சீரடி சாய்பாபா கோவில் - முக்கிய தகவல்கள் : SHIRDI SAI BABA TEMPLE - IMPORTANT INFORMATIONS ! ஸ்தல வரலாறு :


மதங்களைக் கடந்து எல்லா தரப்பு மக்களாலும் பூஜிக்கப்படும் மகான் சீரடி சாய்பாபா. பாபா யார்? அவரது பெற்றோர் யார்? அவரது பூர்வீகம் எதுப என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல், கேள்வியின் நாயகனாகவே வாழ்ந்து, அற்புதங்கள் பல நிகழ்த்தினார் பாபா. இன்று, பக்தர்கள் பலரது கண்கண்ட தெய்வமாக போற்றப்படுகிறார்.
சீரடி சாய்பாபா வாழ்ந்த சீரடியில் அமைந்துள்ள அவரது கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மராட்டிய மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் ரகாதா தாலுகாவில் உள்ள சிறிய ஊர்தான் சீரடி. இங்குள்ள சாய்பாபாவின் நினைவிடத்திலேயே அவருக்கான கோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தனது 16-வது சீரடி வந்து சேர்ந்த பாபா, அதன் பிறகு வேறு எங்கேயும் செல்லவில்லை.
அங்குள்ள `கண்டோபா' என்ற மசூதியில் தான் தங்கியிருந்தார். பாபா நிகழ்த்திய முதல் அற்புதம், நானா சாஹேப் என்பவருக்கு குழந்தை பாக்கியம் அருளியதுதான். அதன் பிறகுதான் அவரது புகழ் வேகமாக பரவ ஆரம்பித்தது. இன்று உலகம் முழுக்க அவருக்கு பக்தர்கள் இருக்கிறார்கள்.
அதிசய வேம்பு :
பாபா சீரடியில் மக்களோடு மக்களாக வாழ்ந்தபோது பகல் வேளைகளில் அங்குள்ள வேப்பமரத்தின் அடியில் அமர்ந்திருப்பார். அந்த அதிசய மரம் இன்றும் உள்ளது. இந்த மரத்தின் இலைகள் கசப்பு தன்மைக்கு மாறாக இனிப்பு சுவை கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். பாபா கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் இந்த வேம்பு மரத்தை வலம் வந்து வழிபடுகிறார்கள்.
3 முறை அதை வலம் வரும் பக்தர்கள், அங்கு தரப்படும் தீர்த்தத்தை வாங்கி அருந்துகிறார்கள். தொடர்ந்து கோவிலுக்குள் பாபாவை தரிசிக்க செல்கிறார்கள். கோவிலுக்குள் பாபாவின் நினைவிடம் மீது திருக்குடையின் கீழ் சிம்மாசனத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் தரிசனம் தருகிறார் சாய்பாபா. 5 அடி 5 அங்குலம் உயரத்தில் அவரது உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.
அற்புத கல் :
பாபா வாழ்ந்த காலத்தில் தங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டி அவரை தேடி வரும் பக்தர்களுக்கு அவர் ஒரு கல் மீது அமர்ந்து கொண்டு அருளாசி தருவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஷீலா என்று அழைக்கப்படும் அந்த கல், இன்றும் பாபா கோவிலில் அமைந்துள்ளது. பாபாவின் திருமேனி அமைந்துள்ள இடத்திற்கு அருகே இந்த கல் உள்ளது.
பாபா கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாபாவை தரிசித்த பிறகு, இந்த ஷீலா கல்லை வந்து வழிபடுகிறார்கள். அவ்வாறு வழிபட்டால் பாபாவே தங்களது குறைகளை நீக்கி விடுவார் என்று நம்புகிறார்கள். கோவில் வளாகத்தில் சாய்பாபா பயன்படுத்திய கிணறு உள்ளது. நாழிக் கிணறு என்று அழைக்கப்படும்.
இந்த கிணற்றில் இருந்த தண்ணீர் இரைத்து, தான் உருவாக்கிய நந்தவன பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி வந்தார் பாபா. அவர் தண்ணீர் இரைக்க பயன்படுத்தி ஓலையால் செய்யப்பட்ட பட்டை இன்றும் இங்கு பத்திரப்படுத்தி பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. 
அதிசய நந்தா தீபம் :
இதே வளாகத்தில் சுடர்விட்டு ஒளிர்ந்து கொண்டிருக்கும் நந்தா தீபம் அதிசயமாக கருதப்படுகிறது. பாபா காலத்தில் ஏற்றப்பட்ட இந்த தீபம் இன்று வரையிலும் இடைவிடாது எரிந்து கொண்டிருக்கிறது. இந்த விளக்கிற்கு தினமும் கோவில் பூசாரிகள் எண்ணை ஊற்றுகிறார்கள். விளக்கின் திரியை மட்டும் அவர் மாற்றுவதில்லை.
ஒரே திரியிலேயே ஒளி வீசிக் கொண்டிருக்கிறது இந்த தீபம். கோவிலின் இன்னொரு பகுதியில் அருங்காட்சியகம் உள்ளது. அங்கு பாபா பயன்படுத்திய ஆடை, பல்லக்கு, கோதுமை அரைப்பதற்கு பயன்படுத்திய கல், பாத்திரங்கள் மற்றும் அவரது அரிய புகைப்படங்கள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
சத்ய நாராயண பூஜை :
இங்கு தினமும் காலை 7, 9 மற்றும் முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் சத்திய நாராயண பூஜை புகழ் பெற்றது. திருமணமான 100 தம்பதியர் இதில் கலந்து கொள்வார்கள். இந்த பூஜையில் திருமணம் ஆன தம்பதியர் பங்கேற்றால் குழந்தை பாக்கியம் கிட்டும். தம்பதியர் இடையே பிரச்சினைகள் இருந்தால் அதுவும் சுமூகமாக தீரும் என்பது நம்பிக்கை.
உண்டியல் காணிக்கை :
கோவிலுக்கு வருபவர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்துகிறார்கள். திருப்பதி ஏழுமலையானுக்கு அள்ளிக் கொடுப்பது போல், இங்கு வரும் பக்தர்களும் பாபாவிற்கு காணிக்கையை அள்ளித் தருகிறார்கள். வாரம் தோறும் சனி மற்றும் புதன் கிழமைகளில் இங்குள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு முறையும் 2 கோடி ரூபாய்க்கும் ரொக்கப் பணம் மட்டும் காணிக்கையாக கிடைக்கிறது.
திருவிழா :
குரு பூர்ணிமா, ராமநவமி, விஜய தசமி விழாக்கள் இக்கோவிலில் விசேஷமாக கொண்டாடப்படுகின்றன. குருபூர்ணிமா அன்று சாய்பாபாவின் திருவுருவச் சிலை பல்லக்கில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். தினமும் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடை இரவு 10 மணி வரையிலும் தொடர்ந்து திறந்திருக்கும்.
பாபா கேட்ட வெந்நீர் :
சீரடி சாய்பாபா உருவச்சிலையை கழுவி சுத்தம் செய்வதற்கு தேவையான வெந்நீரை, தமிழ் பேசும் கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஒரு குடும்பத்தினர் கொடுத்து வருகிறார்கள். இவர்கள் தந்த வெந்நீர் கொண்டு சாய்பாபா சிலையை கழுவிய பிறகே, சாதாரண தண்ணீரால் சிலை சுத்தம் செய்யப்பட்டு, பூஜையும் நடத்தப்படுகிறது.
எங்களுக்கு பெற்றோர், சாய்பாபா கோவில் அருகே அமைந்துள்ள சிறிய வீட்டில் வசித்து வந்தனர். ஒருநாள் இரவு, எனது தாயின் கனவில் தோன்றிய பாபா, தனது விக்ரகத்தை சுத்தம் செய்ய வெந்நீர் கொண்டு வருமாறு கூறியுள்ளார்.
அன்று முதல் இப்போது வரை எங்களது குடும்பத்தினரே, பாபாவின் விருப்பப்படி அவரது திருவுருவச் சிலையை சுத்தம் செய்ய வெந்நீர் தந்து வருகிறோம்... என்கிறார். தற்போது மூன்றாவது தலைமுறையாக இக்கோவிலுக்கு வெந்நீர் தந்து வரும் பிச்சு என்கிற ராதாகிருஷ்ணன் அய்யர்.
பக்தர்களுக்கான சிறப்பு வசதிகள் :
குவியும் பக்தர்கள் :
இன்றும் அற்புதங்கள் நிகழ்த்தும் பாபாவைத் தேடி இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து செல்கிறார்கள். சாதாரண நாட்களில் அங்கு தினமும் 50 ஆயிரம் பேர் வருகை தருவதாகவும், விசேஷ நாட்களில் (வியாழன், சனி மற்றும் ஞாயிறு) அவர்களது எண்ணிக்கை ஒரு லட்சத்தை தொடுவதாகவும், விழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதாகவும் சீரடி திருத்தலம் பற்றிய ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
தங்கும் அறைகள் :
இந்தியா முழுவதிலும் இருந்து தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால், அவர்களது வசதிக்காக குறைந்த வாடகை கட்டணத்துடன் கூடிய 1,500 தங்கும் அறைகள் கட்டப்பட்டுள்ளன.
ரெயில் டிக்கெட் முன்பதிவு :
வெளியூர் பயணிகளின் வசதிக்காக கோவில் வளாகத்திலேயே ரெயிலுக்கு முன்பதிவு செய்யும் டிக்கெட் கவுண்டர்களும் இந்திய ரெயில்வே சார்பில் திறக்கப்பட்டுள்ளன.
மிகப்பெரிய உணவுக்கூடம் :
திரண்டு வரும் பக்தர்களின் உணவு தேவையை பூர்த்தி செய்வதற்காக அதிக இடவசதி கொண்ட உணவுக் கூடமும் இக்கோவிலில் செயல்படுகிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய உணவுக்கூடமான இங்கு ஒரே நேரத்தில் 7 ஆயிரம் பேர் சாப்பிடலாம். இங்கு உணவருந்த வரும் பக்தர்களுக்கு 10 ருபாய் கட்டணத்தில் பருப்புக்குழம்பு, சாதம், சப் பாத்தி, பூரி 2 வகை கூட்டு மற்றும் இனிப்புடன் தரமான சாப்பாடு வழங்கப்படுகிறது.

