SWAMY SARANAM..GURUVE SARANAM..
மேலானவற்றுக்கெல்லாம் மேலானவன் அரியதற்கும் மேலாக அரிதானவன் மிகுந்த சக்தி உள்ளவன் நிரந்தரமானவன் எவராலும் பக்தியால் அடையக்கூடியவன் ஒப்பற்றவன் முன்னைக்கும் முந்தையவன் ஒளிமயமானவன் ஞானிகளுக்கெல்லாம் முதன்மையான பரமஞானஸ்வரூபமான விஷ்ணுபகவானை நமஸ்கரிக்கின்றோம் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. மங்களகரமான வெள்ளிக்கிழமையில் விஷ்ணுபகவானுக்கு உகந்த “ உத்பன்ன ஏகாதசி “ விரதமும் சேர்ந்து வருவது மேலும் சிறப்பைத் தருகின்றது .. பாபங்கள் அனைத்தும் அகன்று நல்வாழ்க்கை தேடிவர பகவானைப் பிரார்த்திப்போமாக !
ஓம் நாராயணாய வித்மஹே !
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
இன்றைய ஏகாதசித் திதியை “ உத்பன்ன ஏகாதசி “ என்றும் .. “ உற்பத்தி ஏகாதசி “ என்றும் அழைப்பார்கள் .. இதுவே உலகில் தோன்றிய முதல் ஏகாதசி எனப் பெருமை பெறுகின்றது ..
புராணவரலாறு -
சத்யயுகத்தில் .. சந்திராவதி எனும் நகரத்தை தலைநகரமாகக் கொண்டு முரண் என்றொரு மகா பயங்கரமான ராட்சஸன் வாழ்ந்து வந்தான் .. இந்திரன் முதலிய தேவர்களை வென்று இந்திரப்பதவியை பறித்துக்கொண்டு தேவர்களை சுவர்க்கத்தைவிட்டு விரட்டியடித்து மக்களை மிகவும் துன்புறுத்தி வந்தான் ..
அவனது கொடுமைகளைத் தாங்கமுடியாத தேவர்கள் அனைவரும் பூமியில் மறைந்து வாழ்ந்து வந்தனர் .. பின்னர் இன்னும் எவ்வளவு காலம்தான் இவ்வாறு ஒளிந்து வாழ்வது இதற்கொரு முடிவுவேண்டி தங்களைக்காக்கும்படி அனைவரும் மகாதேவரை சரணடைந்தனர் ..
சிவபெருமானின் ஆணைப்படி தேவர்கள் விஷ்ணுபகவானிடம் முறையிட பகவானும் பல ஆண்டுகள்வரை போர்புரிந்தும் அரக்கனை வெல்ல இயலாமல் சோர்ந்து போகவே ஓய்வெடுக்கவேண்டி பத்ரிகாஸ்ரமத்தில் ஹேமவதி என்னும் பெயர்கொண்ட குகையில் சயனத்தில் ஆழ்ந்தார் ..
அச்சமயம் அக்குகைக்குள் நுழைந்த ராட்சஸன் விஷ்ணுபகவானைக் கொல்ல எத்தணிக்கையில் பகவானின் உடம்பிலிருந்து திவ்யவஸ்திரங்களுடன் சகல ஆயுதங்களோடும் ஒரு மங்கை தோன்றி அரக்கனை அழித்தாள் .. பகவானும் சயனத்திலிருந்து எழுந்து அனைத்தும் அறிந்து அரக்கனை வதைத்ததால் மூவுலகிலும் உள்ள தேவர்களுக்கு மகிழ்ச்சியையும் .. அவர்கள் இழந்ததையும் மீட்டு தந்தமைக்கும் “ ஏகாதசியில் பிறந்தாதாலும் “ ஏகாதசி “ என்றே அப்பெண்ணுக்கு பெயர்சூட்டி வாழ்த்தியருளினார்
மேலும் பகவானின் அங்கத்திலிருந்து தோன்றியதால் (உத்பன்னம்) புவியில் இனி “உத்பன்ன ஏகாதசி “ என்னும் பெயரால் அறியப்பெறுவாய் .. எவர் ஒருவர் இதனை அனுஷ்டிக்கின்றாரோ அவர் சகல பாபங்களும் அகன்று முடிவில் முக்தியைப் பெறுவார் .. என்று திருவாய் மலர்ந்தருளினார் ..
எவரொருவர் இந்நாளைப்பற்றி கேட்டோ படித்தோவரின் அவரும் இறுதியில் விஷ்ணுலோகத்தைச் சென்றடைவார் என்று பவிஷ்யோத்ர புராணம் விவரிக்கின்றது ..
“ ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .

SWAMY SARANAM GURUVE SARANAM GOOD MORNING .. WISH YOU ALL A BLESSED TUESDAY & A DIVINE KARTHIGAI MONTH .. ON THIS AUSPICIOUS MONTH HINDUS LITUP THEIR HOUSES WITH ROWS OF OIL LAMPS & OUT SIDE TOO .. ANYONE CAN LIT THE POOJA LAMP .. BUT IT IS CONSIDERED TO BE ONE OF THE DUTIES OF A MARRIED FEMALE .. " GRAHALAKSHMI " TO LIT THE " DEEPALAKSHMI " .. TO WORSHIP THE " SREELAKSHMI " IS THE HIGH MERIT .. STAY BLESSED .. " JAI MAA DEEPALAKSHMI "
விளக்கே திருவிளக்கே ! வேந்தன் உடன்பிறப்பே ஜோதிமணிவிளக்கே ! சீதேவி பொன்மணியே ! அந்தி விளக்கே அலங்காரநாயகியே ! காந்தி விளக்கே ! காமாட்சித்தாயாரே ! பசும்பொன் விளக்கு வைத்துப் பஞ்சுத்திரிபோட்டு கோலமுடன் ஏற்றிவைத்தோம் அன்னையே ! உந்தன் மலரடியில் நாம் பணிந்தோம் வந்தவினை அகற்றி மகாபாக்கியம் தாரும் அம்மா “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் இருள்போக்கும் கார்த்திகஒ மாதத்தில் நம் மன இருளைப்போக்கி ஒளிமயமான எதிர்காலத்திற்கு நம் இல்லத்திலும் .. ஆலயத்திலும் தீபமேற்றி தீபஜோதியை பிரார்த்திப்போமாக ! தங்களனைவருக்கும் வளமோடு நல்வாழ்க்கையினை தந்தருள்வாளாக !
