PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

மகா சிவராத்திரி வழிபாடுக்கு 50 குறிப்புகள்

மகா சிவராத்திரி வழிபாடுக்கு 50 குறிப்புகள்
1. சிவனுக்கான ராத்திரியே சிவராத்திரி. அன்று நாம் அனைவரும் அவசியம் சிவனை வழிபட்டு அருள் பெற வேண்டும்.

2. நாளை (27ந் தேதி) காலை முதல் நாளை மறு நாள் (28-ந் தேதி) அதிகாலை சூரிய உதயம் வரை உள்ள காலமே சிவராத்திரி எனப்படுகிறது. 

3. கோடி சூரிய பிரகாசத்துடன் சிவபெருமான், லிங்க வடிவில் மகாலிங்கமாக இன்று தான் முதன் முதலில் தோன்றினார் என்று நாரத புராணம் சொல்கிறது. 

4. ஜோதிப்பிழம்பாக திகழ்ந்த சிவபெருமானின் அடியும், முடியும் காண முடியாமல் பிரம்மாவும், விஷ்ணுவும் திகைத்து நின்ற நாள். 

5. "நமசிவாய'' எனும் சிவபஞ்சாட்சர சொல்லை ஜெபம், ஹோமம் செய்து சித்தி பெற ஏற்ற நாள். 

6. நாளை நாம் ஒவ்வொரு வரும் சில விரதம் கடைபிடிக்க வேண்டும். 

7. சிவராத்திரியன்று கண்விழத்து, விரத நெறிப்படி பூஜைகள் செய்தால் அழிவற்ற செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம். 

8. ஆண்டு தோறும் மகாசிவராத்திரி பூஜையை முறைப்படி செய்து வருபவர்களுக்கு சிவலோக மோட்சம் கிடைக்கும். 

9. மகாசிவராத்திரியான நாளை கண்டிப்பாக அருகில் உள்ள சிவாலயத்துக்கு சென்று வழிபடுங்கள். 

10. நாளை இரவு நடக்கும் 4 ஜாம பூஜைகளில் கலந்து கொள்வது மிக, மிக சிறப்பானது.

11. 4 கால பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பது புண்ணியத்தை அதிகரிக்கச் செய்யும். 

12. நாளை இரவு மண்ணாலான அகல் விளக்கில் பஞ்சு திரியிட்டு நெய் தீபம் ஏற்றுவது மிகவும் நல்லது. 

13. நாளை இரவு சிவனின் மகிமையை விளக்கும் கதைகளை, உங்களுக்குத் தெரிந்து இருந்தாலும் மீண்டும் ஒரு தடவை படிக்கலாம். 

14. உண்மையான சிவபக்தர்கள் நாளை உபவாசம், பூஜை, தூங்காமல் கண் விழித்தல் ஆகிய மூன்றையும் நிச்சயம் செய்வார்கள். 

15. மகா சிவராத்திரியன்று முழுமையான சிவ சிந்தனையில் இருப்பவர்களுக்கு தெளிவான ஞானமும், நற்கதியும் உண்டாகும். 

16. நாளை மறு நாள் (28-ந் தேதி) காலை நித்ய பூஜை செய்து, தம்பதி பூஜை நடத்தி, ஏழைகள், சிவனடியார்களுக்கு அன்னதானம் கொடுத்த பிறகே உபவாசத்தை பூர்த்தி செய்தல் வேண்டும். 

17. வீட்டில் சிவராத்திரி பூஜை செய்பவர்கள் சிவனுக்கு, ஒவ்வொரு ஜாமத்துக்கும் உரிய மலர்களை சேகரித்து வைத்துக் கொண்டு அவற்றை, ஈசன் படம் மீது போட்டு வழிபடலாம். 

18. நாளை இரவு முதல் ஜாம பூஜையை மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடத்தவும். 

19. இரண்டாம் ஜாம பூஜையை இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நடத்தவும். 