GURUVE SARANAM,,,,,PANVEL BALAGANE POTRI POTRI....SWAMIYE SARANAM IYYAPPA....

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A PLEASANT DAY .. WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU ..
MAY HE FULFILL ALL YOUR WISHES AND SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH .. AND PROSPERITY .. 
" OM NAMO NAARAAYANAAYA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று இப்பிரபஞ்சத்தைக் காத்தருளும் ஸ்ரீமஹாவிஷ்ணுவிற்கு உகந்த நாளுமாகும் 
தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான
நன்னாளாக அமைந்திடவும் .. நினைத்த அனைத்து காரியங்களும் ஈடேறவும் பகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

ஈரேழு உலகங்களையும் .. சகல உயிர்களையும் காக்கும் கடவுள் என்ற சிறப்பு பெற்றவர் மஹாவிஷ்ணுவே ! உலக உயிர்களை காப்பதற்காக தர்மத்தை நிலைநாட்டுவதற்காக
விஷ்ணுபகவான் எடுத்த அவதாரங்கள் பல .. ‘ விஷ்ணு ‘ என்றால் .. ‘ எங்கும் வியாபித்திருப்பவன் ‘ என்று பொருள்படும் .. 

வெண்மைநிறம் கொண்ட பாற்கடலில் வீற்றிருப்பதால் அவர் நாராயணன் என்றும் அழைக்கப்படுகிறார் .. ‘ நாரம் ‘ என்றால் ‘ வெண்ணிற நீர் ‘ என்று பொருள்படும் .. மஹாவிஷ்ணு வைணவ சமுதாயத்தின் நாயகனாக விளங்குகிறார் .. 

அவரை வழிபட்டால் வைகுண்டத்தை அடையலாம் .. பக்திமார்க்கத்தை விரதமாகக் கொண்டது வைணவம் ..
இதில் விக்கிரக ஆராதனைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது .. 

பரிசுத்தமான பக்தியுடன் .. மஹாவிஷ்ணுவிடம் சரணாகதி அடைந்துவிட்டால் .. பக்தனின் அகங்காரம் அழிந்து ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஒன்றிவிடுவது சாத்தியம் .. என்கிறது வைணவம் .. 

பிறவித் துன்பத்தினை துடைக்கவல்ல மஹாவிஷ்ணுவைப் போற்றுவோம் ! துன்பமற்ற வாழ்வினை பெற்றிடுவோமாக ! ஓம் நமோ நாராயணாய! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

PANVEL BALAGAN PATHAM POTRI.....GURUVIN PADHARA VINDHANGALE POTRI POTRI...SWAMIYE SARANAM IYYAPPA...

GOOD MORNING DEAR FRIENDS - WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HE SHOWER YOU WITH GOOD LUCK .. GOOD FORTUNE .. AND HAPPINESS .. " OM MURUGA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று கலியுகவரதனாகிய முருகப்பெருமானுக்கு உகந்த தினமும் ஆகும் .. தங்களனைவரது வல்வினைகளை நீக்கி .. வரும்வினைபோக்கி .. செல்வமும் .. செல்வாக்கும் .. அழகும் .. அறிவும் தந்து தங்கள் வாழ்வை மிளிரச்செய்யும்
வள்ளிமணாளனை போற்றித் துதிக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாஸேநாய தீமஹி ! 
தந்நோ ஷண்முஹ ப்ரசோதயாத் !! 

செவ்வாய்க்கிழமை ஆறுமுகக்கடவுளுக்கு உகந்த நாளாகும் .. கிரகங்களில் அங்காரகன் என்பதே செவ்வாய் என்றழைக்கப்படுகிறது .. அங்காரகனின் அதிபதி முருகப்பெருமானே ! அங்காரகனால் ஏற்படும் அனைத்து கிரகதோஷங்களை நீக்கவேண்டுமானால் செவ்விதழோன் ஆறுமுகனை வழிபாடு செய்தல் நலமே ! 

ஆறுமுகம் உடையவன் ஷண்முகன் .. கணேஷ .. சிவ .. சக்தி .. ஸ்கந்த .. விஷ்ணு .. சூர்ய என்ற ஆதிசங்கரர் வகுத்த ஷண்மதம் ஒன்றிய வடிவினன் .. அதாவது .
மு - என்றால் விஷ்ணு ..
ரு - என்றால் ருத்ரன் ..
கு - என்றால் கமலத்தில் உதித்தவன் .. அதாவது பிரம்மன் 

முருகனின் ஒரு திருநாமம் கோடி நாமங்களுக்குச் சமம் என்பர் .. முருகப்பெருமான் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர் .. ஓம் எனும் பிரணவமந்திரத்தின் பொருளை தந்தைக்கே குருவாக இருந்து உபதேசித்தவர் .. அதே மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை சிறையில் அடைத்தவர் .. சூரணை சம்ஹாரம் செய்து பின்
மஹாவிஷ்ணுவின் பாசத்திற்கு கட்டுப்பட்டவர் .. இவ்வாறு முருகன் மும்மூர்த்திகளாகவும் திகழ்கிறார் .. 

