரமன்னன் 99 யாகங்களை முடித்தான் .. 100வது யாகம் நடந்தால் பதவிபறிபோகும் என்ற பயத்தில் இந்திரன் சூழ்ச்சி செய்தான் .. 100வது யாகம் நடந்துகொண்டிருக்கையில் கட்டிவைத்திருந்த பட்டத்து குதிரையை அவிழ்த்து கொண்டு சென்று கபிலமுனிவரின் ஆசிரமத்தில் தவம் செய்துகொண்டிருந்த
கபிலரின் பின்னால் கட்டிவிட்டு மறைந்து விட்டான் இந்திரன் .. 

யாகம்முடியும் நேரத்தில் குதிரையை காணவில்லை ..
சகரமன்னனின் மகன்கள் மிகபலசாலிகள் அவர்களை அனுப்பி குதிரையை மீட்டு வருமாறு மன்னன் கட்டளையிட்டான் .. அவர்களும் குதிரையை தேடிசெல்கிறார்கள் .. கபிலரின் ஆசிரமத்தில் குதிரையைக்கண்டு தவத்தில் இருக்கும் கபிலரிடம் குதிரையை கொண்டுவந்து மன்னரிடம் கொடுத்து காலில்
விழுந்து மன்னிப்பு கேள் அல்லது இப்போது எங்களுடன் போரிடு என்றனர் .. 

கபிலர் தன்தவத்திலிருந்து அசையக்கூட இல்லை கோபமடைந்த சகர குமாரர்கள் கபிலரின் தொடையில் கத்தியால் கீறினார் .. அதற்கும் அசரவில்லை கபிலரை தூக்கி நிலத்தில் அடித்தனர் .. அவர்தவம் கலைந்தது .. 

கோபத்தில் கபிலர் பார்த்தவுடன் சகர குமாரர்கள் எரிந்து சாம்பலாகினர் .. இதனை கேள்விப்பட்ட சகரமன்னனும் தன் மகன்களை இழந்த துக்கத்தில் யாகத்தீயில் குதித்து தன் உயிரை போக்கிக்கொண்டான் .. 

சிலகாலம் கழித்து சகரவம்சத்தில் பகீரதன் என்ற மன்னன் பிறந்தான் .. அவன்நாடு வறுமைக்குள்ளானது அப்போது நாரதர் அவரிடம் வந்து நடந்ததை கூறி துயருக்கு காரணம் சாந்தி அடையாத அவனின் முன்னோர்களின் ஆன்மா தான் என்பதை விளக்கி பகீரதனை கங்கை சத்தியாலோகத்தில் இருக்கிறாள் அவளுக்குள் உள்ள முன்னோர்களின் சாம்பல் கரைந்தால் மட்டுமே உனக்கு பித்ருதோஷம் நீங்கி அவர்களுக்கும் முக்தி கிட்டும் என்றும் கங்காதேவியை எண்ணி தவமிருக்க சொன்னார் 

பகீரதனும் தன் முன்னோர்கள் சாந்தியடையவும் .. நாட்டு மக்களது நன்மைக்காகவும் தவமிருந்து கங்கையை பூமியில் பிரவேசிக்கும்படி வேண்டினான் .. ஆனால் கங்கை மறுத்தாள் .. அவளின் வேகம் மொத்த உலகத்தையும் அழிக்கும் சக்தியுடையது என்றும் ஈசனிடம் இதற்கு உபாயம் கேட்ககூறி மறைந்தாள் .. 

பகீரதன் ஈசனைநோக்கி தவமிருக்க ஈசனும் காட்சியளித்து ஒரு உபாயம் கூறினார் ..கங்கையின் வேகத்தை கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றல் தனக்கு மட்டும் உள்ளதாகவும் தன் ஜடாமுடியின் வழியில் கங்கா இறங்கினால் அவளின் வேகம் கட்டுக்குள் வரும் என்றார் 
பகீரதனும் கங்கையிடம் கூற “ ஈசன்முடி தொடுவது எனக்கு கிடைத்த பெரும்பாக்கியம் “ என்று கூறி உலகில் பிரவேசிக்க ஒப்புக்கொண்டாள் .. 

