SWAMY SARANAM...GURUVE SARANAM.GOOD MORNING . WISH YOU ALL A BLESSED & A DIVINE " KARTHIGAI MONTH " .. THE AUSPICIOUS & CELEBRATED " KARTHIGAI MONTH " BEGINS TODAY ..LORD AIYAPPA DEVOTEES START THE 41 DAYS AIYAPPA DEEKSHA VIRADAM & THIS MONTH IS ALSO HIGHLY AUSPICIOUS FOR LORD SKANDA & LORD SHIVA TOO .. MAY LORD ARDHA NAAREESHWAR BLESS YOU ALL FOR A PROSPEROUS LIFE .. " OM SHIVSHATHI OM ! OM SHREE ARDHA NAREESHWAR "
அன்னையும் அரனும் இணைந்த திருக்காட்சி
ஆண் பெண் சமமென உணர்த்தும் நற்சாட்சி
அம்மையும் அப்பனுமாய் துதித்திடும் அடியவர்க்கு அருள்தரும் அர்த்தநாரீஸ்வரடி பணிந்திடுவோம் “
ஆண் பெண் சமமென உணர்த்தும் நற்சாட்சி
அம்மையும் அப்பனுமாய் துதித்திடும் அடியவர்க்கு அருள்தரும் அர்த்தநாரீஸ்வரடி பணிந்திடுவோம் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் சிவாலயங்களில் ஒளிரும் விளக்கொளியில் மின்னும் ஆன்மீக அதிர்வலைகளால் நம் அகத்தினுள் உள்ள அழுக்கினை அகற்றி .. மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தருளும் “ கார்த்திகைமாதத்தின் “ முதல்நாளாகிய இன்று .. அம்மையப்பனைத் துதித்து தங்களனைவரது வாழ்வும் தீபத்தின் ஒளிபோல் என்றும் பிரகாசமாகத் திகழ்ந்திட பிரார்த்திப்போமாக !
ஓம் தபஸ்ய ச வாமபாக மாய வித்மஹே !
சிவசக்த்யாய தீமஹி !
தந்நோ அர்த்தநாரீஸ்வர ப்ரசோதயாத் !!
சிவசக்த்யாய தீமஹி !
தந்நோ அர்த்தநாரீஸ்வர ப்ரசோதயாத் !!
கார்த்திகை முதலாம் நாள் “ முடவன் முழுக்கு “ என்பார்கள் .. ஐப்பசி மாதம் முழுவதும் ஒருநாள்கூட ஸ்ரீரங்கம் மற்றும் காவிரியில் நீராட முடியாதவர்கள் இன்று அவசியம் காவேரியில் நீராடவேண்டும் இதனை ”துலாஸ்நானம் ” என்பார்கள் ..
கார்த்திகை ஞாயிறு மிகவும் போற்றப்படுகிறது .. இதனால் யமவாதனை .. யமபயம் நீங்கும் .. ஆண்டுதோறும் கார்த்திகைமாத ஞாயிற்றுக் கிழமைகளில் அதிகாலை 5.. மணிமுதல் 6 மணிக்குள் சிவபெருமானும் .. பார்வதிதேவியும் அஸ்திர தேவரோடு பிரகாரவலம் வந்து குப்தகங்கையின் கிழக்குக் கரையில் ஆசி வழங்கி அருளுகின்றனர் .. கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த குப்தகங்கையில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷங்கள் - உண்டபாவம் .. திருடுவதால் வரும்பாவம் மற்றும் மனச்சஞ்சலத்தால் ஏற்பட்ட பாவங்கள் ஆகியவை நீங்கிவிடும் .. என்று “பிரம்மாண்ட புராணம் “ கூறுகிறது ..