இதனை உணர்த்தும் விதமாக திருச்செந்தூரில் முருகப்பெருமான் ஆவணி .. மாசி மாத திருவிழாவின் போது .. சிவன் .. விஷ்ணு .. பிரம்மா என மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார் .. 

முருகன் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி சிவபெருமானாக காட்சி தருகிறார் .. 
வெண்ணிற ஆடையில் பிரம்மாவின் அம்சமாக அருளுகிறார் .. 
பச்சை வஸ்திரம் சாத்தி பெருமாள் அம்சத்தில் காட்சியளிக்கிறார் .. 

புன்சிரிப்பிலே பன்வேல் பாலகனாக காட்சி அளிக்கிறார்...
 

சொல்லில் அடங்காத் திருப்புகழ் கொண்டவனே ! உள்ளம் ஒன்றி வழிபடுபவர்களுக்கு அருளைப் பொழியும் ஆறுமுகனே ! திக்கற்றவர்களுக்கு துணைநிற்கும் திருமுருகனே ! நம்பினோரைக் கரைசேர்த்திடும் நாயகனே ! நம்வாழ்க்கைப் பயணத்திற்கு வழித்துணையாய் வந்தெம்மை காத்தருள்வாயாக !! 

“ ஓம் றீம் ஐயும் கிலியும் ஔவும் சௌவும் சரவணபவ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

GURUVE SARANAM..SWAMIYE SARANAM IYYAPPA....PANVEL BALAGANE SARANAM SARANAM...

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY & A BLESSED ' SOMVAR ' TOO .. MAY LORD SHIVA'S DIVINE BLESSINGS BRING YOU ETERNAL SUCCESS AND GOOD HEALTH .. WEALTH .. AND HAPPINESS .. 
' OM NAMASHIVAAYA ' .. JAI SHREE BHOLE NATH .. 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று சிவபெருமானுக்கு உகந்த சோமவார விரதமும் அனுஷ்டிக்கப்படுகின்றது .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் சுபீட்சமிக்க நன்னாளாகவும் .. செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறவும் எல்லாம் வல்ல ஈசனைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! 

சிவபெருமானைக் குறித்து நோற்கப்படும் விரதங்களுள் சோமவார விரதமும் ஒன்று .. சந்திரனுக்குரிய நாளான திங்கட்கிழமையில் இது கடைபிடிக்கப்படுகிறது க்ஷயரோகத்தில் துன்புற்று தட்சனால் அழியும்படி சபிக்கப்பட்ட சந்திரன் இந்த விரதத்தைக் கடைபிடித்து மேன்மை பெற்றான் .. 

எனவே ! ஒருமாதத்தில் பதினைந்து நாட்கள் சந்திரனின் கலைகள் குறைந்தும் .. மீதிப்பதினைந்து நாட்களில் அது மீண்டும் வளரவும் பரமன் அருள்புரிந்து சந்திரனை அவரது சிரசில் சூடிக்கொண்டு ’ சந்திரசேகரர் ’ என்ற பெயரையும் பெற்றார் .. 

சந்திரனின் நல்வாழ்வுக்காக அவனுடைய மனைவி ரோகிணியும் அவனுடன் சேர்ந்து இந்தவிரதத்தைக் கடைபிடித்தாள் .. அன்றுமுதல் பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழவும் .. கணவனுக்கு மேன்மைகள் உண்டாகவும் .. நோய் .. நொடிகள் தாக்காதிருக்கவும் இந்த விரதத்தைக் கடைபிடிக்கின்றனர் 

சிவாலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளை தரிசிப்பதுடன் ஸ்ரீசந்திரசேகரமூர்த்திக்கு வெண்மலர்கள் சூட்டி வழிபட்டால் ஆயுள்விருத்தியடைவதுடன் மன அமைதியும் கிட்டும் .. 

சிவனைப் போற்றுவோம் ! அனைத்து நலன்களையும் பெறுவோமாக ! ஓம் நமசிவாய ! வாழ்க வளமுடனும் ! என்றும் நலமுடனும் !

PANVEL BALAGANE POTRI POTRI...GURUVE SARANAM SARANAM.....SWAMIYE SARANAM IYYAPPA...

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BEAUTIFUL AND A BLESSED SUNDAY WITH FULL OF JOY AND PEACE IN YOUR HEART .. MAY LORD SURYA SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH .. AND PROSPERITY .. " JAI SURYA DEV " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று சூரியபகவானுக்கு உகந்த நாளுமாகும் .. தங்களனைவரது பிரச்சினைகள் யாவும் தீர்ந்து சகல சௌபாக்கியங்களும் பெற்றிட சூரியபகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே ! 
பாஸஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ சூர்யஹ் ப்ரசோதயாத் !! 

ஜோதிடசாஸ்திரம் சூரியனை நவக்கிரகநாயகனாகப் போற்றுகிறது .. மனிதவாழ்விற்கும் .. தாழ்விற்கும் .. இன்பத்திற்கும் .. துன்பத்திற்கும் காரணம் கிரகங்களே ! இவற்றிற்கு தலைமை வகிப்பவர் சூரியன் .. பிரபஞ்சத்தையும் கோள்களையும் பரிபாலித்து உலகை இயக்குகிறார் .. 

ஒருவரது ஜாதகத்தில் சூரியபலத்தைப் பொறுத்தே ஆளுமைத்தன்மை .. ஆட்சி .. அதிகாரம் அமையும் .. ஆத்மா .. தந்தை .. தலை .. சரீரம் .. உத்தியோகம் .. வலதுகண் .. வைத்தியம் .. தைரியம் .. புகழ் .. உடல்நலம் ..
ஆகியவற்றிற்கு சூரியனே காரணகர்த்தா .. 

சூரியபகவானே லோகநாயகனான முழுமுதற் கடவுள் என்று சூரியபுராணம் குறிப்பிடுகிறது .. 
சிவனுக்கு - கைலாயம் ..
நாராயணனுக்கு - வைகுண்டம் ..
பிரம்மாவுக்கு - சத்தியலோகம் போல 
சூரியனுக்குரியது - சூரியலோகம் .. 

சூரியன் நம் ஒவ்வொருவருக்கும் கண்கண்ட தெய்வம் .. அதனால் தான் திருவள்ளுவர் தன் முதல் குறளில் 
’ அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முற்றே உலகு ‘
என்று அழைக்கப்படுவது சூரியனே ! இறைவனான பரம்பொருளின் பிரதி அம்சமாக சூரியன் நமக்கு காட்சியளிக்கிறது .. 

சூரியபகவானை தினமும் வணங்கினால் உலகத்தில் சகல சௌபாக்கியங்கள் அனைத்தையும் பெறமுடியும் ..
மனிதர்களின் வாழ்வில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும் ஆற்றல் சூரிய வழிபாட்டிற்கு மட்டுமே உள்ளது .. யார் ஒருவர் சூரியனை மனம் உருகி .. மனம் ஒன்றி வழிபாடு செய்கிறாரோ அவருக்கு வெற்றி .. புகழ் .. உடல்நலம் .. ஆளுமைத்திறன் 
செல்வாக்கு .. மங்களம் போன்ற அனைத்தும் ஒருங்கே வந்துசேரும் .. 

“ ஓம் சூர்யாய நமஹ “ என்று சொல்லி வணங்குங்கள் .. உங்களை வாழ்வின் சுப உச்சத்திற்கே அழைத்துச் செல்லும் .. தினமும் ஆதித்யஹ்ருதயம் பாராயணம் செய்து வரவும் .. வாழ்வில் தடைகள் நீங்கும் .. அனைத்து சிக்கல்களும் இல்லாமல் போகும் .. 

“ ஓம் சூர்யாய நமஹ “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

GURUVE SARANAM...PANVEL BALAGANE SARANAM SARANAM....SWAMIYE SARANAM IYYAPPA...


GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A PLEASANT DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY YOU BE BLESSED WITH GOOD HEALTH .. WEALTH .. AND PROSPERITY .. " OM NAMASHIVAAYA " .. JAI BHOLE NATH .. 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையாகிய இன்று ஈஸ்வரனைத் துதித்து தங்களனைவரது அனைத்து கிரகதோஷங்களும் நீங்கி உடல்நலமும் .. மனநலமும் ஆரோக்கியமாகத் திகழ்ந்திடவும் ..இன்றையநாள் ஓர் இனிய நன்னாளாக அமைந்திடவும் .. ஈஸ்வரனைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! 

ஆதியும் அந்தமும் இல்லாத பெரும்பரம்பொருளாய் விளங்குபவர் சிவபெருமான் .. இவருக்குப் பிறப்பும் இல்லை .. இறப்பும் இல்லை .. சிவவழிபாட்டினைத்தான் சைவம் என்று போற்றுகின்றோம் ..

உலகத்தின் மிகப்பழமையான வழிபாடும் சிவவழிபாடுதான் .. பண்டையகால நாகரீகமாக விளங்கிய ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ .. காலகட்டங்களில் சிவவழிபாடு நடந்திருப்பது அகழ்வாராச்சிகளி ( மூலம் ) அறியமுடிகின்றது .. 

வேதங்கள் போற்றும் வேதநாயகானாக விளங்குபவர் 
சிவனே ! சுபமங்களத்தை அருளுபவர் ..பரம்பொருளாகிய பரமேஸ்வரரின் மூச்சுக்காற்றிலிருந்தும் .. உடுக்கை .. ஒலியிலிருந்தும் சப்தங்கள்தோன்றி வேதமந்திரங்களாகச் சிதறியிருந்ததை வியாசபகவான் ஒருங்கிணைந்து சதுர் (4) வேதங்களாகத் தொகுத்தார் .. ( இருக் ..யஜுர் .. சாமம் அதர்வணம் ) வேதங்களாகத் தொகுத்தார் ..

சிவபெருமானுக்கு பிறப்பில்லாத காரணத்தினால் .. சிற்பசாஸ்திரங்களின்படி சிவபெருமான் அம்சமுள்ள எந்தவொருவடிவத்திற்கும் ( நடராஜர் .. ஸோமஸ்கந்தர் ) 
கொப்பூழ் எனும் தொடர்பு அமைப்பதில்லை .. 

சிவன் எங்கும் நிறைந்திருப்பவர் .. திசைகள் அனைத்திலும் விளங்கும் திகம்பரர ஸர்வலோகங்களிலும் திகழும் சதாசிவர் .. 

சிவபெருமான் பக்தர்களை காக்க எடுப்பது அவஸரம் .. தக்கசமயம்வரும்போது தோன்றி ரட்சித்துவிட்டு மறைந்துவிடுதல் .. 

வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றையும் விரைவில் வழங்குவதில் வல்லமைமிக்க சிவனைப் போற்றி வணங்குவோம் ! வாழ்வில் அனைத்து நலன்களையும் பெறுவோமாக ! ஓம் நமசிவாய ! வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் !


 

PANVEL BALAGANE POTRI POTRI...GURUVE SARANAM...SWAMIYE SARANAM IYYAPPA.....

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HE ELIMINATE ALL NEGATIVE FORCES FROM YOUR LIFE AND SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH AND PROSPERITY .. " OM MURUGA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையும் .. சஷ்டித் திதியும் கூடிவரும் இந்நாளில் ஆலயம் சென்று முருகப்பெருமானை வழிபடுவது சாலச் சிறந்தது .. த
ங்களனைவருக்கும் வேலவன் அருளால் நல் ஆரோக்கியம் .. புகழ் .. செல்வம் . யாவும் பெற்று வளமான வாழ்வு அமைந்திட கந்தப்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வர புத்ராய தீமஹி ! 
தந்நோ சுப்ரமண்யப் ப்ரசோதயாத் !! 

”அமரர் இடர்தீர அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்சே குறி “
அமரர்களாகிய தேவர்களின் துன்பத்தினைப் போக்குவதற்காக அசுரர்களுடன் போர்புரிந்து தேவர்களை 
மீட்டவர் .. முருகப்பெருமான் .. இம்முருகப்பெருமானை முழுமுதற் பொருளாகக் கொண்டு வழிபடும் நெறி 
கௌமாரமாகும் .. 

அழகன் முருகனை வழிபடுவதன் மூலம் அடியவர்களின்
சொல்லொணாத் துன்பம் நீங்கப்படுவதுடன் .. தினமும் நெஞ்சுருகி கந்தசஷ்டி கவசத்தினை பாராயணம் செய்வதன் மூலம் மக்கட்பேறும் .. பதினாறு பேறுகளும் 
( செல்வங்களும் ) கிடைக்கப்பெறுவர் .. 

அனாதியாகவே செம்பில் களிம்பு போன்று ஆன்மாக்கள் ஆணவ மலத்தால் பீடிக்கப்ப்ட்டுள்ளனர் ஆனால் ஆன்மாக்கள் இப்பூவுலகில் பிறந்ததன் நோக்கம் சகல இன்பங்களையும் அறவழியில் அனுபவித்து இறுதியில் பிறப்பு .. இறப்பு அற்ற மோட்ச நிலையில் இறைவனுடன் 
இரண்டறக் கலந்தற்கேயாகும் எனவே முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் தமது கன்மவினைகளை இலகுவில் அடையாலம் என்பது 
அனுபவம் பெற்ற முருக பக்தர்களின் அருள்வாக்கு .. 

“ மைந்தன்வேண்டும் வரமகிழ்ந்தருளும் ஏரகச் செல்வ “ 
என்னும் வரிமுலமும் .. 
“ எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வார் “ என்னும் வரிமூலமும் மனித வாழ்க்கைக்குத் தேவையான பதினாறு பேறுகளையும் தரவல்லது என்பதனையும் அறிய முடிகிறது ..கந்தசஷ்டிகவசம் .. கந்தபுராணம் போன்ற முருகன் பெருமைகளைக் கூறும் நூல்களைப் பாராயணம் செய்தல் மிகச் சிறந்த பயனைத் தரும் .. 

புனிதமான இந்த சஷ்டிதினத்தில் முருகனைப் பிரார்த்தித்து இகபர இன்பங்களைப் பெற்று மங்களவாழ்வு வாழ்வோமாக .. “ ஓம் சரவணபவாய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM...PANVEL BALAGAN PATHAM POTRI POTRI..


GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED 
" PANJAMI " WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS VARAHI .. MAY ' MAA ' PROTECT YOU AGAINST ALL ODDS AND RELIEVE YOU FROM EVIL FORCES TOO .. 
" JAI 'MAA ' VARAHI " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. குருவருளும் .. திருவருளும் கூடிய இந்நன்நாளில் பஞ்சமித் திதியில் அன்னை வராஹியை வழிபடுவது சாலச்சிறந்தது .. தங்களனைவரும் அன்னையின் அருட்கடாக்ஷ்மும் .. சூட்சுமமான பாதுகாப்பையும் பெற்று அனைத்திலும் வெற்றி அடைவீர்களாக .. 