தீபலக்ஷ்மி துதி -
தீபோ ஜோதி பரப் ப்ரம்ஹ
தீபோ ஜோதி ஜனார்த்தன
தீபோ ஹ்ரது மே பாபம் ஸந்த்யா
தீபோ நமோஸ்துதே !!
தீபோ ஜோதி பரப் ப்ரம்ஹ
தீபோ ஜோதி ஜனார்த்தன
தீபோ ஹ்ரது மே பாபம் ஸந்த்யா
தீபோ நமோஸ்துதே !!
பொருள் - ஜோதிவடிவான தீபமே பிரம்மா ! அதுவே விஷ்ணு .. ஈசனும் அதுவே ! காலை மாலை இருவேளையும் எவர் வீட்டில் விளக்கு ஏற்றப்படுகிறதோ அந்த வீட்டில் உள்ளவர்களின் பாவங்கள் நீங்குகின்றன .. அப்படிப்பட்ட அருள் நிரம்பிய தீபலக்ஷ்மியை வணங்குகின்றோம் !!
” ஸுவர்ண வ்ருத்திம் குருமே குஹே ஸ்ரீ ஸுதானய வ்ருத்திம் குருமே க்ரு ஹே ஸ்ரீ கல்யாண வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ ”
பொருள் - தினமும் தீபம் ஏற்றப்படும் இல்லத்தில் பொன் .. பொருள் சேரும் .. தானியங்கள் குறைவிலாது பெருகும் .. அன்னப்பஞ்சம் இருக்காது எல்லா மங்களகாரியங்களும் தடைநீங்கிச் சிறப்பாக நடைபெறும் .. சகல செல்வங்களும் வந்துசேரும் ..
(விபூதி - என்பதற்கு ஐஸ்வர்யம் என்ற அர்த்தமும் உண்டு ) வீட்டில் திருமகள் நீங்காது இருப்பாள் ..
(விபூதி - என்பதற்கு ஐஸ்வர்யம் என்ற அர்த்தமும் உண்டு ) வீட்டில் திருமகள் நீங்காது இருப்பாள் ..
கார்த்திகை மாதம் முழுவதும் தினமும் காலை மாலையில் வீடுகளிலும் .. ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது அக்னியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது ..
விளக்கேற்றும் நேரம் -
” ஊருக்குமுன் விளக்கேற்றினால் உயர்ந்த குடியாகும்” என்று ஒருபழமொழியே உள்ளது ..
” ஊருக்குமுன் விளக்கேற்றினால் உயர்ந்த குடியாகும்” என்று ஒருபழமொழியே உள்ளது ..
சூரியோதயத்திற்கு முன்னதான பிரம்மமுகூர்த்தவேளையில் (அதிகாலை 4.30 - 6.00) விளக்கேற்றினால் பெரும் புண்ணியம் கிட்டும் .. முன்வினைப்பாவம் நீங்கும் ..
மாலை 4.30 - 6.00 மணிக்கு இடையே உள்ள பிரதோஷவேளை சிவபெருமானுக்கும் நரசிம்மமூர்த்திக்கும் மிகவும் உகந்தவை .. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை .. கல்வித்தடை நீங்கும் ..
தீபத்தின் சுடரில் - மஹாலக்ஷ்மியும் ..
ஒளியில் - சரஸ்வதியும்
வெப்பத்தில் - பார்வதிதேவியும் எழுந்தருள்வதாக ஐதீகம் .. எனவே வடக்கு .. கிழக்கு .. மேற்கு நோக்கி தீபம் ஏற்றி இறைவழிபாடு செய்வதன்மூலம் முப்பெரும் தேவியரின் த்ருவருளையும் ஒருங்கே பெறலாம் ..
ஒளியில் - சரஸ்வதியும்
வெப்பத்தில் - பார்வதிதேவியும் எழுந்தருள்வதாக ஐதீகம் .. எனவே வடக்கு .. கிழக்கு .. மேற்கு நோக்கி தீபம் ஏற்றி இறைவழிபாடு செய்வதன்மூலம் முப்பெரும் தேவியரின் த்ருவருளையும் ஒருங்கே பெறலாம் ..
நம் இல்லத்திலும் திருவிளக்கேற்றுவோம் ! தீபம்போல் தங்கள் வாழ்வும் சிறப்பாக பிரகாசிக்கும் .. என்றும் தீபலக்ஷ்மி காத்தருள்வாளாக !
“ ஓம் ஸ்ரீதீபலக்ஷ்மியே போற்றி ! போற்றி “

Subscribe to:
Posts (Atom)




























