சிவபெருமான் இமயத்தின் உச்சியில் நின்று தன் ஜடாமுடியை அவிழ்க்க அதில் கங்காதேவி பிரவேசித்து தன் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு பூமியில் பாய்ந்தாள் ..
நிலங்களை வளமாக்கி பகிரதனின் முன்னோர்களின் முக்திக்கும் வழிசெய்தாள் .. 

கங்கை புனிதமான நதி என்பதால் அதை தவவலிமையால் உலகிற்கு கொண்டுவந்த பகீரதன் பெயரையே கங்கை முதலில் பிரவேசித்த இடத்திற்கு சூட்டினார் சிவன் .. கங்கையின் புனிதம் மாறாமல் இருந்து உலகமக்களின் நன்மை தொடர கங்கை எப்பொழுதும் தன் தலையில் இருப்பதே நல்லது என்று ஏற்றார் .. அன்றிலிருந்து கங்காதரனாக காட்சியளிக்கிறார் சிவன் .. 
கங்கையில் குளித்தால் பாவம்போக்கி புண்ணியம் தரும் 

சிவனைப் போற்றுவோம் ! அனைத்து நன்மைகளையும்
பெறுவோமாக ! ஓம் நமசிவாய ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

காயத்ரி ஜபம்: காயத்ரி மந்திரம் பற்றி மகான்கள் கருத்து!


ஆவணி அவிட்டத்திற்கு மறுநாள் காயத்ரி ஜபம் செய்யப்படும். கிருஷ்ணர் கீதையில் நதிகளில் நான் கங்கையாகவும், மலைகளில் விந்தியமாகவும், மந்திரங்களில் காயத்ரியாகவும் இருக்கிறேன் என்கிறார். காயத்ரி மந்திரத்தை, மந்திரங்களின் கிரீடம் என்கிறார் சுவாமி விவேகானந்தர். ஜே.பி,எஸ். ஹால்டேன் என்ற விஞ்ஞானி, “இந்த மந்திரம் ஒவ்வொரு ரசாயன கூடங்களின் வாயில் கதவிலும் பொறிக்கப்பட வேண்டும்,” என்கிறார். ராமகிருஷ்ணர் கூறுகையில் பெரிய பெரிய கடுந்தவ முயற்சிகளில் மனிதர்கள் ஈடுபடுவதைக் காட்டிலும், காயத்ரி மந்திரத்தை ஜபிப்பது மிகப்பெரிய சாதனையாகும். இது மிக சிறிய மந்திரம் தான். ஆனால் மிக மிக சக்தி வாய்ந்தது என்கிறார். ஞானி ஆர்தர் கொயெஸ்ட்லர், “காயத்ரி மந்திரம் 1000 அணுகுண்டுகள் வெடித்தால் வெளிப்படும் சக்திக்கு சமமானது,” என்கிறார். காந்திஜி, “யார் ஒருவர் காயத்ரி மந்திரத்தை ஜபிக்கிறாரோ அவர் நோய்க்கு ஆளாக மாட்டார்,” என்கிறார்.
2- காயத்ரி மந்திர பொருள்!
வேதத்திலிருந்து வந்த அனைவருக்கும் பொதுவான மந்திரம் தான் காயத்ரி மந்திரம்.
ஓம் பூர் : புவ : ஸ்வ :
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோந: ப்ரசோதயாத்
என்ற இந்த மந்திரத்திற்கு, “நம் புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம்” என்பது சுருக்கமான பொருள். இந்த மந்திரம் விஸ்வாமித்திரரால் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய பகவானை நோக்கி வழிபடுவதாக இம் மந்திரம் அமைந்துள்ளது. மிக அதிக சக்தி கொண்டது. அதிர்வுகள் மூலம் ஆக்கப்பூர்வ சக்தியினை ஏற்படுத்தக் கூடியது.
3- காயத்ரி மந்திர மண்டபம்!
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் முதல் பிரகாரத்தில் காயத்ரி மண்டபம் உள்ளது. காயத்ரி மந்திரத்தில் 24 அட்சரங்கள் (எழுத்துக்கள்) இருப்பது போல, இந்த மண்டபத்தில் 24 தூண்கள் உள்ளன. இந்த மண்டபத்தின் நடுவில் தான், காமாட்சியம்மன் வீற்றிருக்கிறாள்.
4- வேதங்களின் தாய்!
வேதங்களின் தாயே காயத்ரி தேவி. காயத்ரி மந்திரம் சொல்லப்படும் இடங்களில் இந்த தேவி இருப்பாள். இவளுக்கு சாவித்திரி, சரஸ்வதி என்ற பெயர்களும் உண்டு. இவள் ஐம்புலன்களின் அதிபதி. சாவித்திரி என்பது உண்மையைக் குறிக்கின்றது. சரஸ்வதி வாக்கின் அதிபதி. ஆக உண்மையான சிந்தனை, சொல், செயல் இவற்றினை குறிப்பதாக அமைகிறது காயத்ரி மந்திரம். இது வேதத்தின் சாரம். இதனை முழு கவனத்தோடு காலை, மாலை இருவேளையும் சொல்லலாம். இதைச் சொல்வதால் மனம் சுத்தமாகும். தீய எண்ணங்கள், கவலைகள் நீங்கும். மாணவர்கள் சிறப்பாகப் படிப்பார்கள்.
5- எத்தனை தடவை ஜபிப்பது?
காயத்ரி மந்திரத்தை காலை 4.30 மணி முதல் சொல்ல துவங்க வேண்டும். 108 முறை ஜபிப்பது மரபு. மாலையில் விளக்கேற்றியதும் இதே போல ஜபிக்கலாம்.
6- காயத்ரி மந்திரத்தை ஜபிப்பதன் பலன்!
காயத்ரி மந்திரத்தை ஜபிப்பதால், கம்பீரத் தோற்றம், தரமான பேச்சு, வறுமை, குறை நீங்குதல், பாதுகாப்பு, கண்ணில் அறிவொளி வீசுதல், அபாயம், தேவையற்ற சூழ்நிலைகள் நீங்குதல், நரம்புகளும், சுரப்பிகளும் ஊக்குவிக்கப்படுதல், எந்தச் சூழலிலும் அமைதியாக இருத்தல், நற்செயல்களில் ஈடுபடுதல் ஆகிய பலன்கள் உண்டாகும். மேலும், இது வாழ்க்கையில் குறுக்கிடும் தடைகளை நீக்கும். மூளையை பிரகாசிக்கச் செய்யும். உள்ளுணர்வினை தெளிவாக்கும். நம்மைப் பற்றிய உயர் உண்மைகள் தெரிய வரும்.

