SWAMY SARANAM...GURUVE SARANAM...TODAY POOJA AT SANNIDHANAM













SWAMY SARANAM....GURUVE SARANAM...GOOD MORNING .. WISH YOU ALL A BLESSED & A DIVINE " SHANI MAHA PRADOSHAM " PRADOSHAM IS THE DAY WHEN LORD SHIVA HIMSELF LIBERATES PEOPLE FROM BAD KARMA .. ON THIS DAY ONLY LORD SHIVA DRANK POISON OF THE WORLD (POISON IS THE KARMA OF PEOPLE) HENCE EVERYONE GETS AN OPPORTUNITY TO CLEANSE THEIR KARMA ON "MAHA SHANI PRADOSHAM " STAY BLESSED .. " OM NAMASHIVAYA ! JAI BHOLE NATH "

” வடங்கெழுமலை மத்தாக வானவர் அசுரரொடு கடைந்த பொழுதெழுந்த நஞ்சங்கண்டு பல்தேவரஞ்சி அடைந்து நும் சரணமென்ன அருள் பெரிதுடையராகி தடங்கடல் நஞ்சமுண்டார் சாய்க்காடு மேவினாரே “ (திருநாவுக்கரசர்)
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் மிக முக்கியமானது பிரதோஷ விரதமாகும் .. அதிலும் சனிக்கிழமையன்று திரயோதசித் திதியும் கூடிவரும் இந்நாளே ‘ சனி மஹா பிரதோஷமாகும் “ உன்னதமான இந்நாளில் சர்வபாபவிமோசனம் பெற்று சகலநலன்களும் பெற்றுய்வீர்களாக !
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
சாதாரண பிரதோஷவேளையில் சிவாலயம் சென்று வழிபட்டால் 1 வருடம் ஆலயம் சென்று இறைவழிபாடு செய்த பலனும் .. சனிமஹா பிரதோஷத்தன்று அவ்வாறு வழிபடும்போது 5 வருடம் ஆலயவழிபாடு செய்த பலனும் கிடைக்கும் என்பது நம்பிக்கை ..
சித்திரை .. வைகாசி .. ஐப்பசி .. கார்த்திகை மாதங்களில் வரக்கூடிய சனிபிரதோஷங்கள் “சனிமஹாபிரதோஷங்கள் “ என்று அழைக்கப்படுகின்றன .. இன்று சனிமஹாபிரதோஷநாளில் சிவதரிசனம் செய்வது மிகுந்த நற்பலன்களைத் தரும் .. வறுமை விலகும் .. நோய்கள் நீங்கும் .. சகலகாரியங்களிலும் வெற்றி நிச்சயம் கிட்டும் .. சகலசௌபாக்கியங்களையும் தரக்கூடியது “சனிமஹாபிரதோஷ வழிபாடு “
இதனை “ சர்வபாபவிமோசனம் “ என்றும் அழைப்பார்கள் .. சனிக்கிழமையன்று வருகிற பிரதோஷத்தில் கலந்துகொண்டு சிவனாருக்கும் நந்திதேவருக்கும் நடைபெறும் பூஜையைக் கண்ணாரக்கண்டு தரிசித்தால் சகலபாபங்களும் விலகும் .. புண்ணியங்களும் அதன்பலாபலன்களும் பெருகும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர் ..
பிரதோஷ பூஜை மேற்கொள்ளும்போது அறிவு வளரும் .. நினைவாற்றல் பெருகும் .. எந்த பெரிய தோஷமென்றாலும் ஈசனை வழிபட நீங்குகிறது .. ஆகவே இன்று மாலைவேளையில் 4.30 - 6.00 மணிவரையிலான பிரதோஷவேளையில் சிவாலயங்களில் நடைபெறும் பிரதோஷ வழிபாடுகளில் கலந்துகொண்டு புண்ணியம் பெறுவீர்களாக !
“ ஓம் நமசிவாய “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .
Image may contain: 1 person

SWAMY SARANAM...GURUVE SARANAM













SWAMY SARANAM. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED & A DIVINE " DEVUTTHANA " (PRABHODINI) EKADASHI .. ON THIS DAY WHO EVER HONORS IT BY FASTING & REMAINING AWAKE THROUGHOUT THE NIGHT THE SUPREME LORD SHREE VISHNU PERSONALLY TERMINATES THE SINFUL REACTIONS THAT SOUL HAS AQUIRED BY THE ACTIONS OF HIS MIND .. BODY & WORDS TOO .. " OM HARI OM " .. stay blessed .

 தேடுவாய் உலகத்தையாளும் தேவனின் ஒளிமயமான ஒளி உருவை ! பாடுவாய் ஹரிநாமம் ஓதுவாய் கண்ணனின் கீதை ! இடைவிடா பாவனையால் நல்லோர்மட்டிலே மனதை நிறுத்து ! செல்வம் உண்டேல் ஏழைக்குதவு ! புலனும் மனமும் ஒழுங்குபட்டாலே காண்பாய் உள்ளத்தினுள்ளேயே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ஐப்பசிமாத 4ம் வெள்ளியில் வீட்டின் தரித்திர நிலையை மாற்றி சுபீட்சம் தந்தருளும் விஷ்ணுபகவானுக்கு உகந்த “ தேவ உத்தான “ ஏகாதசித் திதியில் பகவானை வழிபடுவது மென்மேலும் மேன்மையத் தந்தருளும் ..
ஓம் நாராயணாய வித்மஹே !
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
இன்றைய சுக்லபட்ச ஏகாதசித் திதியை (வளர்பிறை) தேவோத்தானி .. ஹரிபோதினி .. உத்தான ஏகாதசி என்னும் பெயர்களாலும் அழைப்பார்கள் .. உத்தான ஏகாதசியில் விரதமிருந்து மஹாவிஷ்ணுவை வழிபடுவோர்கள் மகத்தான பலன்களைப் பெற்று மகோன்னதமாக வாழ்வார்கள் என்பது ஐதீகம் !
உத்தான ஏகாதசியில் கூடுமானவரை விரதத்தை முறையாக அனுஷ்டிப்பது உத்தமம் .. இயலாதவர்கள் வயதானவர்கள் பால் .. பழம் .. மிதமான உணவுகள் எடுத்துக்கொள்ளலாம் .. மாலையில் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசிமாலை சார்த்தி வழிபடுங்கள் எல்லா சத்விஷயங்களும் உங்களைத் தேடிவரும் ..
இன்றைய தினத்தில் யாரொருவர் பக்தி சிரத்தையுடன் சிறிதளவேனும் புண்ணியம் செய்வார்களேயானால் அது மலையளவுக்கு ஈடாகிறது ..
“ ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 1 person, text