20. மூன்றாம் ஜாம பூஜையை நள்ளிரவு 12 மணிக்குத் தொடங்கி நாளை மறு நாள் அதிகாலை 3 மணி வரை நடத்தவும் 

21. நான்காம் ஜாம பூஜையை நாளை மறுநாள் அதிகாலை 3 மணிக்கு தொடங்கி அதிகாலை 6 மணிக்குள் முடிக்கவும் 

22. முதல் ஜாமத்தில் சோமாஸ்கந்தர், 2-ம் ஜாமத்தில் தெட்சிணாமூர்த்தி, 3-ம் ஜாமத்தில் லிங்கோத்பவர், 4-ம் ஜாமத்தில் சந்திரசேகரையும் வழிபடுவது நல்லது. 

23. சூரின் அஸ்தமிக்கிற நேரத்தில் திரியோதசி திதி முடிந்து சதுர்தசி தொடங்கி மறுநாள் மாலை வரை அந்த திதி இருந்தால் அதுவே உத்தம சிவராத்திரியாகும். 

24. மகாசிவராத்திரியன்று பல சிவாலயங்களுக்கு சென்று வழிப்பட்டால் ஆத்மா சுத்தம் உண்டாகும். 

25. சிவராத்திரியன்று வீட்டில் பூஜை செய்யும் போது "ஓம் ஹாம் சிவாயநம'' என்று 3 தடவை சொல்லி தீபம் ஏற்ற வேண்டும். 

26. சிவராத்திரியன்று சிவாலயத்தை சுற்றி வரும் போது, சிவநாமங்களை உச்சரித்து கொண்டே செல்ல வேண்டும். 

27. சிவ நாமங்களில், "ஓம் ஸ்ரீ வைத்தீஸ் வராய நம, ஓம் பிரகதீஸ்வராய நம, கபாலீஸ்வராய நம, ஓம் வெள்ளீஸ்வராய நம, ஓம் மல்லீஸ் வராய நம, ஓம் முனீஸ்வராய நம, ஓம் விஸ்வேஸ்வராய நம, ஓம் சரபேஸ்வராய நம, ஓம் விருபாட்சஸ் வராய நம, ஓம் அக்னீஸ்வராய நம, ஓம் சோமமேஸ்வராய நம, ஓம் கும்பேஸ்வராய நம, ஓம் சர்வேஸ்வராய நம, ஓம் நந்தி கேஸ்வராய நம, ஓம் சதாசிவாய நம, ஓம் சாம்ப பரமேஸ்வராய நம என்று 16 நாமங்களை சொல்வது உயர்ந்தது. 

28. சிவ பெருமானை நாளை முறைப்படி வழிபட்டால், இம்மை மறுபை பலன்களை எளிதில் பெறலாம். 

29. சிவராத்திரியோடு தொடர்புடைய தலங்களில் நாளை வழிபாடு செய்தால் கூடுதல் பலன்களைப் பெறலாம். 

30. திருவிடை மருதூரில் உள்ள ஸ்ரீமகாலிங்க சுவாமி ஒரு சிவராத்திரி தினத்தன்று ஜோதி ரூபமாக வெளிபட்டு ருத்திரர்களுக்கு அருளினார். 

31. திருக்கழுக்குன்றத்தில் ஒரு மகா சிவராத்திரியன்று கோடி ருத்ரர்கள் பூஜித்து பலன் பெற்றனர். எனவே இத்தலம் ருத்திரக்கோடி என்று அழைக்கப்படுகிறது. 

32. பிரம்மனும், விஷ்ணுவும் அடிமுடி தேடிய போது சிவபெருமான் ஜோதி வடிவில் காட்சி கொடுத்தார். எனவே இத்தலத்தில் நம் ஜாமத்தில் சிவனை வழிபட்டால் நினைத்தது நடக்கும். 

33. சிவராத்திரியன்று திருக்கடைïரில் வழிபாடுகள் செய்தால் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் கிடைக்கும். 

34. மகா சிவராத்திரியன்று காளஹஸ்தியில் சுவாமியுடன் கிரிவலம் வருவது மிகுந்த புண்ணியப் பலன்களைத் தேடித்தரும். 

35. மதுரையில் உள்ள இம்மையில் நன்மை தருவார் கோவிலில் மகாசிவராத்திரியன்று சிவநாமம் சொல்லியபடி 108 தடவை பிரகாரத்தை வலம் வந்தால் தோஷங்கள் விலகும். 

36. சிதம்பரம் அருகில் உள்ள ஓமாம்புலிïர் தலத்தில் சிவராத்திரி அன்று வழிபடுவதும் சிறப்பானதாக கருதப்படுகிறது. 