SWAMIYE SARANAM IYYAPPA..GURUVE SARANAM SARANAM GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS 'MAA' GAYATRI DEVI .. MAY SHE ILLUMINATE YOUR LIFE AND LEAD ALONG THE RIGHTEOUS PATH & REMOVE ALL YOUR PAINS AND SORROWS TOO .. " JAI MATA DI " ..

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
மங்களங்களை அள்ளித்தரும் வெள்ளிக்கிழமையாகிய இன்று அன்னை காயத்ரிதேவியைத் துதித்து அன்னைக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை ஜெபித்து தங்கள் மனதில் குடியிருக்கும் பயம் .. கஷ்டங்கள் யாவும் நீங்கி வாழ்நாள் முழுவதும் ஆனந்தமும் .. அமைதியும் தங்களனைவருக்கும் கிட்டுவதாக .. 

ஓம் பூர்புவஸ்ஸுவ !
தத்ஸவிதுர் வரேண்யம் ! 
பர்கோ தேவஸ்ய தீமஹி !
தியோயோன ப்ரசோதயாத் !! 

பொருள் - 
எவர் நமது அறிவைத் தூண்டி பிரகாசிக்கச்செய்கிறாரோ!
அந்த ஜோதிமயமான இறைவனை தியானிப்போமாக !! 

