பன்வேல் குடியிருக்கும் பாசமான தெய்வமே 
குருவின் விரல்கள் மலர்களுடன் நர்த்தனம் புரிந்திட
மாறாத காதலுடன் மணம் பரப்பும் திருக்கோலம்
போதாது என அடியவனின் மனம் கூறும்


அன்பெனும் சிற்பி நீ
அருளெனும் உளி  கொண்டென்னைச் செதுக்குகிறாய்
அருவருப்பான​ கருங்கல் உருவமாய் நான்
தலை சிறந்த​ சிற்பியுன் கைபட்ட​ கணமதில்
அசிங்கமாயுள்ள பகுதிகள் கீழே விழுகின்றது
அதில் கோபம், குரோதம், ஆசை, வெறுப்பென 
தேவையற்ற​ பகுதிகளை நீக்கியென்னை
அருள் நிறைந்தவனாய் வடிக்கிறாய் 


இருள் சூழ்ந்த முகம் ஒளிபடர்கிறது 
அருள் சேர்ந்த​ கண்கள் மடல் விரிகிறது
கருநீலக் குருதி செந் நிறமாக​ 
ஒரு சேர்ந்து உடல் நிமிர​ 
கைகள் உன்னைக் கூப்புகிறது 

மாலை அணியும் நாள் நெருங்கிவர
மயங்குகிறது என்மனமே...
ஒரு மண்டலம் விரதம் இருக்க ஏங்கும் என் மனதினை
குரு அருள் கொண்டு நிரப்பிட வருகின்றோம்
அருகில் இருந்து காத்திடுவாய் ஐயப்பா தெய்வமே
 


No comments:

Post a Comment