SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM...

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று செவ்வாய்க்கே அதிபதியாகிய முருகப்பெருமானைப் பிரார்த்தித்து தங்களனைவரது துயர்களைந்து .. வேண்டியன யாவும் வேண்டியபடியே நிறைவேறிடவும் ..வாழ்வில் நிம்மதி .. சந்தோஷம் என்றும் நிலைத்திடவும் வாழ்த்துகிறேன் .. கந்தவேளை வணங்குகின்றேன் ! 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வரபுத்ராய தீமஹி ! 
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !! 

சங்க இலக்கியத்தில் ஆற்றுப்படை நூல்கள் உண்டு .. இது “ஆற்றுப்படுத்துதல் “ என்ற பொருள்கொண்டு விளங்குகிறது .. 

வறுமை நீங்கி .. வளமாய்வாழும் ஒருவர் வறுமையில் உழலுபவரிடம் வள்ளல்கள் இருக்கும் இடத்தைக்கூறி அங்கு சென்றால் வறுமையை ஒழித்துவிடலாம் என்பார் 
இதனால் ஏழையின் மனம் ஆறுதல் அடைகிறது .. இதுபோலவே இறைவனான முருகன் அருள்கூர்ந்து பக்தர்களின் வறுமையை ஒழிப்பான் .. என்ற அர்த்தத்தில் நக்கீரர் பாடினார் .. அதுவே திருமுருகாற்றுப்படை .. 

அனைவரும் கைவிட்டநிலையில் கந்தனிடம் சரண்புகவேண்டும் .. கைவிடப்பட்டோரை காப்பதே கந்தவேளின் கடமை .. இது பொய்யல்ல சத்தியமே ! அருணகிரிநாதர் முதல் பலரை இதற்கு உதாரணமாகக் கூறலாம் .. 

முருகன் உங்களுக்கு அனைத்து நலனையும் அருள்வான் என்பது உறுதி .. ஸ்ரவணத்தின் மஹிமை சரவணனுக்கு தெரியாதா என்ன ..? 

மனம் முழுவதும் அந்த மயில்வாகனனையே நினைத்தபடி கந்தசஷ்டிகவசம் .. கந்தகுருகவசம் .. 
கந்தர் அனுபூதி .. சுப்ரமண்ய புஜங்கம் .. போன்ற தெரிந்த துதிகளைப் பாராயணம் செய்து வேலவனின் அருட்கடாக்ஷ்த்தால் அனைத்து நலன்களையும் பெறுவீர்கள் .. 

“ யாமிருக்க பயமேன் ! அபயம் தருவான் குமரக்கடவுள் “ 
ஓம் சரவணபவாய நமஹ ! வாழ்க வளமுடனும் ! என்றும் நலமுடனும் ! 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY YOU BE BLESSED WITH GOOD HEALTH .. WEALTH .. AND HAPPINESS .. " OM MURUGA "