ஓவ்வோர் ஆண்டும் ” ஆவணி அவிட்டத்திற்கு “ மறுநாள் காயத்ரி ஜெபம் வருகின்றது இன்றைய நாளில் 1008 முறை காயத்ரிமந்திரம் ஜெபிக்கவேண்டுமென்பது மரபு அன்றாடம் சந்தியாவந்தனத்தின் போதெல்லாம் முடிந்த அளவுக்கு காயத்ரி ஜெபம் செய்வது விசேஷமானதாகும் 

தானத்தில் சிறந்தது அன்னதானம் .. திதிகளில் சிறந்தது துவாதசி .. மாதங்களில் சிறந்தது மார்கழி ,, அதுபோல் மந்திரங்களில் சிறந்தது காயத்ரி என்பார்கள் .. கிருஷ்ணபரமாத்வாவும் கீதையில் “ மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன் “ என்கிறார் .. 

கௌசிகன் எனும் மன்னன் தன் தவப்பயனாகப் பிரம்மரிஷி பட்டம் பெற்று விஸ்வாமித்திரர் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார் .. இவரே வரப்பிரசாதமான காயத்ரி மந்திரத்தை நமக்களித்தவர் .. 
பிரம்மாஸ்திரம் எனும் இணையற்ற அஸ்திரத்திற்கு காயத்ரி மந்திரமே ஆதாரம் .. இதை
” பிரம்ம தேஜோ பலம் பலம் “ எனக் குறிப்பிடுகிறார் விஸ்வாமித்திரர் .. மஹிமைவாய்ந்த இந்த காயத்ரி மந்திரத்திரத்தின் அதிதேவதை காயத்ரிதேவி ! 

ஒருமுறை பிரம்மன் புஷ்கரம் என்னும் புண்ணிய க்ஷேத்திரத்த்ல் ஒரு யாகத்தைத் தொடங்கினார் .. அந்த யாகத்தில் பங்கேற்க சரஸ்வதிதேவி வராததால் நான்முகன் தனது சக்தியால் ஸ்ரீகாயத்ரிதேவியை சிருஷ்டித்தார் .. காயத்ரியே சரஸ்வதியாக எழுந்தருளினாள் .. பிரம்மனும் தன் யாகத்தை முடித்தார் 
என்று புராணங்கள் கூறுகின்றன .. 

இந்ததேவி செம்பருத்திபூ போன்ற சிவந்த நிறம் கொண்டவள் .. செந்தாமரையில் எழுந்தருளும் அன்னையான இவள் ஐந்து திருமுகங்களும் பத்து திருக்கரங்களும் கொண்டு திகழ்கிறாள் .. தன்பத்து கைகளில் வரஹஸ்தம் .. அபயஹஸ்தம் .. அங்குசம் சாட்டை .. ( உட்புறமும் .. வெளிப்புறமும் உள்ள தீய சக்திகளை நீக்குவது ) 
கபாலம் ( சிவதத்துவம் ) கதை ( விஷ்ணு ) சங்கு சக்கரம் இரண்டு கைகளில் தாமரை ஏந்தியவள் நான்கு வேதங்களையும் நான்கு திருப்பாதங்களாகக் கொண்டவள்
என சாஸ்திரங்கள் போற்றுகின்றன .. வேதத்தின் மூலாதாரமாக காயத்ரி மந்திரம் திழ்கிறது .. 

காயத்ரி என்கிற பதம் காய்+த்ரீஎனப்பிரிந்து பொருள்தரும்
அதாவது “ காய் “ என்றால் அதாவது “ காய் “ என்ற கானத்திற்கு உரியது .. பாடப்பெறுவது எனப்பொருள் கொள்ளலாம் .. 

” த்ரீ “ என்பது “ த்ராயதே “ என்று விரிந்து “ காப்பாற்று “ எனப்பொருள்படும் .. அன்னை காயத்ரி தனது அபயகரங்களால் நமது பயத்தைப் போக்கியருள்வாள் ..

கா+ய+த்ரீ .. கா - என்பது நீர் தத்துவமாகிய கண்களுக்குப்
புலப்படும் ஸ்தூலத்தைக் குறிப்பது இதற்கு அதிபதி பிரம்மன் ..
ய -என்பது வாயு தத்துவமாகிய சூட்சுமத்தைக்குறிப்பது .. 
இதற்கு அதிதேவதை விஷ்ணு..
ஆ - என்பது காரணதேகம் .. இதன் அதிபதி ருத்ரர் .. 
த்ரீ - எனும் பதம் இம்மூவரும்சேர்ந்து நம்மைக்காப்பாற்றியருள்வர் என்பதைக்குறிக்கும் .. 
எனவே ஒருமுகப்பட்ட மனத்தோடு காயத்ரிமந்திரம் சொல்லி வழிபட மும்மூர்த்திகளின் அருளையும் பெறலாம் .. 