ஓம் ஸ்யாமளாயை வித்மஹே ! 
ஹலஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ வராஹி ப்ரசோதயாத் !! 

மஹாவிஷ்ணு வராஹ அவதாரம் எடுத்தபோது .. அவரது அவதார சக்தியாக உருவானவள் வராஹி .. சப்தகன்னியர்கள் பிராமி .. வைஷ்ணவி .. மஹேஷ்வரி .. கவுமாரி .. வராஹி .. இந்திராணி .. சாமுண்டி இவர்கள் முறையே பிரம்மா .. விஷ்ணு .. சிவன் .. குமரன் .. இந்திரன் .. யமன் .. திருமால் ஆகிய தெய்வங்களின் சக்திகளின் சக்திகள் .. 

வராஹி அம்மனை ஒருமனதோடு தர்மசிந்தனையில் வழிபட்டால் எல்லாவகையிலும் வெற்றிகிட்டும் .. அன்னை ஸ்ரீமஹாவராஹி ஸ்ரீராஜராஜேஸ்வரியின் 
பஞ்சபாணங்களில் இருந்து தோன்றியவள் .. இவளே ஸ்ரீராஜராஜேஸ்வரியின் படைத்தலைவி (சேனாதிபதி) 

ஸ்ரீவராஹி உபாசனை சிறந்த வாக்குவன்மை .. தைரியம் தருவதோடு எதிர்ப்புகள் .. எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் கவசமாகும் .. அபிச்சாரம் எனப்படும் பில்லி சூனியம் .. ஏவல்களை நீக்குவாள் .. இவளை வழிபடுபவர்கள் எந்த மந்திரவாதிக்கும் அஞ்சத்தேவையில்லை .. எதிரிகளின் வாக்கை அவர்கள் செய்யும் தீவினைகளை ஸ்தம்பனம் செய்பவள் .. வழக்குகளில் வெற்றி தருபவள் .. 

மந்திர சாஸ்திரபழமொழி - ” வராஹிக்காரனோடு வாதாடாதே “ 
சொன்னவாக்கு எல்லாம் பொன்னாகும் .. எதிரிகளை வெல்லும் .. இதனால் தான் இவ்வாறு கூறுவர் 
ஸ்ரீவராஹி வாக்குசித்தி அருள்வதில் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியைப்போலவே முதன்மையானவள் .. எனவே இவளை உபாசிப்பவர்கள் யாரையும் சபிக்கக்கூடாது அவை உடனே பலிக்கும் .. ஆனால் அதனால் பாதிப்படைந்தவரின் வேதனைக்கான பாவம் விரைவில் நம்மை வந்தேசேரும் .. அதிலிருந்து அன்னை நம்மைக் காக்கமாட்டாள் .. எனவே எவருக்கும் அழிவு வேண்டி வணங்காமல் எதிரிகளால் துன்பம் ஏற்படாமல் காக்குமாறு வழிபடவேண்டும் .. 

ஸ்ரீவராஹி எலும்பின் அதிதேவதை .. இவளை வணங்க எலும்பு தொடர்பான வியாதிகளும் .. வாத பித்த வியாதிகளும் தீரும் .. 
கருணாசாகரி ஓம் ஸ்ரீமஹாவராஹி ! பத்மபாதம் நமோஸ்துதே !!
வாழ்க வளமுடனும் ..என்றும் நலமுடனும் .. வளர்க அன்னை வராஹி அருளுடனும் .. 
“ ஓம் வராஹி சிவசக்தி ஓம் “

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM.....PANVEL BALAGANE SARANAM SARANAM...

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED CHATHURTHI DAY .. MAY THE BLESSINGS OF LORD GANESH BE WITH YOU ALWAYS AND SHOWER YOU WITH POWER & WISDOM 
" JAI SHREE GANESHA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சதுர்த்தித் திதியாகிய இன்று வேண்டுவன நல்கும் கருணைப் பெருங்கடலான கணபதியைப் பிரார்த்தித்து தாங்கள் விரும்பும் அனைத்தும் பெற்று மகிழ்வுடன் வாழ்ந்திட ஆனைமுகத்தானை வேண்டுகின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
வக்ரதுண்டாய தீமஹி ! 
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !! 

எந்தவொரு காரியத்தைத் தொடங்கினாலும் விநாயகரை வழிபட்டுத்தான் நாம் தொடங்குவது வழக்கம் .. 
“ பிள்ளையார் சுழி “ போட்டு நாம் எழுதும் எழுத்துகளுக்கு நல்லபலன் கிடைக்கிறது .. எனவேதான் “ மூலகணபதி “ 
என்று அவரை நாம் வர்ணிக்கின்றோம் .. 

கணங்களுக்கு எல்லாம் அதிபதியாவதால் அவரை 
“ கணபதி “ என்று சொல்கின்றோம் .. எனவே நாம் 
‘ தேவ ‘ - கணத்தில் பிறந்தவராக இருந்தாலும் ..
‘ மனித ‘ - கணத்தில் பிறந்தவராக இருந்தாலும் .. 
’ அசுர ‘ - கணத்தில் பிறந்தவராக இருந்தாலும் .. 
அனைவரும் வணங்கவேண்டிய தெய்வமாக விளங்குபவர் ஆனைமுகப் பெருமானாகும் ..

அந்த ஆனைமுகனுக்கு உகந்த நாளாகிய சதுர்த்தி திதியில் பிள்ளையாரை வழிபட்டால் எல்லா பாக்கியங்களும் நமக்கு கிடைக்குமென்று சாஸ்திரங்கள் சொல்கின்றன .. மஞ்சள்பொடியிலும் காட்சிதருவார் ..
சாணத்திலும் காட்சிகொடுப்பார் .. வீட்டிலும் வழிபாடு செய்யலாம் .. விக்கிரகம் வைத்திருக்கும் ஆலயத்திற்கும் சென்று வழிபாடு செய்யலாம் .. தும்பிக்கை வைத்திருக்கும் அந்த தெய்வத்தை முழுநம்பிக்கையோடு நாம் வழிபட்டால் இன்பங்கள் அனைத்தும் இல்லம் வந்துசேரும் .. 

வளைந்த துதிக்கையினை உடையவனே ! 
பெரிய தேகத்தைக் கொண்டவனே ! 
பலகோடி சூரியன்கள் ஒன்று சேர்ந்தாற்போல ஒளிச்சுடராகத் திகழ்பவனே ! 
நாம் செய்கின்ற எல்லா நற்செயல்களிலும் தடையேதும் குறுக்கிடாமல் முழுமையாக நிறைவேற உன் அருளை வேண்டுகிறோம் ! காத்தருள்வாயாக ! 

“ ஓம் விக்னேஷ்வராய நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM....PANVEL BALAGANE SARANAM SARANAM....

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HE REMOVE THE DARKNESS FROM THE UNIVERSE AND BLESS YOU WITH GOOD HEALTH .. GOOD FORTUNE .. AND HAPPINESS .. " OM MURUGA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
செவ்வாய்க்கிழமையாகிய இன்று அங்காரகனுக்கே அதிபதியாகிய முருகப்பெருமானுக்கும் உகந்த நாளுமாகும் .. தங்களனைவரும் சகலயோகங்களும் .. வளங்களும் பெற்றிட அங்காரகனையும் .. கந்தப்பெருமானையும் போற்றி வணங்குகின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வரபுத்ராய தீமஹி ! 
தந்நோ சுப்ரமண்யஹ் ப்ரசோதயாத் !! 