37. சிவராத்திரியின் மகிமையை ஒரு வேடனுக்கு சொல்லப்பட்ட திருவைகாவூரில் சிவராத்திரியன்று வழிபட்டால், சிவராத்திரியின் மகிமை நிரந்தரமாக நம்மோடு சேர்ந்து விடும். 

38. சிவபெருமானை செண்பகம், தாழை ஆகிய இரு மலர்கள் தவிர மற்ற மலர்களால் அர்ச்சித்து பூஜை செய்யலாம். 

39. சிவபெருமானுக்கு மஞ்சள் பொடி கலக்காத, முனை உடையாத ஸ்வேத அட்சதை கொண்டு அர்ச்சித்து வழிபட்டால், எல்லா செல்வமும் கிடைக்கும். 

40. சிவபெருமானுக்கு நைவேத்தியம் செய்யும் போது, வில்லவப் பழம் வைத்து ஆராதனை செய்தால் நமது பூஜைக்கான முழு பலன்களும் கிடைக்கும். 

41. திருவான்மிïரில் உள்ள மருந்தீஸ்வரரை சிவராத்திரியன்று வழிபட்டால் நாள்பட்ட நோய்கள் உடனே குணமாகும். 

42. மகாசிவராத்திரியன்று ஒரே நாளில் திட்டை வசிஷ்டேஸ்வரர், தேராயன் பேட்டை ஸ்ரீமச்ச புரிஸ்வரர், பாபநாசம் 1078 சிவாலயம், திருவைக்காவூர் ஸ்ரீவில்வனேஸ்வரர் ஆகிய 4 ஆலயங்களையும் வழிபடுவது அளவற்ற நற்பலன்களைத் தரும். 

43. சிவராத்திரியன்று சரபரை வழிபட்டால் சங்கடங்கள் நீங்கும். 

44. சிவபெருமானை நாளை 19 வகை அபிஷேகங்கள் செய்து வழிபடலாம். 

45. சிவபெருமானை நாம் நாளை எந்த அளவுக்கு வில்வத்தால் அபிஷேக, ஆராதனை செய்கிறோமோ அந்த அளவுக்கு ஈசன் மனம் குளிர்ந்து நமக்கு அருள்வார். 

46. ஒரு தடவை பயன்படுத்திய வில்வ இலைகளை நன்கு கழுவிவிட்டு, மீண்டும், மீண்டும் ஐந்து தடவை சிவ பூஜைக்கு பயன்படுத்தலாம். 

47. நாளை காலை தொடங்கி நாளை மறு நாள் அதிகாலை வரை சிவ சிந்தனையில் சிவ பூஜைகள் செய்தால் பிறவி பெருங்கடலை எளிதில் கடக்கலாம் 

48. பதினாறு பட்டைகளுடன் கூடிய லிங்கம் கோடஷலிங்கம் எனப்படும். இந்த லிங்கத்தை சிவராத்திரியன்று வழிபட்டால் 16 வகை பேறுகளும் கிடைக்கும் 

49. நாளை நாம் செய்யும் சிவ வழிபாடு எல்லா நன்மைகளையும் தந்து இறுதியில் முக்தியையும் தரவல்லது. 

50. நாளை மகாசிவராத்திரி விரதம் இருப்பதோடு, சிவாலயங்களுக்கு பொருள் உதவி செய்தால், நூறு ஏகாதசி விரதம் இருந்த பலன் கிடைக்கும். அதோடு சிவனருளும் சேர்ந்து வரும் என்று சிவாகமம் கூறுகிறது.

மகா சிவராத்திரியின் சிறப்பு

இந்த உலகத்தைப் படைத்தவர் பிரம்மா. காப்பவர் திருமால் என்பதை அனைவரும் அறிவோம். திடீரென்று இவர்களுக்குள் ஒரு தகராறு ஏற்பட ஆரம்பித்தது. படைத்தவர்  பெரியவரா, காப்பவர் பெரியவரா எள்பதுதாள் இந்நத் தகராறு. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமல்லவா? உடன் தானே தேவர்கள் அனைவரும் கூடினார்கள். இவர்களில் யாரைப் பெரியவர் என்று எவ்விதம் முடிவு செய்வது என்று எ ண்ண ஆரம்பித்தார்கள்; கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தார்கள். பிரம்மா திருமால் இவர்களில் ஈசனின் அடிகளையும் முடிகளையும் முதலில் கண்டு வருகிறவரே சிறந்தவர் , முதன்மையானவர் என்ற முடிவிற்கு வந்தார்கன். உடனே இருவரும் விரைந்தார்கள்.