அன்னை காயத்ரிதேவியைப் போற்றுவோம் ! அனைத்திலும் வெற்றிபெறுவோமாக ! 
“ “ ஜெய்ஸ்ரீ காயத்ரி தேவியே நமோஸ்துதே “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

SWAMY SARANAM...AVANIAVITTAM (RAKSHA BANDHAN) AT SANNIDHANAM...GURUVE SARANAM









GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE DIVINE " UPA KARMA " WISHES TOO .. THE PERSON WHO RUGULARLY RECITES GAYATRI MANTRA ATTAINS LIBERATION FROM THE FEARS OF DISEASE AND DEATH .. " JAI MATA DI "


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. குருவருளும் .. இறையருளும் கூடிய இந்நன்னாளில் ஆவணி அவிட்டமும் வருவது சிறப்பு .. தங்களனைவருக்கும் இந்நாள் ஓர் பொன்னாளாக மிளிரவும் .. அன்னை காயத்ரிதேவியின் அருட்கடாக்ஷ்மும் பெற்று வளமான வாழ்வு மலர்ந்திட ஸ்ரீஹயக்ரீவரையும் பிரார்த்திக்கின்றேன் ..
ஞானாநந்தமயம் தேவம் நிர்மலம் ஸ்படிகாக்ருதிம் !
ஆதாரம் சர்வவித்யானம் 
ஸ்ரீஹயக்ரீவம் உபாஸ்மஹே !
இந்நன்னாளில் அனைத்து பெரியவர்களுக்கும் எனது குருநாதருக்கும் எனது பணிவான நமஸ்காரங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ..
ஆவணிமாத அவிட்ட நட்சத்திரத்தன்று பூணூல் அணிபவர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு பக்திபூர்வமான பண்டிகை இது .. இந்தநாளில் பழைய பூணூலை கழற்றிவிட்டு புதியபூணூலை அணிந்துகொள்வர் .. இதை குருமுகமாகத்தான் செய்யவேண்டும் .. வீட்டில் குருக்களை வைத்து காயத்ரிமந்திரம் ஜபித்து பின் பூணூல் போடுவார்கள் .. இப்போதெல்லாம் சிறுகுழந்தைகள்முதல் பெரியவர்கள்வரை குழுக்களாகக் கோவிலுக்குச் சென்று அனைவரும் குருக்கள் உதவியுடன் புதியபூணூல் அணிந்துகொள்கின்றனர் ..
மூன்றுவயதுமுதல் ஐந்துவயதிற்குள் ஆண்குழந்தைகள் குருமுகமாக காயத்ரிமந்திரம் ஓதி குழந்தையை தந்தைமடிமீது அமரவைத்து முதன்முதலாகப் புதியபூணூல் போட்டுவிடுவார்கள் .. இதை ஒரு திருமணவிழாபோலவே கொண்டாடுவார்கள் .. இதற்கு 
“ உபநயனம் “ என்று பெயர் ..
உபநயனம் செய்து பூணூலை அணிந்துகொண்டபின் தினமும் காயத்ரி ஜபத்தை மூன்றுமுறை தவறாமல் ஓதவேண்டும் .. வருடம் ஒருமுறை ஆவணி அவிட்டத்தன்று புதிய பூணூல் அணிந்து கொள்ளவேண்டும் ..