செவ்வாய் ஸ்தோத்திரம் - 
சிறப்புறு மணியே ! செவ்வாய்த் தேவே !
குறையிலா தருள்வாய் குணமுடன் வாழ ! 
மங்கள செவ்வாய் மலரடி போற்றி ! 
அங்காரகனே ! அவதிகள் நீக்கு !! 

அக்கினி .. இந்திரன் .. வருணன் .. பிரகஸ்பதி .. ஹிரண்யகர்ப்பம் ஆகியோரின் கூட்டுக்கலவையே முருகன் ஆவான் .. அதர்வண வேதத்தில் முருகன் அக்னியின் புதல்வன் எனவும் சித்திகரிக்கப்பட்டுள்ளான் ..

செவ்வாய்க்குரிய கடவுள் முருகப்பெருமான் எல்லா முருகஸ்தலங்களுக்கும் செவ்வாய் பரிகார ஸ்தலமாகும் 
முருகப்பெருமானை வணங்குவதால் செவ்வாயால் உண்டாகும் பிரச்சினைகள் விலகும் .. 

முருகனைப் பிரார்த்தியுங்கள் வாழ்வில் உங்களுக்கு எந்த கெடுதலும் நிகழாது .. ஒருகவசம்போல நின்று அந்த கந்தனின் வேல் உங்களைக்காக்கும் .. சஷ்டிவிரதம் இருக்கலாம் .. சஷ்டிகவசம் படிக்கலாம் .. கேட்கலாம் .. குழிபறிக்கும் கூட்டம் ஓடிவிடும் .. எதிரி என்று எவரும் இருக்கமாட்டார்கள் .. சொல்லி அடிக்கலாம் நான் ஜெயித்துக்காட்டுவேன் என்று .. 

நம்பிக்கையுடன் முருகனைப் பற்றிக்கொள்ளுங்கள் .. தொல்லை வினைதீர்த்து வைக்கும் கந்தனின் கருணைக்கு நிகரே இல்லை .. நம்பியோரை ஒருபோதும் 
கைவிடமாட்டான் .. முத்தமிழால் வைதாரையும் வாழவைக்கும் கலியுகவரதன் முருகனின் அருள்பெற்று வாழ அவனருளையே நாடி நிற்போமாக ! 
” ஓம் சரவணபவாய நமஹ “ 

செவ்வாய்க்கிரகம் - 
தோஷ நிவர்த்திக்கு நவக்கிரக வழிபாடு அவசியமானது 
நவகிரகங்களில் சூரியனுக்கு அடுத்தபடியாக பராக்கிரமம் 
மிக்கசெயல் ஆற்றல் உள்ள கிரகம் .. மங்களன் என்று அழைக்கப்படும் .. செவ்வாய்க்கிரகம் ஆகும் .. நெருப்புக்கு அதிபதியான செவ்வாய் .. ஆதிக்கம் செலுத்துபவராகவும் 
இருக்கிறார் .. வீரசெயல்புரிதல் .. அதிகாரம் செலுத்துதல் ..
ஆளுமைதிறன் .. தைரியம் .. நம்பிக்கை .. நாணயம் .. நேர்மை .. வளைந்து கொடுக்காததன்மை உயர்பதவி .. தலைமைபொறுப்பு போன்றவற்றை ஒருவருக்கு தரக்கூடியவல்லமை பெற்றது செவ்வாய்க்கிரகம் .. 

அரசாங்க உயர்பதவிக்கு அனுக்கிரகம் செய்வதும் செவ்வாய்தான் .. தோற்றத்தில் கம்பீரம் .. நடையில்மிடுக்கு .. குரலில் அதிகாரத்தை ஏற்படுத்தி தரக்கூடியவர் .. போட்டி பந்தயங்கள் .. உடல்திறன் .. சாகசநிகழ்ச்சிகளில் புகழ்பெற செவ்வாயின் பலன் அவசியம் தேவை .. நம் உடலில் ரத்தத்துக்கு காரகமாக இருப்பவர் செவ்வாய் .. செவ்வாய் பலம் குறைந்தால் உடலில் ரத்தசம்பந்தமான நோய்கள் தோன்றும் ..

இவருக்கு சகோதரகாரகன் என்றபெயரும் உண்டு .. சகோதர சகோதரிகளின் உறவுகளில் ஏற்படும் சிக்கல்களை தீர்மானிக்கிற கிரகமும் இதுதான் .. பூமிகாரகன் என்ற அமைப்பும் உள்ளது .. இவரது தயவு இருந்தால்தான் நிலம் .. தோட்டம் .. வீடு .. பங்களா போன்ற அசையா சொத்துக்களை பெறமுடியும் .. செவ்வாயின் அருள்பார்வை விழுந்தால் ரியல் எஸ்டேட் 
கட்டிட தொழில் .. சிவில் இஞ்ஜினியர் போன்ற தொழில்களில் சிறக்கலாம் .. 

வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

PANVEL BALAGANE SARANAM...GURUVE SARANAM SARANAM....

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY AND A DIVINE SOMVAR DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY HE REMOVE ALL THE OBSTACLES IN YOUR LIFE AND FULFILL ALL YOUR DESIRES TOO .. " OM NAMASHIVAAYA " .. JAI BHOLE NATH .. 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று சிவபெருமானுக்கு உகந்த சோமவார விரதமும் அனுஷ்டிப்பதால் சிவாலயம் சென்று சிவனைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. தங்களனைவரது அனைத்து பிரச்சினைகளும் .. தடைகளும் பனிபோல் நீங்கிடவும் .. இன்றைய நாள் ஓர் வெற்றிகரமான நன்னாளாக அமைந்திடவும் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! 

சோமவாரம் என்பது வாரநாட்களில் திங்கட்கிழமையைக்
குறிப்பது .. சந்திரன் கடைபிடித்து மேன்மை பெற்ற விரதமாகும் .. ஆதலால் திங்கட்கிழமைகளில் இவ்விரத்தத்தை அனுஷ்டிக்கின்றனர் .. 

தட்சனின் சாபத்தால் ஒளிகுன்றிய சந்திரன் முனிவர்களின் ஆலோசனைப்படி சிவபெருமானைக் குறித்து சோமவார விரதத்தை கடைபிடித்துதான் சிவனுக்கு மிகவும் பிரியமுள்ளவன் ஆனான் .. இந்த சோமவார விரதத்தின் பலனால் சந்திரன் பிறைமுடியாய் ஈசனின் தலையில் அமரும் பாக்கியம் பெற்றான் .. என புராணங்கள் போற்றுகின்றன .. 

மேலும் வசிஷ்டமுனிவர் இந்த விரதத்தைக் கடைபிடித்துதான் அருந்ததியை மனைவியாக அடைந்தார்
திருமணங்களில் அம்மி மிதித்து அருந்ததிபார்க்கும் சடங்கு ஒன்று நடைபெறுவதை பார்த்திருப்பீர்கள் .. அந்தக் கற்புக்கரசி அருந்ததிதான் வசிஷ்டர் பத்தினி .. 

சிவபெருமானே கூறிய விரத நியதிகள் - 
சோமவார விரதமிருப்பவர்கள் எனக்குப் பிடித்தவர்கள் என்னிடத்தில் அவர்களுக்கு இடம் கொடுப்பேன் என்று கூறியுள்ளார் .. ஒருசமயம் இந்த விரதத்தை எப்படி கடைபிடிப்பது என்று பார்வதிதேவி சிவனிடம் கேட்டார் ..