திருமால் பன்றி உருவம் கொண்டு பாதாளம் செல்ல ஆரம்பித்தார். பிரம்மா வானத்தில் பறக்க ஆரம்பித்தார். இருவரும் கடின உழைப்பை மேற்கொண்டார்கள். வான மண்டலத்தைச் சுற்றி வந்தவராலும் முடியைக் காண முடியவில்லை. பன்றி உருவம் கொண்டு பாதாளத்திற்குச் சென்றாலும் எதையுமே செய்ய முடியவில்லை; இருவருமே  சோர்வு கொண்டவர்களாகக் காணப்பட்டனர். இவர்களின் கவலையைப் போக்குவதற்காக அன்னை பார்வதி தேவி ஜோதி வடிவத்தில் காட்டினார். இவர்கள் இருவருக்கும் அருள் புரிந்த காலம் மாசி மாதம், தேய்பிறையில் சதுர்திதியின் போதுதான்; நேரமோ நடு இரவாகும். இதுதான் சிவராத்திரியாகப் போற்றப்படுகிறது.

சும்மா இருக்காமல் விளையாட்டாக ஈசனின் கண்களைப் பொத்த இந்த உலகத்தை இருள் தழுவிக் கொண்டது. எனவே, அனைவரும் செயலிழந்தனர். இவ்விதம் தாம் செய்த குற்றத்திற்குத் தண்டனை பெறுவதற்காக அன்னையார் நான்கு ஜாமங்களிலும் ஈசனைப் பூஜித்து வழிபட்டாள். அம்மையாருக்கு என்ன வரம் வேண்டும் என்று ஐயன் கேட்கவும், ' இந்த இரவு தங்கள் பெயராலேயே ' சிவராத்திரி ' என்று போற்றப்பட வேண்டும். விதிப்படி தங்களைப்போற்றி வணங்குபவர்களுக்குத் தாங்கள் அருள் பாலிக்க வேண்டும் என்றாள்; ஐயனும் அதற்கு இசைந்தார். இரவு 12 மணிக்கு மேல் ஒரு மணிக்கு இடைப்பட்ட காலத்தில்தான் பெருமான் இலிங்கமாக உருக்கொண்ட காலமாகும்.

இந்த வேளையில் இநைவனைப் பூஜித்து வருபவர்கள் அனைவரும் பெரும் பேறுகள் அடைவார்கள். தேவர்கள் அனைவரும் மாதந்தோறும் வருகின்ற சிவராத்திரியை கொண்டாடுவார்கள். மாசி மாதத்தில் பிரம்மாவும், பங்குனி மாதத்தில் விஷ்ணுவும், சித்திரை மாதத்தில் உமா தேவியும், வைகாசி மாதத்தில் சூரிய பகவானும், ஆனி மாதம் உருத்திரனும், ஆடி மாதம் முருகப் பெருமானும், ஆவணியில் சந்திரனும், புரட்டாசியில் நாகராஜனும், ஐப்பசியில் இந்திராதி தேவர்களும், கார்த்திகை மாதத்தில் சரஸ்வதியும், மார்கழியில் இலட் சுமியும், தை மாதத்தில் ஈஸ்வரனும், கொண்டாடுவதாகக் கூறப்படுகிறது.

மகா சிவராத்திரியன்று இரவெல்லாம் கண் விழித்து அபிஷேக ஆராதனை செய்ய வேண்டும். ஈசனின் திருநாமத்தை உச்சரித்த வண்ணம் இருக்க வேண்டும். நித்ய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என்று 5 வகைப்படுவதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தியன்று இரவு சிவராத்திரி வரும். மாசி மாதம் வரக்கூடிய சிவராத்திரி முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அன்று இறைவன் சுயம்புவாக  , ஜோதி வடிவமாக , அடியும் முடியும் இல்லாத பரம்பொருளாக நமக்கு அருள் செய்வார். சிவராத்திரி சிறப்புறக் கொண்டாடப்படும் இடங்கள் 12 என்று கூறப்படுகிறது.

சோமநாதம், ஸ்ரீ சைலம், உஜ்ஜையினி, ஓம் காரம், வைத்ய நாதம், பீம சங்காரம், இராமேசுவரம்,  நாகேசம், காசி, திரியம்பலம், வேதாரம், குக மேசம், ஆகியவைதான் 12 சிறப்பான இடங்கள். ஆனால் இவை தவிர சிவஸ்தலங்கள் அனைத்திலும் மகா சிவராத்திரிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். மேற்குறிப்பிட்ட 12 இடங்களும் ஜோதி லிங்கஸ்தலங்களாகும். எனவேதான் சிறப்பைப் பெற்றன எனலாம். மற்ற நாட்களில் சிவபெருமானைச் சிவஸ்தலங்களுக்கு சென்று வழிபடாவிட்டாலும் மகா சிவராத்திரி அன்றாவது விரதம் மேற்கொண்டு வணங்கி வருபவர்களுக்கு எல்லாம்  வல்ல இறைவன் அருள் தந்து காப்பான் என்பது உறுதி.
Brahma is the creator of this world . You can not save everyone know how .

Abhisheka to Nagareshvara Shiva Linga.

Brahma Muraari Suraarchita Lingam
Nirmala Bhashita Shobhita Lingam
Janmaja Dukha Vinaashaka Lingam
Tat Pranamaami Sadaa Shiva Lingam

Meaning: I bow before that Sada Shiva Linga, which is adored by Brahma, Vishnu and other Gods, which is praised by pure and holy speeches and which destroys the cycle of births and deaths.

Devamuni Pravaraarchita Lingam
Kaamadaham Karunaakara Lingam
Raavana Darpa Vinaashaka Lingam
Tat Pranamaami Sada Shiva Lingam

Meaning: I bow before that Sada Shiva Linga, which is the destroyer of desires, which the Devas and the sages worship, which is infinitely compassionate and which subdued the pride of Raavana.

Sarva Sugandha Sulepitha Lingam
Buddhi Vivardhana Kaarana Lingam
Siddha Suraasura Vanditha Lingam
Tat Pranamaami Sadaa Shiva Lingam

Meaning: I bow before that Sada Shiva Linga, which is lavishly smeared with variegated perfumes and scents, which elevates the power of thought and enkindles the light of discrimination, and before which the Siddhas and Suras and Asuras prostrate.

Kanaka Mahaamani Bhushitha Lingam
Phanipathi Veshtitha Shobhitha Lingam
Daksha Suyajna Vinaashaka Lingam
Tat Pranamaami Sadaa Shiva Lingam

Meaning: I bow before that Sada Shiva Linga, the destroyer of Dakshas sacrifice, which is decorated with various ornaments, studded with different gems and rubies and which glows with the garland of the serpent Lord coiled around it.

Kumkuma Chandana Lepitha Lingam
Pankaja Haara Sushobhitha Lingam
Sanchitha Paapa Vinaashaka Lingam
Tat Pranamaami Sadaa Shiva Lingam

Meaning: I bow before that Sada Shiva Linga, which is smeared with saffron and sandal paste, which is decorated with lotus garlands and which wipes out all accumulated sins.

Devaganaarchitha Sevitha Lingam
Bhaavair Bhakti Bhirevacha Lingam
Dinakara Koti Prabhakara Lingam
Tat Pranamaami Sadaa Shiva Lingam

Meaning: I bow before that Sada Shiva Linga which is worshipped by the multitude of Gods with genuine thoughts full of faith and devotion and whose splendor is like that of a million suns.

Ashta Dalopari Veshtitha Lingam
Sarva Samudbhava Kaarana Lingam
Ashta Daridra Vinaashaka Lingam
Tat Pranamaami Sadaa Shiva Lingam

Meaning: I bow before that Sada Shiva Linga, destroyer of all poverty and misery in its eight aspects, which is the cause of all creation and which stands on the eight petalled Lotus.