பூணூல் அணிவிக்கும்போது குரு சொல்லித்தரும் ஜபம்-
ஓம் பூர் புவஸ்ஸுவ !
தத்ஸவி துர்வரேண்யம் !
பர்கோ தேவஸ்ய தீமஹி !
தியோ யோநஹ் ப்ரசோதயாத் !!
இம்மந்திரத்தை தினம் மூன்றுவேளை கைமேல் துணிபோட்டு மூடி 108 .. 1008 முறை ஜபிக்க பாவம் நிவர்த்தியாகும் ..
இம்மந்திரம் உள்ளத்தை இதமாக்கும் .. மந்திரங்களிலேயே மிகவும் உயர்வான மந்திரம் இது .. வேதங்களின் தாய் காயத்ரி .. இந்தமந்திரம் வேதமந்திரங்களில் சிரேஷ்டமானது .. இதுபாவங்களைப்
போக்கும் .. நல்லாரோக்கியம் .. அழகு .. பலம் .. வீர்யம் .. பிரும்மதேஜஸ் முதலானவற்றைத் தருகிறது .. மனதைப்
பரிசுத்தப்படுத்துகிறது .. ஜபிப்பவர்களுக்கு அஷ்டமாசித்திகளைக் கொடுக்கிறது .. சக்திமானாகவும்
புத்திமானாகவும் ஆக்குகிறது ..
கீதையில் கண்ணன் ” மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன் “ என்று கூறியுள்ளார் .. மஹாவிஷ்ணுவின் திருமுகத்திலிருந்து தோன்றிய மந்திரமாகும் .. காயத்ரிக்கு மூன்றுகண்கள் .. 
ஐந்துமுகங்கள் .. 
பத்துகரங்கள் உண்டு .. 
வாகனம் - அன்னம் ..
சிவன்போல ஆக்கல் .. காத்தல் .. அழித்தல் .. மறைத்தல் ..
அருளல் என ஐந்து தொழில்களை காயத்ரியின் ஐந்துமுகங்களும் செய்கின்றன .. 
சரஸ்வதி .. லக்ஷ்மி .. பார்வதி .. மகேஸ்வரி .. மனோன்மணி என்ற ஐந்துசக்திகளின் முகங்களே காயத்ரியின் ஐந்துமுகங்கள் ..
விசுவாமித்திரரால் இம்மந்திரம் இராமபிரானுக்கு உபதேசிக்கப்பட்டு அதன்பலனாக இராமன் இராவணனை வென்றார் எனக்கூறப்படுகிறது .. காயத்ரிமந்திரத்தை 27முறை ஜபித்தல் நலம் .. ஜபிக்கும்போது ஒழுக்கநெறியோடும் .. உள்ளத்தூய்மையோடும் செய்யவேண்டும் .. அப்படிச்செய்வதால் விரும்பியபலனை அடையலாம் ..விரும்பியலோகம் செல்லலாம் என்கிறது சாஸ்திரம் ..
எல்லாவற்றிற்கும் மேலாக இந்ததினத்தில் வேதாரம்பம் என்பதால் குரு .. ஆசார்யாரிடமிருந்து அத்யயனம் ஆரம்பிக்கப்படுகிறது .. எல்லா வித்யைகளுக்கும் ஆதாரமான ஸ்ரீஹயக்ரீவர் அவதரித்த தினம் இன்று வேதமாதாவையும் .. ஹயக்ரீவரையும் .. வியாஸரையும் வணங்கி சகல வித்யைகளும் .. ஞானமும் அருளவேண்டுவோமாக ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