அதற்கு சிவன் இந்த விரதகாலத்தில் காலையில் எழுந்து நீராடி தினசரி கடமைகளை முடித்து அன்றாடம் தவறாது சிவபூஜை செய்யும் ஒரு அந்தணரையும் அவரது மனைவியையும் அழைத்து வந்து அவர்களை சிவபார்வதியாக நினைத்து அவர்களுக்கு இயன்ற அளவு தானம் செய்யவேண்டும் .. 

அன்று பகல் முழுவதும் உண்ணாவிரதமிருந்து சிவசிந்தனையுடன் இருக்கவேண்டும் .. வீட்டில் விரிவாக பூஜை செய்ய இயலாதவர்கள் சிவன் கோவிலுக்குச் சென்று அபிஷேகம் செய்வதுடன் அந்தணர்களுக்கும் அடியார்களுக்கும் அன்னதானம் செய்யவேண்டும் என்று கூறினார் .. 

இதன்படியே இன்றும் இவ்விரதம் கடைபிடிக்கப்பெற்று வருகிறது விரதத்தை ஆண்களும் கடைபிடித்து நல்ல வாழ்க்கைத் துணையைப் பெறுவர் .. 

சிவனைப்போற்றி அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுதலை பெற்று வெற்றி காண்போமாக .. வெற்றி நிச்சயம் ! 
“ ஓம் நமசிவாய “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM....

.

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY AND A HAPPIEST DAY IN YOUR LIFE .. MAY LORD SURYA SHOWER YOU EVERY HAPPINESS AND MAY ALL YOUR WISHES COME TRUE .. " JAI SURYA DEV " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று சூரியவழிபாட்டிற்கு உகந்த நாளுமாகும் .. பயன்கருதாது தன் அன்றாடப்பணியைச் செய்துவருபவரான சூரியபகவானைத் துதித்து தங்கள் அனைவரது நல்லாரோக்
கியத்திற்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாகத் திகழ்ந்திடவும் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே ! 
பாஸஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ சூர்யஹ் ப்ரசோதயாத் !! 

இவ்வுலகின் ஜீவனாய் .. ரட்சகனாய் .. வழிநடத்துபவராய் உலகின் கண்களாய் உள்ள சூரியதேவன் இல்லையென்றால் இவ்வுலகு அஸ்தமித்துவிடும் .. உயிர்களின் இயக்கத்திற்கு சூரிய ஆற்றல் வெப்பமாக வெளிச்சமாகத் தேவைப்படுவது உண்மை .. 

யோகக்கலை பயிலும் நாத்திகர்கள்கூட சூரியவணக்கம் என்னும் பயிற்சிகளை மேற்கொள்ளுதல் அந்த சூரியதேவனின் மஹிமையைக் கூறுவதாகவே கொள்ளல் வேண்டும் .. தேவனை சௌரபம் பின்பற்றுபவர்கள் கூறுவது போல மறவாது வணங்குவது நம்கடமை .. 

சூரியபகவான் ஏழு உலகங்களுக்கும் ஒளிதரும் விளக்கு ..
தன்கதிர்களால் வெப்பத்தைத் தணிப்பவர் .. துன்பத்தைத் துடைப்பவர் .. அருணனின் கதிர்களால் சூரிய உதயத்தை உலகம் அறிகிறது .. உலகத்திற்கு முதலானவர் .. மிகவும் உயர்ந்தவர் .. அத்தகைய சூரியபகவானைப் போற்றுவோமாக ! 

தினசரி சிவாலயவழிபாடும் .. சூர்யநமஸ்காரமும் நல்ல பலனைத்தரும் .. தினமும் ஆதித்யஹ்ருதய ஸ்தோத்திரம் படிக்கலாம் .. கோதுமையில் செய்த சப்பாத்தி .. கோதுமை .. ரவை போன்றவற்றை இல்லாதோர் . நோயாளிகளுக்கு கொடுக்கலாம் .. கீரைவகைகளை சேர்த்து பசுவுக்கும் கொடுக்க அனைத்து கிரகதோஷங்களும் நீங்கி வாழ்வில் வெற்றி பெறுவீர்களாக ! 
“ ஓம் அம் நமசிவாய ! சூரியதேவாய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்

SWAMIYE SARANAM IYYAPPA....

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A HAPPY WEEKEND WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY YOU BE BLESSED WITH GOOD HEALTH .. WEALTH &
HAPPINESS .. " OM NAMASHIVAAYA " .. JAI BHOLE NATH .. 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையாகிய இன்று சகல கிரகதோஷங்களும் நீங்கி .. தங்கள் வாழ்வினில் வசந்தமும் நல்லாரோக்கியமும் பெற்றிட எல்லாம் வல்ல ஈஸ்வரனைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! 

கலியுகத்தில் பிறவி எடுத்தோர் உய்யும் மார்க்கத்தைப் பெறுவதற்குத் துணையாக இருப்பது சிவமந்திரமே ! 
“ நமசிவாய “ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும் ஜபித்து வந்தாலே ! வாழ்வில் எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும் .. 

இப்பிறவிக்கு வேண்டியன எல்லாம் தரும் வேண்டத்தக்கது அறிவோய் நீ ! வேண்டமுழுதும் தருவோய் நீ ! எனும் மாணிக்கவாசகரின் திருவாசக வாக்கிற்கு இணங்க நமக்கு வேண்டியது அனைத்தும் அருள்பவர் பெருங்கருணைவடிவான எம்பெருமான் சிவபரம்பொருளே ! 

அப்படிப்பட்ட மூலப்பரம்பொருளின் மூலமந்திரம் முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்த ஸ்ரீகண்டபரமேஸ்வரனை அதிதெய்வமாகக் கொண்ட மிகஎளிமையான மந்திரம் நமசிவாயமே ! அதற்குமேல் மந்திரம் வேறில்லை .. 

’ சிவாய நமஹ ‘ எனச்சொல்லி நம் சிறுமனதை சிதறாமல்
கட்டி சிவனருளே ! எல்லாமென சிந்தையில் வைத்து சிவனே ! உன் அருளுக்காக தவமிருப்போம் ! சிவ சிவா ! 
நம்முள்ளே கலந்தருள்வாயாக ! 
‘ ஓம் நமசிவாய ‘ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SRANAM/// PANVEL PALAGAN PATHAM POTRI POTRI

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HE SHOWER YOU WITH GOOD FORTUNE .. GOOD LIFE AND FILL YOUR HEART WITH LOVE AND MIRTH .. 
" OM MURUGA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையும் .. கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்துவருவதால் ஆலயம் சென்று முருகப்பெருமானின்
பேரருள் பெற்று தாங்கள் நினைத்தகாரியங்கள் அனைத்தும் வெற்றியுடன் நிறைவேற வெற்றிவேலவனைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் கார்த்திகேயாய வித்மஹே ! 
சக்தி ஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ ஸ்கந்த ப்ரசோதயாத் !! 

மாதாமாதம் வரும் கார்த்திகை .. மாதக்கார்த்திகை அல்லது கிருத்திகை விரதம் எனப்படும் .. இதனை 
“ நட்சத்திர விரதம் “ என்பர் .. சரவணப்பொய்கையில் கார்த்திகைப் பெண்கள் முருகனைச் சீரும் சிறப்புடனும் வளர்த்தனர் .. அவர்களைப் போற்றும் வகையில் கார்த்திகை நட்சத்திரத்தன்று அவர்களையும் நினைந்தே இவ்விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது .. முருகனை இந்நாளில் வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகலசெல்வங்களும் பெற்று வாழ்வார்கள் .. 

வேதகாலத்தில் கிருத்திகை நட்சத்திரமே முதலாவதாக இருந்தது .. இது 7 நட்ச்த்திரங்களின் கூட்டமாகும் .. கிருத்திகை நட்சத்திரத்தில் அக்னியை வணங்கவேண்டும்
அது அக்னியின் நட்சத்திரம் என்றும் .. அதுவே நட்சத்திரங்களுக்குள் முகம்போன்றது என்று வேதம் கூறுகிறது .. அதற்கு காரணமும் காட்டுகிறது ..

மற்ற நட்சத்திரங்கள் ஒன்று .. இரண்டு .. மூன்று .. அல்லது நான்கு நட்சத்திரங்களுடைய கூட்டமாகும் .. ஆனால் கிருத்திகையில் மட்டும் நட்சத்திரங்கள் தாராளமாக இருப்பதால் அந்த நட்சத்திரத்தில் தானம் செய்யும் எஜமானனும் .. அவன் வம்ச பரம்பரையினரும் அளவற்ற நன்மைகளை அடைகின்றார்கள் என்பது கருத்து .. 

இவ்வளவு பெருமைவாய்ந்தது கிருத்திகை நட்சத்திரம் என்றாலும் இதற்கு முதன்மை தரப்பட்டதற்கும் ஒருகாரணம் கூறப்படுகிறது .. இந்த கிருத்திகைகள் கிழக்குதிசைகளிலிருந்து விலகிச்செல்வதில்லை .. ஆனால் மற்றவைகளோ கிழக்கிலிருந்து விலகிச்செல்கின்றன .. எனவே வேதகாலத்தில் காலநிர்ணயம் செய்வதற்குக் கிருத்திகை மூலகாரணமாக உள்ளது .. 

இப்புனித நட்சத்திரத்தில் முருகனைப் போற்றி .. 
‘ முருகா ! முருகா ’ என்று மனமுருகி வணங்கினால் நிலையான இன்பம் அளித்து நம்மைக்காப்பான் வேலவனே ! 
“ ஓம் சரவணபவாய நமஹ “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM....

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. குருவருளும் .. திருவருளும் கூடிய இந்நாளிலே பிரதோஷ விரதமும் அனுஷ்டிப்பது அதிவிசேஷமாகும் 
பிரதோஷ விரதத்தின் மஹிமையால் தங்களனைவரது தோஷங்கள் அனைத்தும் நீங்கிடவும் .. வாழ்வில் சகல நலன்களும் பெற்று .. என்றும் இன்புற்று வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! 

பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு .. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக்கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும் .. எத்தனை தோஷங்கள் இருந்தாலும் பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன்மூலம் பயன்பெறலாம் .. 

பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை அனைவரும் வணங்குகின்றனர் .. இந்த இடத்தில் “ அனைவரும் “ என்பது மனிதர்களை மட்டும் குறிக்கவில்லை .. முப்பத்து முக்கோடிதேவர்கள் .. பிரம்மா .. விஷ்ணு .. ஆகியோரையும் குறிக்கும் .. அந்த நேரத்தில் சிவனும் ஷேமநலத்திற்காக வழிபாட்டில் ஈடுபடுவார் என்பது ஐதீகம் .. 

எனவே அனைத்து தரப்பினரும் வழிபாடு செய்யும் நேரத்தில் நாமும் பிரார்த்தனை செய்தால் இதயம் கனிந்து ஈசன் நமக்கு அதிகமான நலன்களை வழங்குவார் என சோதிட நூல்கள் கூறுகின்றன .. 

அதற்கடுத்தபடியாக வாகனத்திற்கு மரியாதை தரக்கூடிய வழிபாடு பிரதோஷம் ஆகும் .. சிவனின் வாகனமான நந்திபகவானுக்கும் மரியாதை செய்யக்கூடியது பிரதோஷம் ஆகும் .. 

நான்குவேதங்கள் .. 64கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர் .. சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்திபகவான் என்று ஐதீகம் கூறுகிறது .. எனவேதான் அவருக்கு அனைத்து வேதங்களும் .. இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது .. மெத்தப்படித்திருந்தாலும் நந்திபகவான் மிகவும் அடக்கமானவர் .. சிவன்கோயில்களில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும் விதமாக இருக்கிறது .. அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அதனை மனதில் அசைபோடும் வகையில் அவர் அமர்ந்திருப்பதுபோல் தோன்றும் .. 

எனவே பிரதோஷபூஜை மேற்கொள்ளும்போது அறிவுவளரும் .. நினைவாற்றல் பெருகும் .. தோஷங்கள் நீங்குகிறது ..எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷகாலத்தில் விரதமிருந்து (மாலை 4.30 - 6.00 மணிவரை ) ஈசனைத்துதித்தால் சிறப்பான பலன்கிட்டும் .. பூர்வஜென்ம வினைகள் .. பெண்ணால் வந்த சாபம் .. உள்ளிட்டவை நீங்கும் .. என விரதமாலை நூல் கூறுகிறது .. 

சிவனை நினை ! சிவனைதுதி ! சிவயோகம் பெறு ! 
“ ஓம் நமசிவாய “ வாழ்க வளமுடனும் என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A DIVINE 
" EKADASI DAY " .. MAY LORD SHIVA RELIEVE YOU FROM ALL SINS AND PAIN AND SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH .. AND HAPPINESS .. " OM NAMASHIVAAYA " .. 
JAI BHOLE NATH ..

 

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM.....

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED 
" EKADASI DAY " WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. MAY HE REMOVE ALL YOUR SINS & SHOWER YOU WITH EVERY HAPPINESS .. " OM NAMO NAARAAYANAAYA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று ஸ்ரீமஹாவிஷ்ணுவிற்கு உகந்த ஏகாதசி விரதமும் அனுஷ்டிப்பதால் ஆலயம் சென்று பகவானைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. தங்களனைவருக்கும் நல்லாரோக்கியமும் .. சகல சம்பத்துக்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ விஷ்ணுபகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் நமோ நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

அனைத்து பாவங்களையும் அழித்து அளவில்லா ( அபரா ) செல்வத்தையும் வழங்குவதால் இந்த ஏகாதசியை 
“ அபரா ஏகாதசி “ என்றழைப்பர் .. இவ்விரதத்தை அனுஷ்டிப்போர் மக்களிடத்தில் பேரும் .. புகழும் பெறுவர் 
அபரா ஏகாதசி விரதத்தின் பிரபாவத்தால் பிரம்மஹத்தி தோஷம் .. பிறரை நிந்திப்பது .. பொய்சாட்சி கூறுதல் .. போலிவைத்தியன் ஆகியோரும் இவ்விரதமஹிமையால் பாபம் நீங்கப்பெறுவர் .. 

“ அபரா “ என்றால் அபாரமான அதாவது அபரிமிதம் என்று அர்த்தம் .. யார் ஒருவர் அபரா ஏகாதசி விரதத்தை விதிப்பூர்வமாக அனுஷ்டிக்கிறாரோ அல்லது அதன் மஹிமையைப் பற்றி படிக்கின்றனரோ அவர் பகவானின் அபரிமித கருணைக்குப் பாத்திரமாவார்கள் .. பக்தி மற்றும் சிரத்தையில் வளர்ச்சியையும் காண்பர் .. இந்த சிரேஷ்டமான நாளன்று பக்திபூர்வத்துடன் நாமும் பகவானை ஆராதித்து விஷ்ணுலோகப் பிராப்தியையும் பெறுவோமாக ! 
“ ஓம் நமோ பகவதே ! வாசுதேவாய நமோ நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..