SWAMY SRANAM....GURUVE SARANAM

வேப்பூர்
ஆற்காட்டிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில், வேலூர் -ஆற்காடு நெடுஞ்சாலையில் பாலாற்றின் தென்புற கரையில் உள்ளது வசிஷ்டேஸ்வரர் கோவில். இது வசிஷ்ட முனிவர் வழிபட்ட தலமாகும். இங்கு இறைவன் வசிஷ்டேஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இறைவியின் திருநாமம் பாலகுஜாம்பிகை.
ஒரு காலத்தில் வேப்ப மரங்கள் நிறைந்து காணப்பட்டதால், இந்தப் பகுதி வேப்பூர் என அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வசிஷ்ட முனிவர் வழிபட்ட இடமாதலால், இங்கு வசிஷ்ட முனிவரின் சிலையும் உள்ளது. அம்மையப்பர் திருக்கல்யாண கோலத்தில் காட்சி அளிப்பது இந்த ஆலயத்தின் சிறப்பு.
Image may contain: indoor
Image may contain: sky and outdoor
Image may contain: one or more people




No comments:

Post a Comment