GS YATRA TO SABARIMALAI...AUGUST 2016...SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM...










SWAMY SARANAM..GURUVE SARANAM..///GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. MAY ALL YOUR PRAYERS BE ANSWERED ON THIS DAY AND MAY YOU BE BLESSED WITH PEACE AND HAPPINESS .. " OM NAMO NAARAAYANAAYA "


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
ஆவணிமுதலாம் நாளும் .. புதன்கிழமையுமாகிய இன்று 
திருவோண நட்சத்திரமும் வருவதால் ஸ்ரீமன் நாராயணனுக்கு உகந்த நாளுமாகும் ..பகவானைத் துதித்து
தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிய நன்னாளாக அமைந்திடவும் .. மனநலமும் .. உடல்நலமும் நல்ஆரோக்கியத்துடன் திகழவும் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் நமோ நாராயணாய வித்மஹே ! 
வாஸுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தன்று நாராயணனை வழிபட்டு விரதங்காப்பது “ ஸ்ரவண விரதமாகும் “ .. 

தனிமனிதனின் உள்ளத்தை தூய்மையாக்கி ஆன்மீக ஆற்றலைத் தரும் இவ்விரதத்தை அனுஷ்டித்து வருபவர்களின் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏதும் 
இருக்காது .. வாழ்வில் அமைதி நிலவிடும் .. உறவினர் கொண்ட பகை அகலும் .. 

108 திவ்யதேசங்களில் ஒன்றான உப்பிலியப்பன் கோயிலில் மாதமாதம் ” ஸ்ரவணம் “ என்ற விழா பிரசித்தம் .. “ மாம் ஏகம் சரணம் வ்ரஜ “ .. 
“ என்னை சரணடைந்தால் உன்னை நான் காப்பேன் “ என்ற
சரமச்லோகப்பகுதி எம்பெருமானின் வலக்கையில் வைரங்களால் பொறிக்கப்பட்டுள்ளது .. 

தனக்கு ஒப்பாரும் .. மிக்காரும் இலார் என்ற பதத்திலேயே ஒப்பிலா அப்பன் .. ஒப்பிலியப்பன் எனவும் அழைக்கப்படுகிறார் .. 

உப்பிலியப்பனைத் துதித்து சொல்லவேண்டிய ஸ்லோகம்
என் அப்பன் ! எனக்காய் இருளாய் .. என்னைப்பெற்றவளாய் .. பொன் அப்பன் .. மணி அப்பன் 
முத்து அப்பன் .. என் அப்பனுமாய் மின்னப்பொன் மதிள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன் தன் ஒப்பார் இல் 
அப்பன் தந்தவன் தனதாள் நிழலே ! 

பொருள் -
பொன் .. மணி ..முத்து போன்றவன் என் தலைவனான இந்தப்பெருமாள் .. தன்பக்தனுக்கு உதவிசெய்வதில் ஒப்பாரும் .. மிக்காரும் இல்லாத தனித்தலைவன் .. என் தந்தை மதில்களால் சூழப்பெற்ற திருவிண்ணகர் என்ற இந்த திவ்யதேசத்தில் கொலுவிருக்கும் இவன் என் தலைவன் மட்டுமல்ல என்னைப்பெற்ற தாய் .. என்னை 
வளர்க்கும் தாய் .. தனது திருவடி நிழலால் எம்மை என்றென்றும் காப்பான் .. என்று உள்ளம் உருகிப் பாடுகிறார் நம்மாழ்வார் .. 

ஒப்பிலியப்பனைப் போற்றுவோம் ! குறைவில்லாத செல்வமும் .. அனைத்துத் துயர்களும் நீங்கி நலம் பெறுவோமாக ! ஓம் நமோ நாராயணாய ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

GS WITH SWAMIMAR...TODAY YATRA ...ERUMELI ....PANVEL BALAGANE SARANAM SARANAM....IYYAPPA SARANAM...GURUVE SARANAM SARANAM....











SWAMI SARANA,.....GURUVE SARANAM...-PANVEL BALAGANE SARANAM SARANAM...Maheswari Somapalan 2 hrs · GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD ARTHANAREESWARAR .. MAY HE BLESS YOU FOR A HAPPY LIFE .. GOOD LUCK AND PROTECT YOU FROM ALL SORROWS AND SUFFERINGS .. " OM SHIVSHAKTHI OM "

 GURUVIN KATTUNERAI.....PROCEEDING TO SABARIMALAI ...SWAMIYE SARANAM..GURUVE SARANAM....










அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஆடிமாத கடைசி செவ்வாயாகிய இன்று சிவனுள் ஐக்கியமாகும் சக்தியைப் போற்றித்துதித்து தங்களனைவரது துக்கங்கள் .. துஷ்டசக்திகள் யாவும் இந்த ஆடிக்காற்றில் பறந்தோடவும் .. சர்வமங்களங்களும் 
தங்கள் இல்லம்தேடிவரவும் அம்மையப்பனைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தபஸ்ய ச வாமபாக மாய வித்மஹே ! 
சிவசக்தாய தீமஹி ! 
தந்நோ அர்த்தநாரீஸ்வரா ப்ரசோதயாத் !! 