Suraguru Suravara Pujitha Lingam
Suravana Pushpa Sadaarchitha Lingam
Paraatparam Paramatmaka Lingam
Tat Pranamaami Sadaa Shiva Lingam
Meaning: I bow before that Sada Shiva Linga which is the Transcendent Being and the Supreme Self, worshipped by all Suras and their preceptor 

SankataHara / Sankashti Chaturthi: Today is Chaturthi. If thr Chaturthi falls on a Tuesday it is called Angarki Sankashti Chaturthi. Angarki Sankashti Chaturthi is considered highly auspicious among all Sankashti Chaturthi days. On this day, the devotees observe strict fast. They break the fast at night after having darshan/auspicious sight of the moon preceded by prayers to Lord Ganesha. The Angarki Chaturthi (angarak in Sanskrit), devotees believe their wishes would be fulfilled if they pray on this auspicious day.

IMPORTANT FOR POOJAS


வீட்டில் பூஜை செய்யும் போது தெரிந்து கொள்ள வேண்டிய நடைமுறைகள் !
நாம் வீட்டில் பூஜைகள் செய்யும் பொழுது பூஜா விதானம் அல்லது எந்த பூஜை செய்கிறோமோ அதற்குண்டான புத்தகத்தை வைத்துக் கொண்டு பூஜை சிறப்பாக செய்து விடுவோம். அன்றைய கிழமை, திதி, நட்சத்திரம் ஆகியவற்றை தினசரி காலண்டரை வைத்துக் கொண்டு சொல்லி விடுவோம். ஆனால், ருது என்ன வென்று சரியாகத் தெரிந்து இருக்காது. பூஜை முடிந்ததும் பழங்கள், பக்ஷணங்கள் எல்லாம் இருக்கும். அவற்றின் நிவேதனப் பெயர்கள் தெரிந்து இருக்காது. இந்த நிவேதனப் பெயர்களை தெரிந்து கொண்டு பூஜை செய்தால் இன்னும் சுலபமாக இருக்கும்.

1. கதலீபலம் - வாழைப்பழம்
2. பீஜாபூரபலம் - கொய்யாப்பழம்
3. வேத்ர பலம் - பெரப்பம் பழம்
4. பதரி பலம் - எலந்தைப் பழம்
5. கர்ஜுர பலம் - பேரிச்சம் பழம்
6. ஜம்பூ பலம் - நாவல் பழம்
7. கபித்த பலம் - விளாம் பழம்
8. த்ராஷா பலம் - திராøக்ஷ பழம்
9. சூ பழம் - மாம்பழம்
10. மாதுஸங்கபழம் - மாதுளம் பழம்
11. நாரங்கபலம் - நார்த்தம்பழம் அல்லது சாத்துக்குடி
12. பனஸ பலம் - பலாப் பழம்
13. உர்வாருகம் - வெள்ளரிக்காய்
14. ஜம்பீர பலம் - எலுமிச்சம் பழம்
15. இக்ஷúகண்டம் - கரும்பு
16. சணகம் - கடலை
17. ப்ருதுகம் - அவல்
18. ஸர்க்கரா - சர்க்கரை
19. ததி - தயிர்
20. குடோபஹாரம் - வெல்லம்
21. ஆப்பிள் - காஷ்மீர பலம்
22. அமிருதம் - தீர்த்தம்
23. நாரிகேளம் - தேங்காய்
24. ஸால்யன்னம் - சம்பா அன்னம்
25. குளா பூபம் - அதிரசம், அப்பம்
26. தத்யன்னம் - தயிர் சாதம்
27. திந்திரியன்னம் - புளியோதரை
28. ஸர்கரான்னம் - சர்க்கரை பொங்கல்
29. மாஷா பூபம் - வடை
30. ரஸகண்டம் - கற்கண்டு
31. மோதகம் - கொழுக்கட்டை
32. திலான்னம் - எள்ளு சாதம்
33. ஆஜ்யோபகாரம் - நெய்
34. லட்டூகம் - லட்டு
35. சித்ரான்னம் - பலவகை கலந்த சாதம்
36. நாரிகேளகண்டத்வயம் - இரண்டாக உடைத்த தேங்காய்
37. க்ருதகுள பாயஸம் - வெல்லம் போட்ட பாயஸம்
38. கோக்ஷீரம் - பசும் பால்

ருதுக்கள்

சித்திரை, வைகாசி - வஸந்த ருது
ஆனி, ஆடி - க்ரீஷ்ம ருது
ஆவணி, புரட்டாசி - வர்ஷ ருது
ஐப்பசி, கார்த்திகை - சரத் ருது
மார்கழி, தை - ஹேமந்த ருது
மாசி, பங்குனி - சிசிர ருது

கிழமைகளைச் சொல்லும் முறை

ஞாயிறு - பானு வாஸர
திங்கள் - இந்து வாஸர
செவ்வாய் - பவும வாஸர
புதன் - சவும்ய வாஸர
வியாழன் - குரு வாஸர
வெள்ளி - ப்ருகு வாஸர
சனி - ஸ்திர வாஸர

பூஜைகள் செய்யும் பொழுது, மாதங்களைச் சொல்ல வேண்டிய முறை

சித்திரை - மேஷ மாஸே
வைகாசி - ரிஷப மாஸே
ஆனி - மிதுன மாஸே
ஆடி - கடக மாஸே
ஆவணி - ஸிம்ம மாஸே
புரட்டாசி - கன்யா மாஸே
ஐப்பசி - துலா மாஸே
கார்த்திகை - வ்ருச்சிக மாஸே
மார்கழி - தனுர் மாஸே
தை - மகர மாஸே
மாசி - கும்ப மாஸே
பங்குனி - மீன மாஸே.

காசிக்குப் போயும் பாவம் தொலையலியே::::


காசிக்குப் போனால் பாவம் தொலையும் என்பார்கள். காசியிலேயே பாவம் செய்பவர்கள் இருக்கிறார்கள். காசியில் சுற்றித்திரியும் போதும், பாவ எண்ணங்களுடன் திரிபவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் வாழ்வில் முக்தியே கிடைக்காதபடி செய்து விடுவார் தண்டபாணி பைரவர்.

காசியில் இரண்டு பைரவர் கோயில்கள் உண்டு. ஒன்று காலபைரவர் கோயில், இது மிகவும் பிரசித்தி பெற்றது. ஆனால், இதன் அருகிலுள்ள "தண்டபாணி மந்திரில்' உள்ள தண்டநாயகர் என்னும் தண்டபாணி பைரவர், காசிக்குப் போகிறவர்களைத் தரம்பிரித்து பாவ புண்ணியங்களை வழங்குபவராக உள்ளார்.

குபேரனைத் தலைவராகக் கொண்ட இனத்தவர் யட்சர்கள் எனப்படுவர். இவர்களில் குணபத்திரன் என்பவர் கந்தமாதன பர்வதம் என்ற மலையில் வசித்து வந்தார். இவர் தவமிருந்து பெற்ற பிள்ளை ஹரிகேசவன். இவர் சிறந்த சிவபக்தராகத் திகழ்ந்தார். குணபத்திரன், தன் மகனை தங்கள் குல தலைவரான குபேரனை வழிபடும் படி தூண்டினார்.

""ஆஹா! குபேரனா நம் தலைவர்! அவர் சிவபெருமானிடம் இருந்து சகலநிதிகளையும் பெற்று உலகத்திற்கே பொருள் தருபவராயிற்றே! அவரது தயவிருந்தால், அவரே என்னை சிவபெருமானிடம் சேர்த்து விடுவாரே!'' என்று அப்போதும் சிவபெருமானின் பெருமைகளையே பேசினார்.

ஒருநாள், சிவனைக் காண வேண்டும் என்ற உந்துதல் அதிகமானது. அவர் காசியில் வசிக்கிறார் என்பதால், அங்கே செல்ல விரும்பினார் ஹரிகேசவன். வீட்டை விட்டு வெளியேறி வெகுதூரம் சென்று, சிவபெருமானை நினைத்து தவத்தை தொடங்கி விட்டார். உணவு. உறக்கம் மறந்து தியானத்தில் ஆழ்ந்ததால், எலும்பும் தோலுமாகி விட்டார். இத்தகைய பக்தனுக்கு அருள்புரிய வந்தார் சிவபெருமான். ஆழ்ந்த தியானத்தில் இருந்த தன் பக்தனை எழுப்பினார். ஹரிகேசவனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. அவன் முன்னால் ஒரு பெரிய ஆறு ஓடிக்கொண்டிருந்தது.