சுமங்கலி பிரார்த்தனை – மங்கலப் பெண்டுகள்
சுமங்கலிப் பிரார்த்தனை என்பது ஒரு குடும்பத்தில் சுமங்கலியாக இறந்து விட்டப் பெண்களின் ஆசிகளைப் பெற்று, நடக்க இருக்கும் விசேஷங்களுக்கு முன்னதாகச் செய்யப்படுவது.
பொதுவாக இதை, குடும்பத்தில் நடக்கும் கல்யாணம், உபநயனம் (பூணூல் கல்யாணம்), சீமந்தம் போன்ற வைபவங்களுக்கு முன்னர் செய்வது வழக்கம்.
சிலர் இதை ஒவ்வொரு வருடமும் செய்வார்கள்.
சுமங்கலிப்
பிரார்த்தனைக்கு 
நல்ல நாள் மற்றும் கிழமைகள் பார்க்க வேண்டும்.
ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஏற்றதாக இருந்தாலும் அன்றைய தினம் யோகம், திதி போன்றவையும் நல்லதாக இருக்க வேண்டும்.
மாசாமாசம் வரும் கரிநாளாக இருக்கக் கூடாது.
இதில், ஒற்றைப்படை எண்ணிக்கையில், சுமங்கலிப் பெண்களை உட்கார வைத்து சாப்பாடு போட்டு வணங்குவதால், இதற்கு, “மங்கலப் பெண்டுகள்” என்றும் பெயர் உண்டு.
இது தற்காலத்தில் மருவி, “மங்கிலிப் பூண்டு” என்று வழங்கப் படுகிறது.
வீட்டில் உள்ள பெண்களுக்கு, கல்யாணத்திற்கு முன்னரும் , மகனுக்கு செய்யும்போது , வீட்டிற்கு மருமகள் வந்த பிறகும் இதைச் செய்வது வழக்கம்.
சுமங்கலிப் பிரார்த்தனைக்கு, ஒற்றைப் படையில் பெண்களை வைத்து செய்ய வேண்டும்.
வீட்டுப் பெண்கள், அதாவது, இதைச் செய்யும் பெண்ணின் நாத்தனார், 
மகள் போன்ற உறவுகளை முக்கியமாக உட்கார வைக்க வேண்டும்.
மருமகள் உறவில் உள்ளவர்கள் உட்காரக் கூடாது.
இவர்களைத் தவிர, வேறு சுமங்கலிப் பெண்கள் யாராவதும் உட்காரலாம்.
அல்லது 
கன்யா பெண்களாகவும் இருக்கலாம். 
அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் உட்காரலாம்.
ஒரு சிறு வயது (ஏழு அல்லது எட்டு வயது) பெண் குழந்தை இருப்பது நலம்.
இந்த சுமங்கலிப் பிரார்த்தனையும் பிராமணர்களில் மூன்று விதமாக நடைபெறும்.
அதில் எல்லாரும் பின்பற்றும் வழக்கமான முறையில் சுமங்கலி இலையின் படையலைச் சேர்த்து ஐந்து பேர், அல்லது ஒன்பது பேரை அழைத்துச் சாப்பாடு போடுவார்கள்.
இந்த இலை போடுவதும் சில வீடுகளில் இரட்டை இலை போடுவார்கள். 
இரண்டு புடைவைகள் வைப்பார்கள்.
சில வீடுகளில் ஒரே இலை தான். ஒரே புடைவைதான்.
இதெல்லாம் அவரவர் குடும்ப வழக்கத்தைப் பொறுத்தது.
ஆனால் பொதுவாக ஒற்றைப்படையிலேயே சுமங்கலிகளின் எண்ணிக்கை அமையும்.
இன்னொன்று பூவாடைப் பொண்டுகள் என்பது.
இந்தப் பூவாடைப் பொண்டுகள் என்பது இந்தக்காலத்தில் இருக்கிறதா என்பது தெரியவில்லை.
என்றாலும் எங்கள் நண்பர் ஒருவர் வீட்டில் நடந்து வந்தது.
எண்பதுகள் வரையிலும் நடந்ததை அறிவேன்.
இது எப்படி எனில் ஒரு வீட்டில் சுமங்கலியாக இறந்த பெண்மணியைச் சிதையில் வைத்து எரிக்கையில் கட்டி இருந்த புடைவை இடுப்புக்கீழ் பாகம் முழங்கால் வரை எரியாது இருக்குமாம்.
இது எல்லா சுமங்கலியாக இறந்த பெண்களுக்கும் நடப்பது இல்லை.
மிகச் சிலருக்கு மட்டுமே இப்படிப் புடைவை எரியாமல் இருக்குமாம். 
அதை அந்தச் சமயம் அவர்கள் மடிசாராகக் கட்டி இருந்தால் அந்த பாகம் எரியாமல் இருக்குமாம்.
அப்படி எரியாமல் இருக்கும் புடைவையின் பாகத்தை மறுநாள் பால் ஊற்றச் செல்கையில் பார்த்து எடுத்து ஒரு பானையில் போட்டுக் கொண்டு வருவார்களாம்.
அதை வீட்டில் தனியாக ஒரு இடத்தில் வைத்து வழிபட்டு வருவார்கள் என்றும் சில குடும்பங்களில் வழிவழியாக இது தொடர்ந்து வரும் என்றும் சொல்கின்றனர்.
இவர்கள் இறந்த திதியன்று சிராத்தம் முடிந்ததும் மறுநாள் மிகவும் ஆசாரமாக சமையல், மற்ற ஏற்பாடுகள் செய்து, அதே போல் ஆசாரத்தைக் கடைப்பிடிக்கும் ஒருவருக்குப் புடைவை வைத்துக் கொடுப்பார்களாம்.
அதை வாங்கிக் கொள்கிறவர்கள் ஆசாரம் கடைப்பிடிக்கிறவர்களாகத் தான் இருக்க வேண்டுமாம்.
வீட்டில் உள்ளவர்களும் மிகவும் கவனமாகவே ஆசாரம் குறையாமல் எல்லாம் செய்வார்களாம்.
இதில் உட்காரும் பெண்களில் ஒருவருக்காவது புடவை வாங்க வேண்டும். மற்றவருக்கு ப்ளவுஸ் பிட் வைத்துக் கொடுக்கலாம். அவரவர் வசதிப்படி செய்யலாம்.
இல்லாவிட்டால், ப்ளவுஸ் பிட்டும், ஓரளவு பணமும் கூட வைத்துக் கொடுக்கலாம்.
அவரவர் குடும்ப வழக்கப்படி, அதாவது சில குடும்பங்களில், கொடுக்கும் புடவையை, நனைத்து உலர்த்தியும் கட்டிக்கொள்ளச் சொல்வார்கள். இல்லாவிட்டால், புதுப் புடவையை அப்படியேவும் கொடுப்பார்கள். இதைக் குடும்ப வழக்கப்படி செய்ய வேண்டும்.
முதல் நாளே, இவர்களுக்கும், செய்பவர்களுக்குமான புடவைகளை, மடியாக உலர்த்தவும். 
(புதுப் புடவையை அப்படியே கொடுப்பதாக இருந்தாலும், முதலில் அவர்கள் மடிப் புடவை தான் கட்டிக் கொள்ள வேண்டும்).
இவர்களுக்கு, அந்த நாளில், காலையில், நலுங்கு வைத்து,மஞ்சள், குங்குமம், பூ வைத்து, தலையில் எண்ணெய் வைத்து, சீகக்காய் பொடி இவற்றைக் கொடுத்து விடவும்.இதை அந்த வீட்டு மருமகள் தான் செய்ய வேண்டும். அவர் அதற்குப் பிறகுதான் குளிக்க வேண்டும்.
சமையலும் குடும்ப வழக்கப்படி செய்ய வேண்டும்.
பொதுவாக, புடவை நனைத்துக் கொடுப்பதானால், சிரார்த்த சமையலும், அப்படியே புதுப் புடவையைக் கொடுப்பதானால், கல்யாண சமையலும் செய்ய வேண்டும்.
கல்யாண சமையல் என்றால், மோர்க்குழம்பு, பருப்புசிலி, இது போல செய்ய வேண்டும்.
எந்த வகை சமையலிலும்,
கண்டிப்பாக, மஞ்சள் பொங்கல், வாழைக்காய், இவை இரண்டும் இருக்க வேண்டும்.
குளித்து வந்த பெண்டுகளுக்கு, பின் பக்கத்தில் அழைத்துச் சென்று, காலில் மஞ்சள் பூசி, ஜ லம் விட்டு அலம்பி, உள்ளே அழைத்து வர வேண்டும்.
பெண்டுகள் குளித்து விட்டு வந்த பிறகு, செய்பவரின் மாமியார், சுமங்கலியாக இறந்து விட்டிருந்தால், அவரின் படத்தை, பூஜை அறையில் வைத்து, அதற்கு முன், ஒரு மணையில் கோலம் இட்டு, அதில் கொடுக்க வேண்டிய ஒரு புடவை மட்டுமாவது, அப்படியே மடித்து வைக்காமல், கொசுவி, அதனுடன் ஒரு ப்ளவுஸ் பிட் வைத்து, அதன் மீது, நிறைய மஞ்சள், வெற்றிலை, பாக்கு, குங்குமம் (பேக்கட்), பூ, கண்மை,சிறிய கண்ணாடி, தேங்காய், பழம், மருமகளின் சில நகைகள் இவற்றை வைக்க வேண்டும்.
இதற்குப் பக்கத்தில், மற்றவர்களுக்கு வாங்கி உள்ளதை அப்படியே வைக்கலாம்.
அவற்றின் மீதும் தாம்பூலங்களை வைக்கவும்.
பிறகு, அன்றைக்கு செய்துள்ள சமையல் பதார்த்தங்களில்எல்லாவற்றிலும் கொஞ்சம் எடுத்து ஒரு நுனி இலையில் வைத்து, அந்த புடவையின் முன் வைத்து விடவும்.
இதற்குப் பின், அனைவரும் வெளியே சென்று விடவேண்டும். அந்தக் கதவை மூடி விட வேண்டும்.
ஒரு 5 நிமிடம் கழித்து, முதலில் மகன், மருமகள் என்று வயதில் பெரியவரிலிருந்து, கையைத் தட்டிக்கொண்டு உள்ளே செல்ல வேண்டும்.
இதே கிரமத்தில் படத்தின் மீது, பூ, அட்சதை போட்டு, நமஸ்காரம் செய்து விட்டு,பெண்டுகள் சாப்பிட வேண்டும்.
அதன் பிறகு, அவர்களுக்கு உரிய உடைகளைக் கொடுத்து பெரியவர்களாக இருந்தால், வீட்டில் உள்ள மகனும், மருமகளும், அவர்களை நமஸ்காரம் செய்து விட்டு, பிறகு, சாப்பிட வேண்டும்.
பொதுவாக, சுமங்கலிப் பிரார்த்தனையை, புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில் செய்ய வேண்டும்.
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED EKADASI AND A SUCCESSFUL DAY TOO .. MAY LORD VISHNU BLESS YOU AND GUIDE YOU AND REMOVE ALL YOUR SINS AND SORROWS AND MAY YOU BE BLESSED WITH HAPPINESS AND GOOD FORTUNE .. " OM NAMO NAARAAYANAAYA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று ஸ்ரீமஹாவிஷ்ணுவிற்கு உகந்த ஏகாதசி விரதமும் மதியம் முதல் அனுஷ்டிப்பதால் ஆலயம் சென்று பகவானைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. 

வைகாசிமாதம் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசியை 
“ மோகினி ஏகாதசி “ என்றழைப்பர் .. இவ் ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் அனைவரது சகல பாபங்களும் .. துக்கங்களும் அழிக்கப்படுகிறது .. இதன் பிரபாவத்தால் மனிதர்கள் மோகம் என்னும் மாயையின் பிடியிலிருந்தும் விடுதலை பெறுவர் .. 

இவ்விரத மஹாத்மியத்தை கேட்பவரும் .. படிப்பவரும் கூட ஓராயிரம் பசுதானம் செய்த புண்ணியத்திற்கு இணையான புண்ணியத்தையும் பெறுவர் ..