கார்த்திகையில் நம்முடைய உடல் மற்றும் உள்ளத்தின் இயக்கம் சீராக இருக்கும் .. ந்னவே இம்மாத்தின் முதன்நாளாகிய இன்று தர்மசாஸ்தாவாகிய ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளப்படுகிறது .. இன்றுமுதல் ஐயப்ப பக்தர்களின் பஜனைப் பாடல்களுடன்கூடிய சரணகோஷங்களும் கேட்கும் ..
கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும் .. இல்லங்களில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும் ..
“ ஓம் ஸ்ரீ அர்த்தநாரீஸ்வராய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
“ ஓம் ஸ்ரீ அர்த்தநாரீஸ்வராய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

ஐப்பசி மாத கடைசி நாளன்று காவிரியில் மேற்கொள்ளப்படும் புனித நீராடல் "கடை முகம்/கடை முழுக்கு" என்றும் கார்த்திகை மாதம் முதல் நாளன்று மேற்கொள்ளப்படும் புனித நீராடல் "முடவன் முழுக்கு" என்றும் அழைக்கப்படுகிறது. அதன்படி இன்று ஐப்பசி மாதத்தின் கடைசி நாளான கடைமுகம் ஆகும். நாளை கார்த்திகை மாதத்தின் முதல் நாளில் கடைமுக புண்ணிய காலமாக அனுஷ்ட்டிக்கப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் காவிரியில் அனைத்துப் புண்ணிய நதிகளும் வந்து கலப்பதால் இந்த மாதத்தில் காவிரியில் நீராடுவது அனைத்துத் தீர்த்தங்களிலும் நீராடிய பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.


SWAMY SARANAM...GURUVE SARANAM...GOOD MORNING .. WISH YOU ALL A BLESSED & A DIVINE " SANKASHTI CHATURTHI " (CHATURTI THITHI FINISHES TONIGHT ONLY ) MAY LORD GANESHA REMOVE ALL THE OBSTACLES FROM YOUR LIFE & LEAD YOU TO A PROSPEROUS LIFE .. " JAI SHREE GANESHA "
எமக்கு வேண்டும் வரங்களை இசைப்போம் கேளாய் கணபதி ! மனதில் சலனம் இல்லாமல் மதியில் இருளே தோன்றாமல் நினைக்கும் பொழுது நின் மௌனநிலை வந்திட நின்செயல்வேண்டும் ! கனக்கும் செல்வம் நூறு வயது இவையும் தர நீ கடவாயே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் விநாயகப்பெருமானுக்கு உகந்த ” சங்கடஹர சதுர்த்தி ” விரதம் நேற்றிரவே ஆரம்பமாகி .. இன்றிரவு சந்திரதரிசனத்துடன் நிறைவு பெறுகிறது .. தாங்கள் எடுத்த செயல்கள் யாவும் தங்குதடையின்றி நடைபெறவும் .. அறிவு .. ஆற்றல் .. தெளிந்த ஞானம் பெற்றிடவும் விக்ன விநாயகரைப் பிரார்த்திப்போமாக !
ஓம் தத்புருஷாய வித்மஹே !
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
ஜோதிட சாஸ்திரப்படி விநாயகர் கேதுவின் அம்சம் கேதுவால் ஏற்படும் களத்திரதோஷம் .. மாங்கல்ய தோஷம் .. புத்திரதோஷம் ஆகியவற்றை நிவர்த்தி செய்யக்கூடியவர் ..
சந்திரனால் ஏற்படக்கூடிய தடைகள் .. தோஷங்களை போக்கக்கூடியவர் .. சந்திரபகவானும் தனது தோஷங்கள் நீங்கவும் .. தனது தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீவிநாயகப் பெருமானை நினைத்து கடும் தவம்செய்திட சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார் ..
“ சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தேயே”
பொருள் - வெள்ளை உடை அணிந்தவரும் .. மகிழ்ச்சிகரமான முகத்தைக் கொண்டவருமான அந்த விக்னவிநாயகரைத் தொழுகின்றேன் ! என்று பிள்ளையாரை வணங்கி நெற்றியில் குட்டிக்கொண்டு எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பித்தால் வெற்றி நிச்சயம் !
