SWAMY SARANAM...GURUVE SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY & A DIVINE KUMAARA SHASHTI VIRADAM TOO .. MAY THE BLESSINGS & GUIDANCE OF LORD GANESHA RELIEVE YOU FROM ALL THE SINS & NEGATIVE FORCES FROM YOUR LIFE & SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH & HAPPINESS .. " JAI SHREE GANESHAAYA NAMAHA "


 யானை முகத்தான் பொருவிடையான் சேய் அழகார் மான மணிவண்ணன் மாமருகன் 
மேனி முகம் வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் 
என் உள்ளக் கருத்தின் உளன் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் 
அரும்பெரும் வாழ்வு வாழ எமக்கு வெற்றிகளை நல்கும் வித்தகக் கடவுள் விக்னேஷ்வரனின் திருவருளும் .. அருட்கடாக்ஷ்மும் தங்களனைவருக்கும் துணை நிற்பதாக ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
வக்ரதுண்டாய தீமஹி ! 
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
விநாயகரின் அருட்கடாக்ஷ்ம் பெற்ற அன்னை ஒளவை அவரின் திருவருளாலேயே கைபாடும் திறன் பெற்றவர் .. அவரது யோக நூலாம் “விநாயகர் அகவல்”
3ம் பகுதியக் காண்போம் -
“ உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில் 
தெவிட்டா ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் 
இன்புறு கருணையின் இனிதெனக்கருளிக் 
கருவிகள் ஒடுங்கும் கருத்து அறிவித்து 
இருவினை தன்னை அறுத்து இருள் கடிந்து 
தலமொரு நான்கும் தந்தெனக்கு அருளி 
மலமொரு மூன்றினை மயக்கம் அறுத்தே 
ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால் 
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி 
ஆறு ஆதாரத்து அங்குச நிலையும் 
பேறா நிறுத்தி பேச்சுரை அறுத்தே “
பொருள் -
வெளியாய் உபதேசிக்கக் கூடாத உபதேசத்தை எனது காதுகளில் உபதேசித்து .. எவ்வளவு அனுபவித்தாலும் திகட்டாத ஞானத்தை தெளிவாய் எனக்கு காட்டி .. தங்கள் இனிய கருணையினால் மெய் .. வாய் .. கண் .. மூக்கு .. செவி ஆகிய ஐந்து பொறிகளினால் ஆன செயல்களை அடக்குகின்ற வழியினை இனிதாக எனக்கு அருளி .. (ஐந்து பொறிகளும் ஒடுங்கும் கருத்தினை அருளி) நல்வினை .. தீவினை என்ற இரண்டு வினைகளையும் நீக்கி .. அதனால் ஏற்பட்ட மாய இருளை நீக்கி .. 
சாலோகம் 
சாமீபம் 
சாரூபம் 
சாயுச்சியம் 
என்ற நான்கு தலங்களையும் எனக்கு தந்து .. 
ஆணவம் .. கன்மம் .. மாயை என்ற மூன்று மலங்களினால் ஏற்படக்கூடிய மயக்கத்தை அறுத்து ..உடலில் இருக்கும் ஒன்பது துவாரங்களையும் ஐந்து புலன்களையும் ஒரே மந்திரத்தால் அடைக்கும் வழியினைக் காட்டி 
மூலாதாரம் 
சுவாதிட்டானம் 
மணிபூரகம் 
அநாகதம் 
விசுத்தி 
ஆக்ஞை 
என்ற ஆறு ஆதாரங்களில் நிலை நிறுத்தி அதன் பயனாக பேச்சில்லா மோன நிலையை அளித்து ..
பெருமைமிக்க விநாயகர் அகவலை பாராயணம் செய்வோம் ! அனைத்து நலன்களையும் பெறுவோமாக! ஓம் கணேஷ்வராய நமஹ ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 1 person

SWAMY SARANAM....GURUVE SARANAM... WISH YOU ALL A BLESSED TUESDAY & A DIVINE KUMAARA SHASHTI VIRADAM (16TH DAY) MAY LORD GANESHA REMOVE ALL THE OBSTACLES FROM YOUR LIFE & SHOWER YOU WITH LOVE PEACE & HAPPINESS TOO .. " JAI SHREE GANESHAAYA NAMAHA




திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக் காதலால் கூப்புவர் தம் கை “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் 
செவ்வாய்க்கிழமையும் .. விநாயகர் சஷ்டி விரதம் 16ம் நாளுமாகிய இன்று விக்னவிநாயகரைப் போற்றித் துதித்து .. அனைத்து தடை .. தடங்கல்களை நீக்கி .. சகலசௌபாக்கியங்கள் நிறைந்த வாழ்வுதனை தங்களனைவருக்கும் தந்தருளுமாறு பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
வக்ரதுண்டாய தீமஹி ! 
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
ஒளவை மிகச் சிறந்த விநாயக உபாசகியாக விளங்கியவர் .. அவரால் பாடப்பெற்ற 
“விநாயகர் அகவல்” - இரண்டாம் பகுதியினக் காண்போம் ..
“ விநாயகர் அகவல் “ 
சொற்பதங் கடந்த துரிய மெய்ஞான அற்புதம் நின்ற கற்பகக் களிறே ! முப்பழம் நுகரும் மூசிகவாகன இப்பொழுதென்னை ஆட்கொள்ளவேண்டித் தாயாய் எனக்குத் தானெழுந்தருளி மாயாப்பிறவி மயக்கம் அறுத்தே திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப் பொருந்தவே வந்தென்னுளந்தன்னில் புகுந்து குருவடிவாகிக் குவலயந்தன்னில் திருவடி வைத்து திறமிது பொருளென வாடாவகைதான் மகிழ்ந்து எனக்கு அருளி கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே “
பொருள் -
சொற்களால் விபரிக்க முடியாத துரியம் எனப்படும் நிலையில் உண்மையான ஞானமானவனே ! மா .. பலா .. வாழை ஆகிய மூன்று பழங்களையும் விரும்பி உண்பவரே ! மூஞ்சூறினை வாகனமாகக் கொண்டவரே ! இந்தகணமே என்னை ஏற்றுக்கொள்ள வேண்டி தாயைப் போல் தானாக வந்து எனக்கு அருள்புரிபவரே ! திருத்தமானதும் .. முதன்மையானதும் ஐந்து எழுத்துக்களின் ஒலிகளின் சேர்க்கையினால் ஆனதுமான பஞ்சாட்சர மந்திரத்தின் பொருளை தெளிவாக விளங்க என்னுடைய உள்ளத்தில் புகுந்து குருவடிவெடுத்து மிகமேன்மையான தீட்சை முறையான திருவடி தீட்சை மூலம் இந்த பூமியில் உண்மையான நிலையான பொருள் எது என்று உணர்த்தி .. துன்பமில்லாமல் என்றும் இன்பத்துடன் இருக்கும் வழியை மகிழ்ச்சியுடன் எனக்கு அருள் செய்து கோடாயுதத்தால் என்னுடைய பாவ வினைகளை அகற்றி ..
ஸ்ரீகணேஷனைப் போற்றுவோம் ! அளவில்லாத ஆனந்தத்தைத் தந்தருள்வானாக ! 
“ ஓம் ஸ்ரீகணேஷ்வராய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: one or more people

SWAMY SARANAM...POOJA AT HARISHJI RES...











ஹரிஷின் இல்லத்தில் ஹரிஹரனின் அருள்வாசம் கமழ்ந்திருக்க
குருவின் பூஜையில் பாலகன் உயர்ந்து நிற்க
குற்றம் போக்கிட எம்சிரம் தாழ்ந்து நிற்க
நடுவினில் நின்முகம் ஓங்கி நிற்க
நாற்புரமும் வாழைப்பழ மாலை அணைத்துநிற்க!
மேலான தெய்வம் நீயே என்றிருக்க
கீழிறங்கி வருவாயோ என கண் பூத்திருக்க
அந்தரத்தில் ஆடியே உளம் காத்திருக்க
அற்புத தரிசனம் எதிர் பார்த்திருக்க!
உடைபட்ட தேங்காய்கள் உன்பாதம் அணிசூழ்ந்து நிற்க
உடைந்த எனதுள்ளமே உனதருள் எதிர்பார்த்திருக்க
கையில் காப்புடன் வில் அம்பு நீ ஏந்தியிருக்க
பொன்னான  முகத்தில் புன்னகைப் பூத்திருக்க
சின் முத்திரை நானிருக்கேன் என்றிருக்க
விட்டது வினையும் விரைந்தே நின்னருளிருக்க!
சிவா ஹரிஷ் ஆரத்தி உன்னை குளிர்விக்க
சரணம் சரணம் எனும் உயர் நாமம் நிலைதிருக்க
தினம் பாடியே இங்கு உயர்ந்து நாமிருக்க
காலையும் மாலையும் ஐயனை பூஜித்திருக்க
குருவின் ஆசியும் மென்மெலும் அனைவ்ருக்கும் கிடைத்திருக்க
குறைதீர்த்து அருள்புரிவாய் சபரிகிரி ஈசனே……..


SWAMY SARANAM...TODAY ANUMAN JAYANTHI.














SWAMY SASRANAM....GURUVE SARANAM....GOOD MORNING .. WISH YOU ALL A DIVINE FRIDAY & A BLESSED EKADASHI & KUMAARA SHASHTI VIRADAM TOO . MAY THE BLESSINGS OF LORD GANESHAA BRING PROSPERITY & BEST HEALTH TO YOU ALL .. " JAI SHREE GANESHAAYA NAMAHA "


 அப்பமுடன் பொரிகடலை அவலுடனே அருங்கதவி ஒப்பிலா மோதகமும் ஒருமனதாய் ஒப்புவித்து எப்பொழுதும் வணங்கிடவே எனையாள வேண்டுமென அப்பனுக்கு முந்திவரும் அருட்கனியே கணபதியே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் 
மங்களங்கள் யாவும் தங்கள் இல்லம் தோறும் வாரி வழங்கும் வெள்ளிக்கிழமையும் .. பிரதோஷமும் கூடிவருவது சிறப்பாகும் .. விநாயகர் சஷ்டி விரதம் 12ம் நாளாகிய இன்று நம் துன்பங்களுக்கெல்லாம் காரணமான வினைகளின் வினைப்பயனைத் தீர்த்தருளும் விக்னவிநாயகரைத் துதித்து சகல துன்பங்களும் சூரியனைக் கண்ட பனிபோல நீங்கிடவும் .. சுபீட்சமான வாழ்வுதனை தங்களனைவரும் பெற்றிடவும் எல்லாம் வல்ல கணேஷ்வரனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
வக்ரதுண்டாய தீமஹி ! 
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
விநாயகருக்கு பிரியமான மோதகத்தின் (கொழுக்கட்டை) வெளித்தோற்றம் மாவு .. ஆனால் உள் பாகத்தில் வெல்லமும் .. தேங்காயும் கலந்த சுவைமிக்க “ பூரணம் “ என்ற பொருள் இருக்கும் .. 
இதிலும் ஒரு தத்துவம் உள்ளது - 
மேலேயுள்ள மாவுப் பொருள்தான் - அண்டம் 
உள்ளேயிருக்கும் சுவையான பொருள் பரிபூரணமாகிய பரம்பொருளைக் குறித்து நிற்பதாகும் .. அதாவது நமக்குள் இருக்கும் இனிய நற்குணங்களை மாயை மறைக்கின்றது .. இந்த மாயையை உடைத்தால் பூரணத்துவமான நற்குணங்கள் வெளிப்படும் என்பதே இதன் பொருள் ..
விநாயகருக்கு முதன்முதலாக இந்தக் கொழுக்கட்டையை நிவேதனம் செய்தது வசிஷ்டமுனிவருடைய மனைவி அருந்ததியே !
கணேஷனைப் போற்றுவோம் ! சகல நலங்களைப் பெறுவோமாக !
“ ஓம் ஸ்ரீகணேஷ்வராய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 2 people

SWAMY SARANAM.. GURUVE SARANAM






SWAMY SARANAM...GURUVE SARANAM... .. WISH YOU ALL A BLESSED THURSDAY & A DIVINE KUMARA SHASHTI VIRADAM TOO .. MAY LORD GANESHAA RELIEVE YOU FROM ALL THE OBSTACLES & SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH & HAPPINESS .. " JAI SHREE GANESHAAYA NAMAHA "