மனிதர்கள் எப்போதும் நற்சிந்தனையுள்ள சான்றோர்கள் .. சாதுக்கள் ஆகியோரிடமும் நட்பு கொண்டிருத்தல் வேண்டும் .. நற்சிந்தனையுள்ளவர்களின் நட்பு மனிதர்களுக்கு நல்ல அறிவை மட்டுமல்லாது வாழ்க்கை லட்சியத்தையும் அடைவதற்கும் உதவும் .. 

கெட்டசகவாசம் அதனால் விளையும் பாபவினைகள் ஒருவரை நரகத்திற்கு மட்டுமே இழுத்துச் செல்லும் .. அத்தைகய நட்பு துன்பம்வரும் காலங்களில் கைவிட்டு விலகிவிடுவதால் அனாதையாக தவிக்க நேரிடுகிறது .. அப்போதும் யாராவது ஓர் சான்றோர் நம்மை கைவிடாது நன்மார்கத்தை கூறி அருளுவர் .. இதுவே இந்த ஏகாதசியின் மஹிமை .. கருணாகரனைப் போற்றுவோம் ! கவலைகள் யாவற்றையும் நீக்குவோமாக ! 
“ ஓம் நமோ நாராயணாய “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

SWAMI SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM....

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SHASHTI WITH THE DIVINE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HE PROTECT YOU FROM ALL EVIL SPIRITS AND SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH .. AND PROSPERITY .. " OM MURUGA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. குருவருளும் .. திருவருளும் கூடிய இந்நன்நாளில் அறியாமை என்னும் அஞ்ஞான இருளை நீக்கி .. மெய்ஞானமாகி மிளிர்கின்ற பரம்பொருளின் முக்திப் பேரருள் நமக்கு அருளும் முருகப்பெருமானை சஷ்டித் திதியாகிய இன்று மனமுருகப் பிரார்த்தித்து தங்களனைவரது வல்வினைபோக்கி .. வரும்வினை அகற்றி காத்தருள்வானாக .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வர புத்ராய தீமஹி ! 
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !! 

ஆணவம் .. கன்மம் .. மாயை ஆகிய மும்மலங்களை மட்டுமன்றி ஆறுவகை எதிரிகளான காமம் .. கோபம் .. பேராசை .. செருக்கு .. மயக்கம் .. தற்பெருமை .. ஆகியவகைகளை அழித்து .. முற்றுணர்வு .. வரம்பிலாற்றல்
தன்வயமுடைமை .. வரம்பின்மை .. இயற்கையுணர்வு .. பேரருள் ஆகிய தேவகுணங்களை நிலைநாட்டுவதால் .. 
“ ஒப்பரும் விரதம் “ என ஸ்கந்தசஷ்டி விரத மஹிமைபற்றிக்
கந்தபுராணம் சிறப்பாகப் புகழ்ந்து பேசுகின்றது ..

சஷ்டியில் விரதமிருந்து அகப் ‘பை ‘ என்னும் உள்ளத்தில் நல்ல எண்ணங்களும் .. பக்தி எனும் பாதையால் எழுந்த அமைதியும் அமையும் .. என்பதும் மறைபொருள்களாகும் .. 

இன்றைய சஷ்டி திதியில் கந்தபுராணம் .. கந்தசஷ்டிகவசம் 
கந்தர் அனுபூதி ஆகிய இறை சிந்தனைகள் நிறைந்த பக்திபாசுரங்களை படித்தோ .. கேட்டோ அனைத்து நலன்களையும் பெறுவீர்களாக .. 

“ அமரர் இடர்தீர அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்சே குறி “ 

” ஓம் சரவணபவாய நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

swamiye saranam iyyappa.....

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. பஞ்சமித் திதியாகிய இன்று (மாலைவரை) வெற்றியைத் தடங்கலின்றி தேடித்தரும் உன்னத தேவதையாகிய அன்னை வராஹியைத் ( வாராஹி ) துதித்து தங்களனைவருக்கும் செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெற வாழ்த்தி வணங்குகின்றேன் ..
ஓம் ஸ்யாமளாய வித்மஹே ! 
ஹலஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ வராஹி ப்ரசோதயாத் !!
இந்த காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்யுங்கள் .. அன்னை உடனே மாற்றம் தருவாள் .. அவளை மனதார நினைத்தாலே வெற்றி அடையும் இலக்கையும் அளித்திடுவாள் ..
வராஹி பக்தர்களுக்கு பக்கத்துணை .. பகைவருக்கோ பெருநெருப்பு .. பயம் .. கவலை .. நடுக்கம் .. எதிர்ப்பு .. பகை
என்று நினைத்து .. நினைத்துக் கலங்குபவர்களுக்கு அபயம் கொடுக்கும் அற்புதம் வராஹி ! 
”வராஹி அம்மன் ” இந்த நாமத்தை கேட்டாலே பலபேருக்கு பயம்வரும் .. அப்படியான ஒரு அம்பிகை நாமம் தான் வராஹி !
வராஹி வழிபாட்டிற்கு முக்கியம் உள்ளத்தூய்மையும் .. சுத்தமும் .. நற்சிந்தனைகளுமே ! தேவகுணமும் .. மிருகபலமும் கொண்டவள் இதனால்தான் உக்கிரதெய்வம் என்றும் சொல்வார்கள் .. தவறுக்கான தண்டனையும் பெரிதாக இருக்கும் .. உண்மையாக இருந்தால் வராஹி தரிசனம் தருவாள் ..
அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகியாக உலகத்திற்கே தாயாக விளங்கும் ஸ்ரீலலிதா திரிபுரசுந்தரியின் அங்குசத்திலிருந்து தோன்றி ஸ்ரீலலிதாவின் மெய்காப்பாளினியாகவும் நால்வகை படைத்தளபதியாகவும் ஸ்ரீபுரத்தை ரட்சிப்பவளாகவும் விளங்குகிறாள் ..மனித உடலும் .. வராஹி (பன்றி) முகமும் கொண்டவள் கோபத்தின் உச்சம் தொடுபவள் ஆனால் அன்பிலே .. ஆதரவிலே .. பெற்ற தாயைப்போன்றவள் ..
வராஹி காட்டிய வழி ---
வராஹி என்னும் வெற்றி தெய்வத்தின் மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருந்த ராஜராஜ சோழன் தஞ்சாவூரில் பெரிய கோயிலைக் கட்டுவத்ற்கு பல இடங்களைக் தேர்வு செய்தும் இறைவனிடம் இருந்து உத்தரவு ஏதும் கிடைக்கப் படவில்லை ..
ஒருநாள் வேட்டைக்குச் சென்றபோது ஓர் இடத்தில் ராஜராஜனுக்கு எதிராக பன்றி ஒன்று எதிர்த்து நின்றது .. அதனைத் துரத்திச் சென்றபோது போக்குக்காட்டி பல இடங்களுக்குச் சென்று ஒருபெரிய திடலில் சுற்றிச் சுற்றிவந்து படுத்துக் கொண்டது வியப்பளித்தது ..
வராஹமாக இருப்பதால் அதனைக் கொல்லாமல் துரத்தியும் அது எழுந்து நின்று தன் காலால் தரையை உதைத்து பூமியைத் தோண்டியது .. அரண்மனை திரும்பிய ராஜராஜன் அரசஜோதிடரை அழைத்து விவரம் கேட்க கோயில்கட்ட இடத்தினை வராஹிதேவி தேர்ந்தெடுத்து கொடுத்திருப்பதைத் தெரிவித்தார் ஜோதிடர் ..
அந்த இடத்தில் பெரியகோயில் கட்டுவதற்கு முன் வெற்றிதேவதை வராஹிக்கு சிறிய தனித்தொரு சந்நிதியை அக்னிமூலைக்கு அருகில் அமைத்து வழிபட்டு .. பின்னர் பணியைத் துவக்கி தேவியின் அருளால் உலகம் போற்றும் தஞ்சைக் கோயிலைக் கட்டினார் ராஜராஜன் .. தற்போதும் ராஜராஜன் கடைபிடித்த முறையிலேயே எந்த ஒரு நிகழ்ச்சியைத் துவங்குவதானாலும் முதலில் வராஹி பூஜை செய்தபின்னரே துவங்கும் வழக்கம் பெரியகோயிலில் உள்ளது ..
நியாயமாக வேண்டுவோருக்கு வேண்டியதை வேண்டியவாறே அருளும் அன்னை வராஹியைப் போற்றுவோம் ! அனைத்திலும் வெற்றி காண்போம் ! வெற்றி நிச்சயம் !!
“ ஓம் ஸ்ரீமஹாவராஹி பத்மபாதம் நமோஸ்துதே “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS ..WISH YOU ALL A SUCCESSFUL DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS VARAAHI .. MAY YOU BE BLESSED TO ACHIEVE THE GOAL OF SUCCESS AND BEST HEALTH AND HAPPINESS .. 
" JAI MAA VARAAHI "

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM...

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED 
' CHATHURTI ' WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD GANESHA .. MAY ALL YOUR PRAYERS BE ANSWERED ON THIS DAY AND SHOWER YOU WITH HAPPINESS .. GOOD FORTUNE .. AND PROSPERITY .. " JAI GANESHA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வேண்டுவன நல்கும் கருணைப் பெருங்கடலாகிய கணபதியை சதுர்த்தித் திதியாகிய இன்று பிரார்த்தித்து தங்களனைவரது அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றும்படி வேண்டுகின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
வக்ரதுண்டாய தீமஹி ! 
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !! 

சதுர்த்தி திதி விநாயகருக்கு உகந்த நாளாகும் ..வளர்பிறை சதுர்த்தியாகிய இன்றைய சதுர்த்தியை ‘ வர சதுர்த்தி ‘ என்றும் .. சுக்லபட்ச சதுர்த்தி என்றும் .. எல்லா வரமும் தரும் சதுர்த்தி என்றும் அழைப்பர் .. இதன் வழிபாடுகளை மதிய நேரத்தில் செய்வது நல்லது .. 

வளர்பிறை சதுர்த்தியில் ( இன்று ) வானில் சந்திரனை பார்ப்பது அல்லது நான்காம் பிறையைப் பார்ப்பது கேடுவிளைவிக்கும் என்பது பெரியோர்வாக்கு .. 

ஸ்ரீகிருஷ்ணர் சதுர்த்தி தினத்தில் வானில் சந்திரனைப் பார்த்ததால் அவப்பெயர் ஏற்பட்டு அதை நீக்கவேண்டி ஸ்ரீவிநாயகருக்கு தேய்பிறை சதுர்த்தியாகிய ‘சங்கடஹர சதுர்த்தியில் ‘ பூஜைசெய்தார் .. விநாயகரும் அவருடைய அபவாதம் நீங்குவதற்கு அனுக்கிரகம் செய்தார் ..

விநாயகர் பிரணவத்தின் வடிவம் .. இதன் திரிந்த வடிவமே பிள்ளையார் சுழி .. பிள்ளையார் சுழியை இட்டாலே ஆணவம் ஒழிந்து இறை உணர்வு உண்டாகும் .. விநாயகரை வழிபடுவோருக்கு வினைகள் ஏதும் வராது .. ஐந்து கரத்தானனை வணங்குவோருக்கு ஞானம் பெருகி நலம்பல
பெருகும் .. 

தூக்கிய துதிக்கையால் காத்திடவேண்டும் தூங்கக் கரிமுகத்து நாயகனே ! விநாயகா ! உண்மை .. ஞானம் .. செல்வம் .. பெருக வேண்டியோர்க்கு வேண்டியவாறு வரங்கள் அருளும் விநாயகனே ! நின் மலர்பாதம் பணிகின்றோம் ! காத்தருள்வாயாக ! 

” ஓம் விக்னேஷ்வராய நமஹ “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

Swamiye SarfanamIyyappa...Panvel Balagan Patham Potri...Guruve Saranam Saranam

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A 
" HAPPY AKSHAYA TRITIYA " MAY GODDESS LAKSHMI SHOWER YOU WITH GOOD LUCK AND SUCCESS WHICH NEVER DIMINISHES
" JAI MAA LAKSHMI " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் அக்ஷ்யதிருதியை நல்வாழ்த்துகளும் உரித்தாகுக .. அன்னை மஹாலக்ஷ்மிக்கு உகந்த திதியாகிய திருதியையும் வருவதால் ஆலயம் சென்று அன்னையை தரிசிப்பது சாலச்சிறந்தது .. தங்களனைவருக்கும் அன்னையின்அருட்கடாக்ஷ்ம் பெற்று செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறவும் வாழ்வில் ஆனந்தமும் .. செல்வமும் பெருகிடவும் வாழ்த்துகிறேன் .. அன்னையை வணங்குகின்றேன் .. 

இன்று பாராயணம் செய்யவேண்டிய அலைமகள் துதி - 
ரத்ன பூபஷண பூஷாட்யாம் சோபிதாம் !
பீதவாசஸா ஈஷத் தாஸ்யாம் !
ப்ரஸந்தாஸ்யாம் சச்வத் ஸுஸ் திரயௌவனாம் !
ஸர்வ சம்பத் ப்ரதாத்ரீம் ! மஹாலக்ஷ்மீம் பஜே சுபாம் !! 

பொருள் -
நட்சத்திரங்கள் .. திதிகள் எல்லாம் நம் அன்றாட வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பன .. சித்திரைமாத அமாவாசைக்குப் பிறகு வரும் திருதியை திதி “ அக்ஷ்யதிருதியை “ என போற்றப்படுகிறது .. இன்று செய்யும் ஜபம் .. ஹோமம் .. தர்மம் எல்லாமே அக்ஷ்யமாக வளர்ந்துகொண்டே போகும் .. தாரித்ரியம் விலகும் என்பது உறுதி .. வாட்டிடும் வறுமை தொலைந்து .. இனிமையும் .. வளமையும் வாழ்வில் கூடும்

“ அக்ஷ்யம் “ என்றால் வளர்வது .. குறையாதது என்று பொருள் .. இந்நாளைப்பற்றி புராணங்களிலும் .. தர்ம சாஸ்திரத்திலும் பல விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளது .. அவை - 
பகவான் கிருஷ்ணரின் பால்யநண்பர் குசேலன் வறுமையில் வாடுகிறார் .. ஒருபிடி அவலை தன்மேலாடையில் முடிந்துகொண்டு கிருஷ்ணரை சந்திக்க புறப்படுகிறார் .. அவரை நன்கு உபசரித்த கிருஷ்ணபகவான் குசேலர் அன்போடு அளித்த அவலை மகிழ்ச்சியுடன் ஏற்று ..
உண்டு .. அந்த அவலின் ருசியில் மகிழ்ந்து
“ அக்ஷ்யம் உண்டாகட்டும் “ என்று வாழ்த்தி வழியனுப்புகிறார் .. அதே கணத்தில் குசேலனின் குடிசைவீடு மாடமாளிகையாக மாறுகிறது .. அஷ்ட ஐஸ்வர்யங்களும் அவரது வீட்டில் குடிகொள்கின்றன .. இந்த அற்புதம் நிகழ்ந்ததும் அக்ஷ்யதிருதியை நாளிலே ! 

கௌரவர் சபையில் திரௌபதி துகிலுரியப்பட்டபோது ஆடைகளை அள்ளி வழங்கி கண்ணன் அருள்பாலித்ததும் இந்நாளே ! என்கிறது வியாசபுராணம் .. 

மஹாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமனின் பிறந்தநாளாகவும் கொண்டாடப்படுகிறது .. சிவனுக்கு காசி அன்னபூரணி அன்னபிக்க்ஷை அளித்தநாளுமாகும் .. ஐஸ்வர்யலக்ஷ்மி அவதரித்தநாள் .. சங்கநிதி .. பத்மநிதியை குபேரன் பெற்றநாள் .. மஹாவிஷ்ணுவின் வலமார்பில் மஹாலக்ஷ்மி இடம்பிடித்தநாள் .. எனபல சிறப்புகளை உடையது இந்நாள் ..

” பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான் “ என்பது ரமணர் வாக்கு .. இல்லாதோர் .. இயலாதோருக்கு அவர்கள் தேவையறிந்து செய்யும் உதவிகள் .. தர்மங்கள் .. பலமடங்கு அதிகமாக உதவி செய்தவருக்கே ஏதாவது ஒருவகையில் திரும்ப கிடைக்கும் 
மேலும் .. மேலும் தானதர்மங்கள் செய்கிற அளவுக்கு வளமான வாழ்வையும் நமக்கு ஏற்படுத்தித் தரும் .. 

ஏழை நோயாளிகளுக்கு ..சாலையோரம் வசிப்பவர்களுக்கு வேஷ்டி ..சேலை.. போர்வை தானம் கொடுக்கலாம் .. ஏழைமாணவர் கல்விக்கு உதவலாம் . ஆதரவற்றோர் .. முதியோர் இல்லங்களுக்குச் சென்று உணவு .. இனிப்பு வழங்கலாம் .. பசு .. நாய் .. பட்சிகளுக்கு உணவளிப்பதன்மூலம் மன அமைதி .. செல்வ வளம் ஏற்படும் .. 

சமீபகாலத்தில்தான் தங்கம்வாங்கும் வழக்கம் உருவானது 
தங்கள் பொருளாதார நிலைக்கு தக்கவாறு வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது சிறப்பு .. குறைந்தபட்சம் உணவு பொருட்களையாவது வாங்குவது சிறப்பு .. அரிசி .. உப்பு .. வாங்கினாலும் சிறப்பானதுதான் .. 

“ மகிழ்வித்து மகிழ் “ என்று சொல்வார்கள் .. எனவே மற்றவர்கள் மகிழும்வகையில் தானதர்மங்கள் செய்து 
பலபுண்ணியங்கள் பெற்று .. ஆயுள் .. ஆரோக்கியம் நிறைந்த வளமான வாழ்வு பெறுவோமாக ! 
“ ஓம் சக்தி ஓம் “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

SWAMIYE SARANAM IYYAPPA....GURUVE SARANAM....

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A DIVINE KARTHIKAI WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HE PROTECT YOU FROM ALL THE OBSTACLES & SHOWER YOU WITH HAPPINESS .. " OM MURUGA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. கார்த்திகை நட்சத்திரமாகிய இன்று முருகப்பெருமானுக்கு உகந்த நாளுமாகும் .. ஆலயம் சென்று ஆறுமுகனைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. தங்களனைவருக்கும் வேண்டிய பொருட்செல்வத்தையும் .. அருட்செல்வத்தையும் .. மற்றும் இகபர சௌபாக்கியங்களையும் தந்தருளுவான் ஆறுமுகனே ! 

ஓம் கார்த்திகேயாய வித்மஹே ! 
சக்திஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ ஸ்கந்த ப்ரசோதயாத் !!


ஞானத்தின் வடிவமான முருகப்பெருமான் ஞானப்பழத்திற்காக அம்மா .. அப்பாவான பார்வதி .. பரமேஸ்வரனிடம் சண்டைபோட்டுக்கொண்டு திருப்பழனிக்குன்றத்தில் நின்றது புராணக்கதை .. 

அன்றுமுதல் குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாக இந்துக்கள் வழிபட்டு வருகிறார்கள் .. 
தடைகள் .. தோஷங்கள் .. கவலைகள் நீங்கி தெய்வத் திருவருள் பெறுவதற்கு விரதங்கள் பெரிதும் துணைபுரிகின்றன .. முறையாக விரதங்கள் மேற்கொள்வதால் நமது உடலும் .. உள்ளமும் தூய்மையாகி
மன அமைதியும் .. சந்தோஷமும் அடைகிறது .. 

“ ஆறுமுக உருவாய்த் தோன்றி .. 
அருளோடு சரவணத்தின் வெறிகமழ் கமலப்போதில் 
வீற்றிருந்து அருளினானே “ 

என்று கந்தபுராணம் சிறப்பித்துக் கூறுகிறது .. மாதந்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரத்தில் கார்த்திகேயனை நினைந்து விரதமிருப்பது சிறப்பாகும் .. 

சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வந்த தீப்பொறிகள் சரவணப் பொய்கையில் 6 குழந்தைகளாக மாற
அந்த குழந்தைகளை சீராட்டி பாராட்டி வளர்க்கும் பொறுப்பு 6 கார்த்திகை பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டது .. பிள்ளைகள் ஆறுபேரையும் காணவந்த அன்னை பார்வதிதேவி ஆறுமுகத்தையும் ஒருமுகமாக்கினாள் .. 

சூரபத்மனை அழித்து தேவர்களையும் மக்களையும் காப்பதற்காக அவதாரம் எடுத்த ஆறுமுகனை வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்களே ! அவர்களைப் போற்றும் வகையிலேயே கிருத்திகை விரதநாள் அனுஷ்டிக்கப்படுகிறது .. நாமும் ஆறுமுகனைப் போற்றுவோம் ! அவனருள் பெறுவோமாக ! 

” ஆறுமுகனை வேண்டி ஆராதனை செய்தால் அருகில் ஓடிவருவான் ! அன்பு பெருகி அருள்புரிவான் அந்தக் கருணை உருவான குருபரனே ! என்றுமே கைவிடாமல் ஆளுவான் நம் இதயக் கமலத்தில் “ ..

“ ஓம் சரவணபவாய நமஹ “ வாழ்க வளமுடனும் .. என்றும் 
நலமுடனும்

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM....

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையாகிய இன்று வேதரூபிணியும் .. ஜகன்மாதாவுமான அன்னை மஹாலக்ஷ்மியைத் துதித்து தங்களனைவருக்கும் வாழ்வில் சகலமங்களங்களும் ஐஸ்வர்யங்களும் பெற்று சுபீட்சமான வாழ்வு வாழ்ந்திட வாழ்த்துகிறேன் .. அன்னையை வணங்குகின்றேன் .. 

ஓம் மஹாலக்ஷ்மீ ச வித்மஹே ! 
விஷ்ணு பத்னீ ச தீமஹி ! 
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத் !! 

நம்முள் மண்டிக்கிடக்கும் தீமை எனும் தாரித்ரியத்தை அழித்து ஞானம் எனும் ஐஸ்வர்யத்தை அருள்பவளே ! அன்னை ஸ்ரீமஹாலக்ஷ்மி தான் ! ஸ்ரீ என்ற சமஸ்கிருதச் சொல்லும் .. திரு என்ற தமிழ்ச் சொல்லும் சோபை .. ஐஸ்வர்யம் .. ஒளி .. கீர்த்தி .. சித்தி .. ஆகியவற்றைக் குறிக்கிறது .. ஸ்ரீ என்ற சொல் முதன்முதலில் வேதங்களில் அழகு .. இனிமை .. ஆகியவற்றைக் குறிப்பிடவே உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது .. ஸ்ரீ என்ற சொல் “ மஹாலக்ஷ்மியையே குறிக்கின்றது “ 

” வித்யா வந்தம் யஷஸ்வந்தம் லக்ஷ்மீ வந்தம் ..
ஜனம் குரு ரூபம் தேஹி ஜயம் தேஹி .. 
யஷோ தேஹி த்விஷோ ஜஹி “ 

பொருள் -
அன்னையின் திருவடிகளைத் தொழுபவர்க்கு வித்தை .. புகழ் .. ஐஸ்வர்யம் .. அனைத்தையும் தரும் அன்னையே ! 
ரூபம் .. வெற்றி .. புகழ் .. ஆகியவற்றையும் .. பகைவர்களை வெல்லும் சக்தியையும் நமக்கு தந்து எமைக் காத்தருள்வாயாக !
ஓம் சக்தி ஓம் ! வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS LAKSHMI .. MAY 'MAA' SHAKTHI ILLUMINATE YOUR LIFE WITH GOOD HEALTH .. WEALTH AND HAPPINESS .. " JAI MAA LAKSHMI "

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A PLEASANT DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SURYA .. MAY YOU BE BLESSED WITH BEST HEALTH .. STRENGTH .. AND ENERGY TOO .. " JAI SURYA DEV " அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வியாழக்கிழமையும் .. குருவருளும் .. திருவருளும் கூடிய இந்நாளில் சூரியபகவானைத் துதித்து அக்னி நட்சத்திரக் காலகட்டம் நடைபெறும் இந்நாட்களில் நம் உடல்நிலை பாதிக்காமலிருக்க காலைவேளையில் பூஜைஅறையில் சூரியனுக்குரிய மாக்கோலத்தை பூஜைப்பலகையில் இட்டு சூரியகாயத்ரி மந்திரத்தை 21 முறை ஜெபிக்கலாம் .. சூரியகாயத்ரி - ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே ! பாஸஹஸ்தாய தீமஹி ! தந்நோ சூர்ய ப்ரசோதயாத் !! அக்னி நட்சத்திரம் - அக்னி நட்சத்திரம் என்ற கோரவெயில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 21 நாட்கள் நம்மை வாட்டி வதைக்கும் .. கத்திரிவெயில் என்று கூறும் சித்திரை மாத முதல் பத்து நாட்களும் .. வைகாசி மாத முதல் பத்து நாட்களும் இருக்கும் .. சிலவருடங்களில் 25 நாட்கள் கூட இருக்கும் என்பர் .. இந்நாட்களில் பூமியும் சூரியனுக்கு மிக அருகே இருக்கும் .. கார்த்திகை நட்சத்திரத்தின் அதிதேவதை அக்னி .. கார்த்திகை நெருப்பைக் கக்கும் நட்சத்திரம் .. எனவே இதை அக்னி நட்சத்திரம் என்கிறோம் .. முன்னொருகாலத்தில் 12 வருடங்கள் இடைவிடாமல் நெய்யூற்றி “ சுவேதகி யாகம் “ செய்தார்கள் .. தொடர்ந்து நெய் உண்டதால் அக்னிதேவன் உடம்பில் சேர்ந்த கொழுப்பைக் குறைக்க ஒரு காட்டை அழித்து அந்த நெருப்பைத் தின்றால் தான் தீரும் .. எனவே அக்னிபகவான் காண்டக வனத்தைத் தேர்ந்தெடுத்ததால் அந்த வனத்தில் உள்ள அரக்கர்களும் .. கொடிய .. சாந்தமான விலங்குகளும் .. தாவரங்களும் தங்களை அக்னிதேவனின் அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என வருணதேவனிடம் முறையிட்டன “ அக்னி உங்களை ஒன்றும் செய்யாமல் நான் காக்கிறேன்” என வருணன் கூறியதையறிந்த அக்னி கிருஷ்ணரிடம் ஓடி நான் காண்டவ வனத்தை அழிக்க முடியாமல் வருணன் கனமழை பொழிகின்றான் என்னைக் காப்பாற்றுங்கள் “ என முறையிட .. திருமால் அர்ச்சுனனைப் பார்க்க அர்ச்சுனன் வான்நோக்கி அம்புகளை எய்து சரக்கூடு கட்டி .. மழைநீர் வானத்தில் விழாமல் தடுத்தான் .. அக்னி வனத்தை எரிக்கலானான் .. அப்போது கண்ணன் அக்னியே ! உனக்கு 21 நாட்கள் அவகாசம் தருகிறேன் அதற்குள் உன்பசியையும் .. பிணியையும் போக்கிக்கொள் என்றார் .. அதன்படி 21நாட்கள் வனத்தை எரித்து விழுங்கிய நாட்கள் தான் “ அக்கினி நட்சத்திர நாட்கள் ” .. அக்கினி நட்சத்திர நாட்களில் முருகனையும் .. சூரியனையும் .. மற்றும் பரணிக்குரிய - துர்க்கை .. ரோஹிணிக்குரிய - பிரம்மன் .. கிருஷ்ணன் .. கார்த்திகையின் அதிதேவதை - அக்னி .. ஆகியோரையும் வழிபட்டு அகமும் புறமும் குளிரும் வண்ணம் தானதருமம் செய்து சுட்டெரிக்கும் அக்னியிலிருந்து நிவாரணம் பெறுவோமாக .. ஓம் சூர்யாய நமஹ ! வாழ்க வளமுடனும் என்றும் நலமுடனும் .

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM....




GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED 
' EKADASI ' MAY LORD VISHNU FULFILL ALL YOUR DESIRES AND FREE YOU FROM ALL SINS AND PROTECT YOU FROM ALL EVILS TOO .. ' OM NAMO NAARAAYANAAYA ' 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்கிழமையாகிய இன்று அனைத்து பாவங்களையும் போக்கும் ‘பாபவிமோசனி ‘ எனும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது .. பகவானைப் பிரார்த்தித்து அனைத்து பாவங்களிலிருந்தும் விடுதலை பெறுவோமாக .. 

ஓம் நமோ நாராயணாய வித்மஹே !
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

பகவான் மஹாவிஷ்ணுவின் பாபவிமோசனி சக்தி அனைத்து கொடிய பாவத்திலிருந்தும் விடுதலை அளித்து காத்து அருளும் .. எவர் ஒருவர் நற்பணி (சத்கர்மா) செய்வதாக சங்கல்பம் செய்துகொண்டு பேராசை .. மோகம் போன்ற தீயசக்திகளின் வசப்பட்டு தன் சங்கல்பத்தை மறக்கிறாரோ அவர் கொடிய நரகத்தில் தண்டனை பெறுவதற்கு தகுதி உடையவராகிறார் .. 

ஆனால் .. பாபவிமோசனி ஏகாதசி விரதம் சகல பாவங்களிலிருந்தும் அனைவருக்கும் விடுதலை அளிப்பதுடன் இறுதியில் ஸ்வர்க்கப் பிராப்தியையும் அளிக்கிறது .. 

இந்தவிரதத்தின் பிரபாவத்தால் அனைத்து பாவங்களும் அழியப் பெறுகின்றன .. ஏகாதசி விரத மஹாத்மியத்தைப் படிப்பதாலும் .. அல்லது கேட்பதாலும் ஓராயிரம் பசுக்களை 
(கோ) தானம் செய்த புண்ணியபலனும் கிட்டுகிறது .. 

விஷ்ணுபகவானைப் போற்றுவோம் ! கொடிய பாவங்கள் அனைத்தும் அழியப்பெற்று நன்மைகள் ஆயிரம் பெறுவோமாக ! ஓம் நமோ பகவதே ! வாசுதேவாய நமஹ!
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM




அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்று சனிக்கிழமையும் .. ஸ்ரவண விரதமும் .. திருவோண நட்சத்திரமும் சேர்ந்து வரும் இந்நாளில் மஹாவிஷ்ணுவை வழிபடுவது சிறந்தது .. 
( திருவோணம் மாலைவரை ) 

தங்களனைவருக்கும் இன்றையநாள் ஓர் இனிய நன்னாளாக அமைந்திடவும் ..மனநலமும் .. உடல்நலமும் நல்ல ஆரோக்கியத்துடன் திகழவும் பகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் நாராயணாய வித்மஹே !
வாஸுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

மாதந்தோறும் திருவோண நட்சத்திர நாளன்று நாராயணனை விரதங்காப்பது ஸ்ரவண விரதமுமாகும் .. 
தனிமனிதனின் உள்ளத்தை தூய்மையாக்கி ஆன்மீக ஆற்றலைத்தரும் இவ்விரதத்தை அனுஷ்டிப்போருக்கு குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏதும் இருக்காது .. வாழ்வில் அமைதி ஏற்படும் .. உறவினர் கொண்ட பகை அகலும் .. பகைவர் நண்பராவர் .. அனைத்து துன்பங்களும் நீங்கும் .. 

108 திவ்யதேசங்களில் ஒன்றான உப்பிலியப்பன் கோயிலில் மாதா மாதம் “ ஸ்ரவணம் “ என்கின்ற விழா பிரசித்தம் .. “ மாம் ஏகம் சரணம் வ்ரஜ “ - என்னை சரணடைந்தால் உன்னை நான் காப்பேன் ! என்ற சரமச்லோகப் பகுதி எம்பெருமானின் வலக் கையில் வைரங்களால் பொறிக்கப்பட்டுள்ளது .. 

” தனக்கு ஒப்பாரும் .. மிக்காரும் இலார் “ என்கின்ற பதத்திலேயே ஒப்பிலா அப்பன் .. ஒப்பிலியப்பன் எனவும் அழைக்கப்படுகிறார் .. 

உப்பிலியப்பனை துதித்து சொல்லவேண்டிய ஸ்லோகம் - 

என்னப்பன் எனக்காயிருளாய் என்னைப் பெற்றவளாய் ! 
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பனென் அப்பனுமாய் மின்னப்பொன்மதிள் சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்தவப்பன் தன் எனாப்பா ரிலப்பன் ! தந்தனன் தனதாள் நிழலே !! 

நாராயணனைப் போற்றுவோம் ! வேண்டியவன யாவும் நிறைவேறும் ! ஓம் நமோ நாராயணாய ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A PLEASANT SATURDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. MAY ALL YOUR PRAYERS BE ANSWERED ON THIS DAY AND MAY YOU BE BLESSED WITH PEACE AND HAPPINESS TOO .. " JAI SHREE NAARAAYANAA "

SWAMIYE SARANAM IYYAPPA....GURUVE SARANAM...

 
 
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையும் .. தேய்பிறை அஷ்டமித் திதியுமாகிய இன்று ஸ்ரீபைரவருக்கு உகந்த நாளுமாகும் .. மாலையில் ஆலயம் சென்று பைரவரை தரிசனம் செய்வது சாலச்சிறந்தது .. ( மாலையில் அஷ்டமித் திதி ஆரம்பமாகின்றது ) 

தங்களனைவரினதும்.. காலத்தினால் தீர்க்கமுடியாத பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து ..உத்தியோகத்தில் மதிப்பும் பதவி உயர்வும் கிட்டவும் .. செய்யும் தொழிலில் மேன்மையும் .. தனலாபமும் பெற்றிடவும் பைரவப் பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் ஷ்வாநத்வஜாய வித்மஹே ! 
சூலஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ பைரவஹ் ப்ரசோதயாத் !! 

பைரவ வழிபாட்டை ஆரம்பிக்கும் முன் .. விநாயகப்பெருமானை வணங்கி எந்த இடையூறும் ஏற்படாமலிருக்க அருள்புரியுமாறு பிரார்த்தித்தபின்பு ஆரம்பிக்கலாம் .. 

அனைத்து கிரகங்களையும் வணங்குவதற்கு பதில் அவற்றை இயக்கும் பைரவரை வணங்குவதன் மூலம் அனைத்து ஜாதக தோஷங்களும் நீங்கும் .. ஆகையால் தினமும் விளக்குபோட முடியாதவர்கள் ஒரேநாளில் தேய்பிறை அஷ்டமி நாளன்றே ஏற்றிவிட்டு வரலாம் .. 

விளக்குபோட ஆரம்பித்ததிலிருந்து மாறுதல்களை உணர்வீர்கள் .. தெளிந்த பக்குவப்பட்ட மனநிலையைப் பெற்று இருப்பீர்கள் .. பைரவரே நம்வாழ்வின் ஒவ்வொரு விநாடியையும் தீர்மானிக்க ஆரம்பிப்பார் .. ஒரு குருவாக இருந்து வழிநடத்துவார் .. சூட்சுமவடிவில் எப்போதும் கூடவே இருப்பார் .. வாழ்க்கை எமை கைவிட்டாலும் எமக்கு காவலாக இருந்து உண்மையை உணரவைப்பவரும் பைரவரே ! 

ஆனால் நம்முடைய கர்மவினை நம்மை பைரவரை வழிபட அனுமதிக்காது .. நிறைய தடைகளை ஏற்படுத்தும் சோம்பேறித்தனத்தை உண்டுபண்ணும் .. நாமே ஏதாவது காரணம் சொல்லி சிறிது நாட்களிலே விட்டுவிடுவோம் .. இந்தமாதிரியான தடைகளையெல்லாம் பொருட்படுத்தாது அலட்சியப்படுத்திவிட்டு .. நாமதான் விடாமுயற்சியாக தொடர்ந்து வழிபாட்டை செய்து வரவேண்டும் .. ஆரம்பத்தில் சிரமமாகத்தானிருக்கும் ..போகப்போக சரியாகிவிடும் .. ஒருநிறைவான வாழ்க்கை அமைந்தபின்னும் வாழ்நாள்முழுவதும் தொடர்ந்து செய்துவாருங்கள் அனைத்து அஷ்டமாசித்திகளையும் பெறுவீர்களாக .. 

“ ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

GOOD MORNING DEAR FRIENDS ..WISH YOU ALL A DIVINE ASHTAMI AND MAY LORD BHAIRAVA BLESS YOU AND FREE YOU FROM ALL DEBTS .. ILLNESS .. AND FEAR .. MAY HE SHOWER YOU WITH HAPPINESS AND PROSPERITY TOO .. 
" JAI BHAIRAVAAYA NAMAHA "

SWAMI SARANAM..GURUVE SARANAM

 
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வியாழக்கிழமையாகிய இன்று குருவருளும் .. திருவருளும் கூடிவரும் இந்நாளில் சஷ்டித் திதியும் சேர்ந்து வருவது விசேஷமாகும் ..ஆலயம் சென்று முருகப்பெருமானையும் தரிசிப்பது சாலச்சிறந்தது .. 

வேலவன் அருளால் தங்களனைவருக்கும் நல் ஆரோக்கியம் .. ஆயுள் .. புகழ் .. செல்வம் .. என்று நீங்கள் வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடும் .. நிம்மதி .. சந்தோஷம் .. உற்சாகம் வாழ்வில் நிறைந்திடவும் ஷண்முகனைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாஸேநாய தீமஹி ! 
தந்நோ ஷண்முக ப்ரசோதயாத் !! 

முருகனுக்கு கிழமை .. நட்சத்திரம் .. திதி ஆகிய மூன்றிலும் விரதங்கள் இருக்கின்றன .. 
கிழமைகளில் - செவ்வாய் 
நட்சத்திரங்களில் - கிருத்திகை 
திதியில் - சஷ்டி .. ஆகியவை முருகனுக்கு உகந்தவை .. இந்நாட்களில் விரதமிருந்து முருகனை வழிபடுவது சகலதடைகளையும் நீக்கும் என்பது ஆன்றோர் வாக்கு .. 

கந்தசஷ்டி கவசம் .. கந்தகுரு கவசம் .. ஷண்முக கவசம் .. திருப்புகழ் .. கந்தர் கலிவெண்பா போன்றவற்றையும் பாராயணம் செய்தோ கேட்டோ கந்தனின் அருளைப் பூரணமாகப் பெறுவோமாக .. 

எங்கள் எண்ணம் .. சொல் .. செயலுக்கு எட்டாத பரம்பொருளே ! ஆறுமுகப்பெருமானே ! உனது திருவடிகளை சரணடையும் பாக்கியத்தைத் தந்து எம்மைக் காத்தருள்வாயாக !
“ ஓம் சரவணபவாய நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED 
" SASHTI " WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HE SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH .. AND PROSPERITY .. " OM MURUGA "

SWAMI SARANAM...GURUVE SARANAM




GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. MAY YOU BE BLESSED WITH GOOD HEALTH .. STRENGTH .. AND .. HAPPINESS .. " OM NAMO NAARAAYANAAYA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று இப்பிரபஞ்சத்தைக் காத்தருளும்
ஸ்ரீமஹாவிஷ்ணுவைத் துதித்து பகவானின் திருவருளும் ..
அருட்கடாக்ஷ்மும் தங்களனைவருக்கும் கிடைக்கப்பெற்று 
குடும்பத்தில் சுபீட்சமும் .. நல்லாரோக்கியமும் .. நிலவிட பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் நாராயணாய வித்மஹே !
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

பகவானின் நாமமே நம்மை ரக்ஷிக்கும் .. அவனைவிட நம்மிடம் அதிகப்பரிவுடையது அவன்நாமமே ! திரௌபதிக்கு ஆடைசுரந்ததே உன்னாலன்றி வேறுயாரால் அது சாத்தியமாகும் ..? என்று கேட்டால் பகவான் சொல்கிறார் “ நானில்லை ! என் கோவிந்த நாமமே ! அவளை ரக்ஷித்தது என .. 

நாம் எழுந்திருக்கும்போது .. துயிலெழும்போது ..
ஹரிர் ஹரி ! ஹரிர் ஹரி ! என்று 7 முறை சொல்லவேண்டும் .. உரக்க சொல்லனுமா ..? மனசுக்குள்ளே சொன்னால் போதாதா..? மனசுக்குள்ளே சொன்னால் பலன் நமக்கு மட்டும்தான் .. மற்றவர்கள் கேட்கும்படி சொன்னால் அதைக்கேட்டபடி எழுந்திருப்பார்கள் .. பரோபரகரமாகவும் இருக்கும் ..

சொல்கின்ற அந்த நேரத்திலே மனசு அளவுகடந்த பக்தியிலே நிரம்பியிருக்கனும் .. “ சொல்லிப்பார்ப்போமே பலனிருக்கிறதாவென்று “ பரீட்சார்த்தமாகச் சொல்லக்கூடாது .. காரணம் அவனது நாமங்கள் சர்வ உத்தமமானவை .. “ சர்வோத்தம்ஸ்ய கிருபையா “ சர்வ உத்தமமான பகவானுடைய நாமங்களை நம்மை உச்சரிக்கவைப்பதும் அவனுடைய கிருபைதான் .. கருணைதான் .. 

விஷ்ணு சகஸ்ரநாமத்தை யார் தினமும் கேட்கின்றனரோ .. இதனைக்கொண்டு ஆண்டவனைத் துதிக்கின்றனரோ .. அவர்கள் இம்மையிலும் .. மறுமையிலும் .. சிறிதும் கெடுதலை அடையமாட்டார்கள் .. 

உள்ளத்தூய்மையும் .. புறத்தூய்மையும் கொண்டு பக்தியுடன் புருஷோத்மனை ஆயிரம் நாமங்களால் துதிப்பவர்கள் .. நோயால் துன்புறுபவர்கள் அந்நோயிலிருந்து விடுபடுகின்றனர் .. ஆபத்தில் சிக்கியவன் மீள்கிறான் .. கடப்பதற்கு இயலாத இடையூறுகளை எளிதில் கடந்துவிடுகிறான் .. 

சிரத்தையும் பக்தியும் கொண்டவனாக இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்பவன் .. பொறுமை .. செல்வம் .. மன உறுதி .. நினைவாற்றல் ..புகழ் இவற்றைப் பெறுவானாக .. 

நாமும் நாராயணாய ! நாராயணாய ! நாராயணாய எனச்சொல்வோமே ! பலனாயிரம் பெறுவோமே ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்

SWAMIYE SARANAM...GURUVE SARANAM SARANAM


GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY YOU BE BLESSED WITH GOOD HEALTH .. PEACE AND HAPPINESS .. " OM MURUGA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையும் .. செவ்வாய்க்கே அதிபதியாகிய முருகப்பெருமானைப் பிரார்த்தித்து தங்களனைவருக்கும் மகிழ்ச்சிகரமான வாழ்வும் .. தன்னிகரில்லாதளவு புகழும் .. 
மாபெரும் சக்தியையும் .. பொங்கிவரும் உள்ளத்தில் தன்னம்பிக்கையையும் தந்தருளுமாறு வேண்டுகின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வரபுத்ராய தீமஹி ! 
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !! 

செவ்வாய் என்பது சிவந்தவாய் என்பதின் சுருக்கம் .. இந்த கிரகத்தின் நிறம் சிவப்பு அதனால் ரிஷிகளால் அந்தக்காலத்தில் இப்பெயர் சூட்டப்பட்டது .. 

நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபடும் பொழுது செவ்வாய்க்கிரகம் மற்றும் அதனை சம்மந்தப்பட்ட தெய்வங்களுக்கு பூஜைசெய்யப்படல் வேண்டும் .. 

முருகனை வணங்குவதால் நிலம் ..சம்மந்தப்பட்ட தொழிலில் வரும் பிரச்சினைகளை சீர்செய்வதோடு முருகன் மிகப்பெரிய அளவில் விரிவு செய்தருளுவான் .. 

சரவணமந்திராக்ஷ் ஸ்தோத்திரம் - 
பவாய பர்காய பவாத்மஜாய 
பஸ்மாய மாநாத்புர விக்ரஹாய 
பக்தேஷ்ட காமப்ரத கல்பகாய 
பகாரரூபாய நமோ குஹாய !! 

பொருள் -
மங்களவடிவினனும் .. பாவங்களைப் போக்குகிறவனும் .. விபூதியைத் தரித்த பேரழகுத் திருவுரு கொண்டவனும் .. பக்தர்கள் கோரியவற்றை நிறைவேற்றும் கற்பக விருட்சம் போன்றவனும் .. ‘ ப ‘ என்ற ( சரவணபவ ) அட்சரத்தின் வடிவாய்த் திகழ்பவருமான குமரப் பெருமானே ! நமஸ்காரம் ! எமை என்றும் காத்தருள்வாயாக !! 

முருகப்பெருமானைப் போற்றுவோம் ! வாழ்வில் சகலநலன்களையும் பெறுவோமாக ! 
“ ஓம் சரவணபவாய நமஹ “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..