“ ஓம் விக்னேஷ்வராய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

உடுப்பி கிருஷ்ணரை ஜன்னல் வழியே ஆனந்த தரிசனம்
உடுப்பி கிருஷ்ணரை ஜன்னல் வழியே ஆனந்த தரிசனம்
ஏன்? ஜன்னல் வழியே!.... விளக்கம் இதோ!...
கன்னட பக்தர் கனகதாசர் ஒரு முறை பெருமாளை தரிசிக்க உடுப்பி வந்த போது பிராமணர்கள் மட்டுமே கோயிலுக்குள் செல்ல அனுமதி என்ற காரணத்தால் அவர் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
ஏன்? ஜன்னல் வழியே!.... விளக்கம் இதோ!...
கன்னட பக்தர் கனகதாசர் ஒரு முறை பெருமாளை தரிசிக்க உடுப்பி வந்த போது பிராமணர்கள் மட்டுமே கோயிலுக்குள் செல்ல அனுமதி என்ற காரணத்தால் அவர் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
எனவே கிருஷ்ணனை சிறிய துவாரத்தின் மூலம் காண முயன்றார், ஆனால் அவருக்கு கிருஷ்ணனின் பின் பக்கம் தான் தெரிந்தது. மனமுருகிப் பாட ஆரம்பிக்க, கிருஷ்ணர் முகத்தை துவாரத்தை நோக்கி திருப்பினார். இதுவே இன்று 'கனகணகிண்டி' என்றழைக்கப்படுகிறது.
இன்று நாமும் இந்த குட்டி கிருஷ்ணனை அந்த ஜன்னல் வழியாக தான் பார்க்க வேண்டும். எல்லா கோயில்களிலும் பெருமாளின் முகம் கோயிலின் வாசற்பக்கம் நோக்கியிருக்கும் ஆனால் உடுப்பியில் இது மாறி இருப்பதற்கு இதுவே காரணம்.
கோயில் குளத்துக்கு பக்கம் விறகுகளை தேர் போல அடுக்கி வைத்திருக்கிறார்கள்.....
ரொம்ப அழகாக இருக்கு ....ஆன இதை பற்றிய காரணம் தெரியவில்லை ..
கோயில் குளத்துக்கு பக்கம் விறகுகளை தேர் போல அடுக்கி வைத்திருக்கிறார்கள்.....
ரொம்ப அழகாக இருக்கு ....ஆன இதை பற்றிய காரணம் தெரியவில்லை ..



SWAMY SARANAM...GURUVE SARANAM.GOOD MORNING .. WISH YOU ALL A BLESSED & A DIVINE " ANNAABHISHEKAM " ANNAABHISHEKAM IS HELD ONLY ONCE A YEAR ON THE FULL MOON DAY OF NOVEMBER .. THIS SIGNIFIES HOW IMPORTANT ANNAM IS FOR HUMANITY & HOW IMPORTANCE FOR US TO UTILIZE ANNAM WITHOUT WASTAGE .. THE PEOPLE WHO BELIEVE THAT GOD IS THE CREATOR OF FOOD & LIFE & TO SHOW THE GRATITUDE FOR THE BOUNTY THEY HAVE RECEIVED .. STAY BLESSED " OM NAMASHIVAYA ! JAI BHOLE NATH
"அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ஐப்பசி பௌர்ணமித் திதியாகிய இன்று கல்லுக்குள்ள தேரைக்கும் .. கருப்பைக்குள்ள உயிர்க்கும் உள்ளுணர்வைத் தருபவன் தயாபரன் சிவனே ! அந்த லிங்கத்திருமேனிக்கு அண்ண்டு தோறும் இந்நாளில் அன்னாபிஷேகம் அனைத்து சிவாலயங்களிலும் நடைபெறும் .. தங்களனைவரும் சிவாலயம் சென்று சிவதரிசனம் செய்து கோடி சிவதரிசனம் செய்த பலனையும் .. நீண்டாயுளும் நினைத்தகாரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்களாக !
