நெல்லுக்கு வேலியிட்ட இறைவன்!
|
)
சிறப்புத் தகவல்கள்...
ஸ்ரீநெல்லையப்பர் சந்நிதிக்கு அருகில் உள்ள தனிச் சந்நிதியில், பள்ளிகொண்ட ஆனந்த சயன பெருமாள் தரிசனம் தருகிறார். சிவலிங்க பூஜை செய்தபடி இருக்கும் இவருக்கு அருகில் காணப்படும் உத்ஸவரான பெருமாள், மார்பில் சிவலிங்கத்துடன் தரிசனம் தருகிறார். தன் தங்கையை மணந்த சிவபெருமானை, தமது மார்பில் தாங்கினார் எனும் ஐதீகத்தால் பெருமாளுக்கு இப்படியரு திருக்கோலம்.
நதியே நதியில் நீராடும் அதிசயம் நெல்லை திருத்தலத்தின் தனிச்சிறப்பு. நெல்லையப்பர் கோயிலில் நாயன்மார் சந்நிதிக்கு அருகில் தாமிரபரணி நதி, பெண் உருவில் காட்சி தருகிறாள். ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி, ஆவணி மூலம் மற்றும் தைப்பூசத்தின்போது இவள் தாமிரபரணிக்கு எழுந்தருளி நீராடுவாள். பொதுவாக தாமிரபரணியில் நீராடுவது, பாவங்களை நீக்கிப் புண்ணியம் சேர்க்கும் என்பார்கள். அந்த உண்மையை உணர்த்தவே இந்த வைபவம் நிகழ்த்தப்படுகிறது என்பர்.
|
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment