Swamy saranam...guruve saranam...today pooja at sannidhanam 29-1-22






 #சுருட்டபள்ளி

இன்று சனி மகா பிரதோஷம். ஆதலால் பிரதோஷத்திற்கு பிரசித்தி பெற்ற சிவாலங்களில் ஒன்றான சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் ஆலயம் பற்றி வாசிப்போம் யோசிப்போம் மனசீகமாக தரிசிப்போம்.
சிவபெருமானை நின்ற நிலையிலோ அமர்ந்த நிலையிலோ லிங்க வடிவிலோ தான் தரிசித்திருப்போம். பெருமாளை மட்டும்தான் சயனக்கோலத்தில் பார்க்கமுடியும். ஆனால் பார்வதியின் மடியில் தலை வைத்து சயனக்கோலத்தில் காட்சி தரும் சிவனை சுருட்டப்பள்ளி திருத்தலத்தில் தரிசிக்கலாம். அவரது திருநாமம் பள்ளிகொண்டீஸ்வரர் என்பதாகும்
இத்தலம் உருவானதே பிரதோஷத்தையொட்டி தான். அதாவது அமுதம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது ஆரம்பத்தில் வெளிப்பட்ட ஆலகால விஷத்தை கண்டு அகிலமே அதிர்ந்த போது தாம் படைத்த ஜீவராசிகள் துன்புறுவதை பொறுக்காமல் ஈசன் அதை தானே உண்ண முன் வந்து விழுங்கினார்.
பிரதோஷத்திற்கு பிரசித்தி பெற்ற தலம் என்பதை உணர்த்தும் வகையில் கோயிலின் எதிரே பெரிய நந்தி அமைந்துள்ளது. அதனை அடுத்து அழகிய ராஜகோபுரம். உள்ளே நுழைந்தால் கொடிமரம் பலிபீடம் பிரதோச நந்தி என சிவாலயத்திற்கே உரிய எழிலுடன் விரிகிறது.






No comments:

Post a Comment