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
சாமவேதத்தில் ஒரு இடத்தில் “ அஹமன்னம் .. அஹமன்னம் .. அஹமன்னதோ “ என்று கூறப்பட்டுள்ளது .. அதாவது எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது .. அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுதுபடைக்கும் விழாதான் அன்னாபிஷேகம் !
ஐப்பசி மாதத்தில்தான் சந்திரன் பூமிக்கு மிக அருகில் வந்து தனது முழுஒளியையும் பூமியை நோக்கி வீசுவதாக கூறுகிறது வானவியல் .. நவக்கிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி என்பதால் ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேகம் செய்வது சிறப்பாகும் ..
அன்னத்தின் சிறப்பு - ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகின்றது ..
நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகின்றது ..
அரிசி நீரில் மூழ்கி .. தீயில்வெந்து அன்னமாகின்றது .. எனவே அன்னமும் பஞ்சபூதங்களின் சேர்க்கை .. இந்த அன்னம் அபிஷேகநிலையில் ஆண்டவன்மேனி முழுவதும் தழுவி அவனை அடைக்கலமாகின்றது .. அதன்மூலம் ஐம்பூதங்களும் அவனுள் அடக்கமென்பது புலனாகின்றது .. எனவே அவனே பரம்பொருள் என்பது தெள்ளத்தெளிவாகிறது ..
நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகின்றது ..
அரிசி நீரில் மூழ்கி .. தீயில்வெந்து அன்னமாகின்றது .. எனவே அன்னமும் பஞ்சபூதங்களின் சேர்க்கை .. இந்த அன்னம் அபிஷேகநிலையில் ஆண்டவன்மேனி முழுவதும் தழுவி அவனை அடைக்கலமாகின்றது .. அதன்மூலம் ஐம்பூதங்களும் அவனுள் அடக்கமென்பது புலனாகின்றது .. எனவே அவனே பரம்பொருள் என்பது தெள்ளத்தெளிவாகிறது ..
எல்லா உயிரினங்களும் வாழவேண்டும் .. அவ்வாறு வாழ்ந்தால்தான் மனிதனுக்கு தேவையான உணவு தடையின்றி கிடைக்கும் என்பதை அன்னாபிஷேக பிரசாதத்தை நீரில் வாழும் புழு .. பூச்சிகள் .. மீன்கள் .. மற்ற நீர்வாழ் உயிரினங்கள் எல்லாமும் பெறவேண்டுமென்ற உயரிய நோக்கத்தில் நீரில் கரைக்கப்படுகிறது ..
” அன்னபூர்ணே சதாபூர்ணே சங்கரபிராண வல்லபே
ஞான வைராக்ய சித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி “
தெள்ளத்தெளிந்தார்க்கு ஜீவனே சிவலிங்கம் என்பார் திருமூலர் .. அன்னத்தை வீணாக்கக்கூடாது அது தெய்வசொரூபமானது !
ஞான வைராக்ய சித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி “
தெள்ளத்தெளிந்தார்க்கு ஜீவனே சிவலிங்கம் என்பார் திருமூலர் .. அன்னத்தை வீணாக்கக்கூடாது அது தெய்வசொரூபமானது !
இறைபிரசாதத்தை உண்டு .. சிறந்தமுறையில் வியாபாரம் நடைபெறவும் .. குழந்தைகள் ஆரோக்கியம் .. கல்வியில் முன்னேற்றம் அடையவும் ஞாபகசக்தி பெருகவும் ஈஸ்வரனைப் பிரார்த்திப்போமாக !
“ ஓம் நமசிவாய “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
“ ஓம் நமசிவாய “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

Subscribe to:
Posts (Atom)




























