பக்தர்கள் "ஹரஹர சங்கர, சிவசிவ சங்கர' என்ற கோஷம் எழுப்பியபடி சென்று கொண்டிருந்தனர். அப்போது ரிஷப வாகனத்தில் சிவன் காட்சியளித்தார். ""ஹரிகேசவா! நீ விரும்பியபடியே காசிக்கு வந்துவிட்டாய். உன் தவத்தை மெச்சினேன். உன் விருப்பப்படி இனி காசியிலேயே தங்கியிரு. இவ்வூரே எனக்கும் மிகவும் பிடித்தமானது. உனக்கு ஒரு பணி தருவேன், அதைச் செய்ய வேண்டும்,'' என்றார்.
தலையை மட்டும் அசைத்து பதிலேதும் சொல்லாமல், கைகட்டி வாய் பொத்தி நின்ற கேசவனிடம்,""இந்த ஊருக்குள் யார் நுழைந்தாலும் அவர்களைக் கண்காணிக்க வேண்டும். இங்குள்ள எல்லாக் கணங்களுக்கும் (காவல் பூதங்கள்) நீயே தலைவன். நீயே இங்கு வருவோருக்கு உணவும், நீண்ட ஆயுளும் தர வேண்டும். இவ்வுலக வாழ்வு பொய்யானது என்ற ஞானத்தையும் அருளவேண்டும். இனி இந்த காசியின் அதிகாரி நீ தான். இங்கே வருபவர்கள் பாவ சிந்தனையுடன் திரிந்தால், அவர்களை இந்த ஊரை விட்டு வெளியே செல்லும்படியான மனநிலையை உருவாக்க வேண்டும். இங்கே நல்லவர்கள் மட்டுமே தங்க வேண்டும். உன்னை மக்கள் "தண்டபைரவர்' என்பர். உனக்கு தேவ சரீரம் தருகிறேன்,'' என்றார்.

ஹரிகேசவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அப்போது உருவானது தான் "தண்டபாணி மந்திர்'. காசிக்குப் போனால், இந்தக் கோயிலுக்குச் சென்று பிறப்பற்ற நிலையை அடைய வேண்டி வாருங்கள்.


TIRUMALA, FEB 6, 2014: In connection with the “Surya Jayanthi Mahotsavam” on February 6, the Lord Malayappa Swamy in the guise of Lord Suryanarayana Murthy took a celestial ride on the finely decked “Surya Prabha” Vahanam from 5.30am to 8.00am. The Malayappaswamy waited in south mada street till sun rays fall on him at 6.58am

Photo: TIRUMALA, FEB 6, 2014:  In connection with the “Surya Jayanthi Mahotsavam” on February 6, the Lord Malayappa Swamy in the guise of Lord Suryanarayana Murthy took a celestial ride on the finely decked “Surya Prabha” Vahanam from 5.30am to 8.00am. The Malayappaswamy waited in south mada street till sun rays fall on him at 6.58am

THAI VELLI KIZHAMAI ~ தை வெள்ளிக்கிழமை

Photo

Photo

07th February 2014, is the eighth day of the waxing moon in the Tamil month of Thai (தை ) or the Hindi month of Magh, and is the day of Bhishma Ashtami (பீஷ்மாஷ்டமி ). Occurring the day after Ratha Saptami (ரத-ஸப்தமி)


People as per their faith believe in different Gods. Like, someone has faith in "Lord Rama" & someone has faith in "Lord Krishna". To someone "Lord Shiva" is dear & to other "Lord Ganesha" is dear. Some have faith in Goddess "Durga / Kali" while someone has "Lord Hanumana" or "ayyappan" close to heart. 

In fact God is one only but is known in this world by different names due to faith of different persons in different manifestations of God. But in ,whatever, form you love God, He reciprocates you back in the same way. This has been confirmed by "Lord Krishna" in Bhagwat Gita.

"ye yatha mam prapadyante,
tams tathaiva bhajamy aham,
mama vartmanuvartante,
manushyah Arjuna sarvasah".

"Sri Krishna says to Arjuna: Howsoever, men approach Me & surrender unto Me, even so do I seek them; for all men follow Me & My path in all respects.

So as per the words of God, the only thing necessary in life is to have faith in God & it is immaterial in which form you seek him. If you have faith in Him & you Love Him, then it is for sure that God shall be with you always & shall reciprocate to the Love that you shower on Him. 
In the Puranic terminology Lakshmi stands for all powers, all faculties. The total manifested power potential in the Omnipotent is Lakshmi.