சூறைக்காற்றோடு அம்மனின் அருட்காற்றும் அரவணைத்த மாதம் ஆடி .. நீக்கமற நிறைந்திருந்த மகாசக்தி ..வேப்பிலைமுதல் ..விக்கிரகங்கள்வரை எல்லாவற்றிலும் கண்டு மகிழ்ந்திருந்தோம் .. போற்றினோம் .. பெண்ணின் தாய்மை பரிவாகவும் .. 
வீறுகொண்ட காளிப்ரவாகமாகவும் .. பாம்பின் புற்றினூடேயும் .. சிலுசிலுக்கும் பச்சை மரங்களினூடேயும் .. நட்டுவைத்த கல்லுக்குள்ளும் பரிணமித்து எம்மைக்காத்தாள் அன்னை .. 

திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் எம்பெருமான் திருமாலின் சிறப்புக்குரிய சக்தியாக திருமகள் விளங்குவது அனைவரும் அறிந்ததே ! தன்னை எப்போதும் விலகாது இருக்கவேண்டும் என்பதற்காகவே தனது அழகிய மார்பில் திருமகளை நாராயணன் குடிவைத்திருக்கிறார் .. 

நாராயணனின் உடம்பில் நாராயணனி எப்படி இடம்பெற்று இருக்கிறாளோ அதேபோலவே சிவபெருமானின் உடம்பிலும் பராசக்தி பாதியாக இடம்பெற்று இருக்கிறாள் 
இவை எதை காட்டுகிறது என்றால் சிவனுக்கும் தானே மூலம் என்பதை அன்னை சொல்லாமல் சொல்லி நம்மை விளங்கவைக்கிறாள் .. 

இவைதவிர எம்பெருமான் நாராயணன் எடுக்கும் ஒவ்வொரு அவதாரத்திலும் திருமகள் கூடவே வருகிறாள் .. திருமகள் இல்லாத திருமால் இல்லை என்றே சொல்லலாம் .. 

சிவனுக்கு பார்வதியாகவும் .. நாராயணனுக்கு மஹாலக்ஷ்மியாகவும் துணைவருகின்ற அன்னைசக்தி
படைப்புகடவுளான பிரம்மதேவனுக்கு சரஸ்வதியாக துணைவருகிறாள் .. எப்படி காக்கும் கடவுளின் உடம்பிலும்
அழிக்கும் கடவுளின் உடம்பிலும் சக்திகுடிகொண்டு இருக்கிறாளோ .. அதேபோலவே படைக்கும் கடவுளின் திருநாவிலும் அன்னை சக்தி குடிகொண்டுள்ளாள் .. திருமால் .. சிவன் இருவருக்கும் ஞானசக்தியாக துணைபுரிகின்ற தாயானவள் .. பிரம்மாவுக்கோ கிரியாசக்தியாக துணைசெய்கிறாள் .. 

சிவனின் அவதாரங்களில் அர்த்தநாரீஸ்வரர் அவதாரம் தனிசிறப்புடையதாகவும் .. தனித்தன்மை உடையதாகவும் திகழ்கிறது .. அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயரில் 
அர்த்தம் - என்றால் பாதி என்று பொருள் .. 
நாரி - என்றால் பெண் என்று பொருள் ..
சிவன்பாதி .. பார்வதிபாதி என்று இருவரும் இணைந்து
இருப்பதால்தான் .. அர்த்தநாரி + ஈஸ்வரர் ( சிவன் ) 
“ அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயர் கொண்டது .. 

சிவனின்றி சக்தியில்லை .. சக்தியின்றி சிவனில்லை .. என்பதை விளக்கும் உருவமாக திகழ்கிறது .. இந்த அர்த்தநாரீஸ்வரர் உருவம் வாழ்வியலில் ஆணின்றி பெண்ணும் .. பெண்ணின்றி ஆணும் சாத்தியமில்லை என்ற பொருளையும் தருகிறது .. 

ஆடிச்செவ்வாயாகிய இன்று தம்பதிசமேதராய் சிவாலயம்
சென்று .. “ எந்தச் சந்தர்ப்பத்திலும் .. பிரியாத வரம் வேண்டும் “ என அம்மையப்பனிடம் பிரார்த்திப்போமாக ! 
” ஓம் சிவசக்தி ஓம் ” .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..