” வெள்ளம்போல் துன்பம் வியனுலகில் சூழ்ந்திருக்க !
கள்ளம் கபடம் கவர்ந்திழுக்க ! உள்ளம் தளர்ந்திருக்கும் எங்கள் தயக்கத்தை நீக்க வா ! விநாயகனே ! ஆக்கமும் ஊக்கமும் அருள்வாய் கணேஷா “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் குருவருளும் .. இறையருளும் கூடிய இவ் வியாழக்கிழமையில் கொடிய துன்பங்களை வேரறுப்பவரும் . விண்ணுலகிற்கும் .. மண்ணுலகிற்கும் நாயகானம் விக்னேஷ்வரனைப் போற்றித் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிய நன்னாளாக அமைந்திடவும் .. தங்களனைவரது வினைகள் யாவும் யாவும் களையப்பெற்று மனதில் மகிழ்ச்சியும் .. அமைதியும் குடிகொள்ளவும் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
வக்ரதுண்டாய தீமஹி ! 
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
பிள்ளையார் பெருமைகள் :-
தொழில் செய்வோருக்கு பொறுமை மிகவும் அவசியம் பொறுமைக்கு பிள்ளையாரை மிஞ்ச ஒருவரும் கிடையாது . அந்த நம்பிக்கை தேவை .. யானையின் நடையைப் பார்த்தாலேஒருகம்பீரம் தோன்றும் .. யானை நடை யானைநடைதான் .. ஞாபக சக்தி யானைக்கு மிகவும் அதிகம் . அதுபோல் ஒரு வியாபாரிக்கும் ஞாபகசக்தி மிகவும் அவசியம் .. நமக்கும் பிள்ளையாருக்கும் உள்ள தொடர்பு என்றால் நாம் அவருக்குள்ளேயும் அவர் எமக்குள்ளேயும் இருக்கிறார் என்பதுதான் .. கூப்பிட்ட குரலுக்கு ஓடோடிவரும் தெய்வமும் அவரே !
“ கைவேழமுகத்தவனைப் படைத்தார் போலுங் கயாசுரனை அவனாற் கொல்வித்தார் போலும் ” 
( திருநாவுக்கரசர்) 
கயாசுரன் என அப்பர் பெருமானால் குறிக்கப்படுபவன் கஜாமுகாசுரனே ! கஜாமுகாசுரனைத் தொலைப்பதற்காகவே வேழமுகத்துடன் விநாயகப்பெருமானை ஈசன் படைத்தார் என்பது திருநாவுக்கரசரின் திருவாக்கு ..
காலநேரம் கூடிவந்தவேளையில் விநாயகர் கஜாமுகாசுரனை வெற்றி கொண்டார் .. ஆணவம் மிகுந்துத் திரிந்த அவன் விநாயகரின் திருவடி தீட்சையால் மூஷிகமாகி நின்றான் .. அவனையே தன் வாகனமாகக் கொண்டார் .. கஜாமுகாசுரனுடன் போர்புரிந்த போது குருதி பூமியில் படிந்து செங்காடக ஆனது .. (அதனால் ஊர் திருச்செங்காட்டாங்குடி) கஜாமுகாசுர வெற்றிக்குப் பின் திருச்செங்காட்டங்குடியில் சிவலிங்கத்தினை ஸ்தாபித்து கணபதி வழிபட்ட திருக்கோயிலின் பெயர் கணபதீச்சரம் ..
கடுந்தவம் புரிந்த ராவணனுக்கு இலங்கை சென்று சேரும் வரைகீழே வைக்ககூடாது என்ற நிபந்தனையுடன் ஆத்மலிங்கத்தை வழங்கினார் ஈசன் 
அதன்படி இலங்கை திரும்பிக்கொண்டிருந்தான் ராவணன் .. அவன் தனது தலைநகரில் ஆத்மலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்துவிட்டால் அவனை வெல்வது கடினம் என தேவர்கள் அஞ்சினர் .. அவர்களுக்கு அபயம் அளித்தவர் கணபதி ..
சந்தியாவந்தனம் செய்யவேண்டும் என ராவணன் யோசித்தவேளையில் சிறுவனாக அவன் முன் தோன்றினார் விநாயகர் .. ராவணனும் சிறுவனாக வந்த விநாயகரிடம் சற்றுநேரம் வைத்துக்கொ எனக்கூறி ஆத்மலிங்கத்தைத் தந்தான் . விநாயகரும் மூன்றுவரை எண்ணிவிட்டு ஆத்மலிங்கத்தைத் தரையில் வைத்துவிட்டார் .. லிங்கமும் அங்கேயே பிரதிஷ்டை ஆனது ..
விக்கிரகத்தைப் பெயர்த்தெடுக்க எவ்வளவோ முயன்றான் ராவணன் .. ஆனால் இயலவில்லை பசுவின் காதுபோலக் குலைந்தது .. சினமுற்ற அசுரவேந்தன் ஐங்கரனின் தலையில் குட்டினான் விநாயகர் வெற்றிப் புன்னகையுடன் காட்சித்தந்தருளினார் .. அத்தலமே கர்நாடக மாநிலத்திலுள்ள திருகோகர்ணம் .. அங்குள்ள கணபதி தலையிலும் இராவணன் குட்டிய வடுவினைக் காணலாமாம் ..

விநாயகனைப் பணிவோம் ! வினைகள் நீங்கப் பெறுவோம் ! 
“ ஓம் கணேஷ்வராய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .